தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து சாவு

இவரது மனைவியும் மற்றொரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் அருகே வள்ளுவர் மேடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது38). இவரது மனைவி நிர்மலா. இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மணிகண்டன் அங்குள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவியும் மற்றொரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. நேற்று மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். நிர்மலா வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் நிர்மலாவுக்கு போன் செய்து உனது கணவர் வீட்டின் அருகே மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்மலா உடனடியாக வீட்டுக்கு வந்தார்.

பின்னர் மயங்கி கிடந்த கணவரை மீட்டு கிருமாம் பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து அவரது மனைவி நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com