தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

இவருக்கு கடந்த3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:-

புதுவை தேங்காய்திட்டு திலகர் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமரன்(வயது26). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். முத்து குமரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் இவருக்கு அல்சர் நோயும் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை முத்துகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது மனைவி ஐஸ்வர்யா உறவினர்கள் உதவியுடன் கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முத்துகுமரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி ஐஸ்வர்யா கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com