search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடிய"

    • மனோஜ்(20). இவர் 4 நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
    • வீட்டுக்குள் வைத்திருந்த 3 லேப்டாப்புகள், 1 ஆப்பிள் கைக்கடிகாரம் உட்பட 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள வள்ளல் தெரு பகுதியை சேர்ந்த சரவணன் மகன் மனோஜ்(20). இவர் 4 நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    நண்பர்கள் வெளியில் செல்லும்போது வீட்டை பூட்டி வீட்டுக்கு அருகிலேயே ஒரு மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். கடந்த 26-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சாவியை அந்த பகுதியில் வைத்து விட்டு சென்றவர்கள் மீண்டும் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் வைத்திருந்த 3 லேப்டாப்புகள், 1 ஆப்பிள் கைக்கடிகாரம் உட்பட 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மனோஜ் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக நாமக்கல் மாவட்டம் கஸ்பா திருமலைபட்டி தெரு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (37) என்பவரை இன்று காலை கைது செய்தனர். அவரிடமிருந்து லேப்டாப் மற்றும் கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட பெரியசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது.
    • இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.

    சேலம்:

    சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.

    இதுகுறித்து அந்த பிரிவின் மேலாளர் சரவணன் (39) என்பவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் டாலர் வைக்கப்பட்டு இருந்த பிரிவில் வேலை பார்க்கும் சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) என்பவர் டாலரை திருடியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்க டாலரை 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு நகை அடமான கடையில் அடமானம் வைத்தது தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட கார்த்திகை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

      நங்கவள்ளி:

      மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஐயம்புதூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், சார்ஜர் என 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ெபாருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

      2 பேர் கைது

      இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாங்காடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகை யில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட தில் அவர்கள் கொளத்தூர் பாலவாடியை சேர்ந்த விஜய் (26), அவரது நண்பர் வெங்கடேஷ் (23) என்பதும் இவர்கள் இரு வரும் தனி யார் கல்லூரியில் கணினி உள்ளிட்ட சாதனங்களை திருடியதும் தெரியவந்தது.

      இவர்களிடமிருந்து கல்லூரியில் திருடப்பட்ட 3 சிபியூ, 4 மானிடர், 1 எல்.இ. டி, டிவி, 1 லேட்டாப், 4 சார்ஜர் ஆகியவற்றை பறி முதல் செய்த போலீசார் 2 ேபரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்த னர். இதில் விஜய் என்பவர் மீது ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வழக்கு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

      • பணத்தை கல்லா பெட்டியில் வைத்து விட்டு செல்லுமாறு கடைக்காரர் வாலிபர்களிடம் கூறினார்.
      • பணத்தை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

      கோவை,

      கோவை அருகே உள்ள பூலுவபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 54). இவர் சிறுவாணி மெயின் ரோட்டில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

      தினசரி இவர் அதிகாலை 2 மணிக்கு டீ கடையை திறப்பது வழக்கம். இதேபோல சம்பவத்தன்று கடையை திறந்து வேலைகளை செய்து கொண்டு இருந்தார். 3 மணியளவில் 3 வாலிபர்கள் டீ குடிப்பதற்காக வந்தனர். அவர்களுக்கு மாரியப்பன் டீ போட்டு கொடுத்தார். பின்னர் போண்டா போட்டு கொண்டு இருந்தார்.

      டீ யை குடித்த 3 பேர் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டனர். அதற்கு மாரியப்பன் ரூ.30 என்றார். அப்போது அவர் போண்டா போட்டு கொண்டு இருந்ததால் பணத்தை நீங்களே கல்லா பெட்டியில் வைத்து விட்டு செல்லுமாறு கூறினார்.

      அவர்கள் சென்ற பின்னர் மாரியப்பன் பார்த்த போது அந்த 3 பேரும் கல்லா பெட்டியில் பொருட்கள் வாங்குவதற்காக வைத்து இருந்த ரூ.37,500 பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

      இது குறித்து அவர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டீ குடிப்பது போல நடித்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.37,500 பணத்தை திருடிச் சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

      • ராசிபுரம் அருகே உள்ள பில்லா நல்லூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவரது தந்தை நாச்சிமுத்துவிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
      • அப்போது இவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர் ரமேஷின் பாக்கெட்டில் இருந்து ரூ.500 திருடினார்.

      நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பில்லா நல்லூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (36) இவரது தந்தை நாச்சிமுத்துவிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரமேஷ் உடன் இருந்து கவனித்து வருகிறார்.

      இந்த நிலையில் நேற்று காலை மருத்துவர்கள் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர் ரமேஷின் பாக்கெட்டில் இருந்து ரூ.500 திருடினார்.இதைக் கண்ட ரமேஷ் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

      போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (34) என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

      • மாது (வயது 40). இவர் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் எதிரே கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
      • யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த கார் எஞ்சின் பிளாக்கை எடுத்து அவரது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாது (வயது 40). இவர் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் எதிரே கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை ஒர்க் ஷாப்பில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த கார் எஞ்சின் பிளாக்கை எடுத்து அவரது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

      இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியுள் ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், பரமத்தி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். தன்பேரில், அங்கு வந்த போலீசார் சந்தேகத்திற்குரிய அந்த நபரை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

      இதில், அவர் கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம், வள்ளுவர் நகரைச் சேர்ந்த லோக நாதன் (27) என்பது தெரியவந்தது.இதனை யடுத்து போலீசார் லோக நாதனை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

      • மகேஸ்வரன் (வயது 27). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
      • இந்த நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது, கட்டிடத்தில் இருந்த சுமார் 100 கிலோ இரும்பு கம்பிகள் மற்றும் 2 கட்டிங் மிஷின்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

      சேலம்:

      சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண் மகேஸ்வரன் (வயது 27). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று மாலை கட்டி ட பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர்.

      இந்த நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது, கட்டிடத்தில் இருந்த சுமார் 100 கிலோ இரும்பு கம்பிகள் மற்றும் 2 கட்டிங் மிஷின்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

      இதுகுறித்து அருண் மகேஸ்வரன் இரும்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      • காடையாம்பட்டி அருகே பொம்மியாம்பட்டி மேல் கோம்பை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய வாலிபர்கள்.
      • அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் மேட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை திருடி எடுத்து செல்வதை கண்டு சத்தம் போட்டார்.

      காடையாம்பட்டி:

      காடையாம்பட்டி அருகே பொம்மியாம்பட்டி மேல் கோம்பை பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 50),இவர், 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று தோட்டம் தார் சாலை அருகே ஆட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் மேட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை திருடி எடுத்து செல்வதை கண்டு சத்தம் போட்டார். அங்கிருந்த பொதுமக்கள் மேட்டார்சைக்கிளை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு வாலிபரை பிடித்த பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து எஸ்.ஐ. கருப்பண்ணனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆடு திருட்டில் ஈடுப்பட்டவர் காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த மெக்கானிக் கோவிந்தராஜ் (25), என்பதும் இவர் ஏற்கனவே கஞ்சநாயக்கன்பட்டி, கருவள்ளி, பூசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் ஆடுகளைத் திருடி விற்பனை செய்து மது குடித்து வந்ததும் தெரிய வந்தது. இவருடன் வந்தவர் பொம்மிடி பகுதியை சேர்ந்த வேடியப்பன் மகன் பாபு என்பதும் தெரிய வந்தது. கோவிந்தராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

      • கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வரும் விவேகானந்தன் அம்மா பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குருமூர்த்தி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
      • பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

      அம்மாபேட்டை:

      அம்மாபேட்டை அருகே உள்ள படவல்கால்வாய் பகுதியில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

      இந்த கம்பெனியில் சம்ப வத்தன்று சிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (36) 2 பேரும் சேர்ந்து கம்பெனிக்கு சொந்தமான பழைய இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளனர்.

      இது குறித்து கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வரும் விவேகானந்தன் அம்மா பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குருமூர்த்தி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

      மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை திருடி செல்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

      பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

      • ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிளை குடிபோதையில் வாலிபர் திருடி சென்றார்.
      • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

        ஈரோடு:

      ஈரோடு பி.பி.அக்ரஹாரம் முத்து தெருவை சேர்ந்தவர் பூசார்அலி (47). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். பின்னர் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

      இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்திருந்தார். இந்நிலையில் பூசார்அலி தனது நண்பர் அணீஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிள் தேடி பவானி ரோடு வழியாக, பி.பி.அக்ரகாரம் அடுத்த பேரஜ் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.

      அப்போது அந்த வழியாக பூசார் அலியின் மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் ஓட்டிக்கொண்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபரை மோட்டார் சைக்கி ளுடன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

      போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொ ண்டதில் அவர்பவானி சீனிவாசபுரத்தை சேர்ந்த சுலைமான் (20) என்பதும், குடிபோதையில் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

      இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலைமானை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

      • கோபிசெட்டிபாளையம் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து மோட்டார் சைக்கிள், செல்போன் திருடிய வாலிபரை 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த பொதுமக்கள்.
      • இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாரிபர் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

      கோபி:

      கோபிசெட்டி பாளையம் உப்பு கிடங்கு வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் மனைவி மற்றும் மகன் சரவணன் (35) மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

      அப்போது நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த ஒரு வாலிபர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோடடார் சைக்கிளை திருடிக்கொண்டு சென்றார். இதையடுத்து அந்த வாலிபர் பஸ் நிலைய பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு, மீண்டும் நடந்து சென்றார். தொடர்ந்து அவர் அங்கு இருந்த மொபட்டை திருடிக்கொண்டு வாய்க்கால் ரோட்டிற்கு சென்றார்.

      மேலும் அந்த வாலிபர் வாய்க்கால் ரோட்டை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் இப்ராகிம் (40) என்பவரது வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த 3 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.

      சத்தம் கேட்டு இப்ராகிம் எழுந்து பார்த்தார். அப்போது அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை விரட்டினார்.

      தொடர்ந்து அந்த வாலிபரை பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றனர். அந்த வாலிபர் கரட்டூர் அருகே உள்ள எஸ்.பி.நகரில் கரும்பு காட்டிற்குள் புகுந்து கொண்டார்.

      அதைத்தொடர்ந்து பொதுமக்கள் விடிய, விடிய கரும்பு காட்டை சுற்றி வளைத்து தேடினர். இதையடுத்து இன்று காலை அந்த வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவரை கோபி செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

      இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருச்சி மாவட்டம் சத்திரம் சின்னகவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜாமுகமது (27) என தெரிய வந்தது. போலீசாரிடம் சிக்கிய ராஜா முகமது மீது செல்போன், நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு என 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

      இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      பள்ளிப்பாளையம் ஜவுளிக்கடையில் பெண் ஊழியரை திசைதிருப்பி ஜவுளிகளை திருடிய பெண்களை சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

      பள்ளிப்பாளையம்:

      நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆர்.எஸ். பிரிவு ரோடு சாலையில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடை உள்ளது . சம்பவத்தன்று மதிய நேரத்தில் செந்தில்குமார் உணவு அருந்துவதற்கு வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் ஜவுளிக்கடை பெண் ஊழியர் மட்டுமே கடையில் இருந்துள்ளார்.

      அப்போது அங்கு வந்த சுமார் 50 வயதிற்கு மேற்பட்ட 3 பெண்கள் மற்றும் ஒரு வயதான முதியவர் என 4 பேர் கொண்ட குழுவினர் ஜவுளி துணி எடுப்பது போல பாவனை செய்து ஜவுளிக் கடை பெண் ஊழியரை சூழ்ந்து கொண்டனர்.

      அப்போது அந்த கூட்டத்தில் ஒரு பெண் புடவையை விரித்து காட்டுவது போல போக்கு காட்டி இது என்ன விலை என்று கேட்டுக்கொண்டு அந்த பெண் ஊழியரை திசை திருப்பி அவர்களில் ஒரு பெண் ஒருவர் தான் ஏற்கனவே எடுத்து செல்ல வைத்திருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட காட்டன் புடவைகளை கால் இடுக்கில் மறைத்து வைத்துக் கொண்டார்.

      பின்பு 150 ரூபாய்க்கு 2-துண்டுகளை மட்டுமே வாங்கிக் கொண்டு அந்த கும்பல் வெளியேறியது. சிறிது நேரத்துக்குப்பிறகு ஜவுளிக்கடை பெண் ஊழியர் கடை ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்ட புடவைகள் எண்ணிக்கை குறைகிறதே என அதிர்ச்சி அடைந்து சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தார். அப்போது அதில் தன்னை திசை திருப்பிவிட்டு வந்திருந்தவர்கள் லாவகமாக காட்டன் புடவைகளை திருடி சென்றதை கண்டறிந்தார்.

      திருடுபோன ஜவுளிகள் மதிப்பு மொத்த மதிப்பு ரூ.14 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிப்பாளையம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது சி.சி.டி.வி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

      ×