search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணத்தில் நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை அடித்து கொல்ல முயன்ற கணவன்
    X

    மரக்காணத்தில் நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை அடித்து கொல்ல முயன்ற கணவன்

    • ரமணி கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்த மகனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
    • மனைவி என்றும் கூட பாராமல் இரும்பு ராடால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரமணி (43)/ இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுதாகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ரமணி கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்த மகனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த சுதாகர், ரமணியிடம் தகராறில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் வாய்தகராறு அடிதடி சண்டையாக மாறியது. ரமணி மீது சந்தேக மோகத்தால் சுதாகர் மனைவி என்றும் கூட பாராமல் இரும்பு ராடால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ரமணி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து ரமணியை மீட்டு மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு ரமணிக்கு மோசமான நிலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரமணி மரக்காணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவர் சுதாகரை கைது செய்தனர்.

    Next Story
    ×