search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் ஒர்க் ஷாப்பில் என்ஜின் பிளாக்கை திருடிய வாலிபர் கைது
    X

    கார் ஒர்க் ஷாப்பில் என்ஜின் பிளாக்கை திருடிய வாலிபர் கைது

    • மாது (வயது 40). இவர் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் எதிரே கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
    • யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த கார் எஞ்சின் பிளாக்கை எடுத்து அவரது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாது (வயது 40). இவர் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் எதிரே கார் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை ஒர்க் ஷாப்பில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த கார் எஞ்சின் பிளாக்கை எடுத்து அவரது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியுள் ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், பரமத்தி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். தன்பேரில், அங்கு வந்த போலீசார் சந்தேகத்திற்குரிய அந்த நபரை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில், அவர் கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம், வள்ளுவர் நகரைச் சேர்ந்த லோக நாதன் (27) என்பது தெரியவந்தது.இதனை யடுத்து போலீசார் லோக நாதனை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×