search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரியில் விஷம் குடித்த பெண் மரணம்
    X

    தருமபுரியில் விஷம் குடித்த பெண் மரணம்

    தருமபுரியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் இண்டூரைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி கவுசல்யா (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கவுசல்யாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இதனால் மனவேதனை அடைந்த கவுசல்யா கடந்த 16-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  

    இந்நிலையில் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கவுசல்யா நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×