search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 arrested for stealing"

      நங்கவள்ளி:

      மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஐயம்புதூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், சார்ஜர் என 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ெபாருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

      2 பேர் கைது

      இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாங்காடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகை யில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட தில் அவர்கள் கொளத்தூர் பாலவாடியை சேர்ந்த விஜய் (26), அவரது நண்பர் வெங்கடேஷ் (23) என்பதும் இவர்கள் இரு வரும் தனி யார் கல்லூரியில் கணினி உள்ளிட்ட சாதனங்களை திருடியதும் தெரியவந்தது.

      இவர்களிடமிருந்து கல்லூரியில் திருடப்பட்ட 3 சிபியூ, 4 மானிடர், 1 எல்.இ. டி, டிவி, 1 லேட்டாப், 4 சார்ஜர் ஆகியவற்றை பறி முதல் செய்த போலீசார் 2 ேபரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்த னர். இதில் விஜய் என்பவர் மீது ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வழக்கு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

      • மொடக்குறிச்சி அருகே வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
      • செல்போன், மளிகை கடையில் திருடிய ரூ.2500 ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

      மொடக்குறிச்சி:

      ஈரோடு அடுத்த சோலார் அருகே உள்ள நகராட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). சிசிடிவி கேமரா பழுது நீக்கம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று சேலம் செல்வதற்காக தனது வீட்டில் இருந்து பஸ் நிறுத்தத்திற்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.

      அப்போது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் சுரேஷின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

      அதேபோல் மொடக்குறிச்சி அடுத்த 46புதூர் சுப்பராயவலசு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

      பின்னர் மறுநாள் காலை கடையை திறந்த போது கல்லாவில் இருந்த ரூ.2500 பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் மீது மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

      இந்நிலையில் நேற்று லக்காபுரம் பரிசல்துறை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் சோலார் அடுத்த வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் முத்துக்குமார் (19), அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் கோகுல் (20), இவர்கள் இருவரும் சுரேஷின் செல்போனை பறித்து சென்றதும், மளிகை கடையில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

      இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த மொடக்குறிச்சி போலீசார் இவர்களிடம் இருந்து செல்போன், மளிகை கடையில் திருடிய ரூ.2500 ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

      ×