search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு பள்ளி மாணவி திடீர் மாயம்
    X

    10-ம் வகுப்பு பள்ளி மாணவி திடீர் மாயம்

    • வீட்டில் மாணவி இன்று காலை 7.45 பள்ளிக்குச் செல்வதற்காக தயாராக இருந்தார்.
    • போலீசாரின் விசாரணையில் அந்த மாணவி வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    வீட்டில் மாணவி இன்று காலை 7.45 பள்ளிக்குச் செல்வதற்காக தயாராக இருந்தார். அப்போது அவருடைய தாய் வெளியே சென்ற சிறிது நேரத்தில் பின்னர் வீடு திரும்பியபோது பையை வீட்டில் வைத்துவிட்டு மாணவி மாயமானது தெரியவந்தது.

    இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் இது குறித்து உடனடியாக கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.போலீசாரின் விசாரணையில் அந்த மாணவி வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதாக வீட்டில் மாணவி கூறியுள்ளார். ஆனால் அவர் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இன்று பள்ளியில் ரேங்க் கார்டு வழங்க உள்ளதால் எங்கே தன்னைப் பற்றிய உண்மை தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாக மாணவி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த மாணவியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×