search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கல்லூரியில் திருடிய 2 பேர் கைது
    X

    கைதான 2 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கணினி உள்ளிட்ட பொருட்கள்.

    தனியார் கல்லூரியில் திருடிய 2 பேர் கைது

      நங்கவள்ளி:

      மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஐயம்புதூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், சார்ஜர் என 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ெபாருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

      2 பேர் கைது

      இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாங்காடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகை யில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட தில் அவர்கள் கொளத்தூர் பாலவாடியை சேர்ந்த விஜய் (26), அவரது நண்பர் வெங்கடேஷ் (23) என்பதும் இவர்கள் இரு வரும் தனி யார் கல்லூரியில் கணினி உள்ளிட்ட சாதனங்களை திருடியதும் தெரியவந்தது.

      இவர்களிடமிருந்து கல்லூரியில் திருடப்பட்ட 3 சிபியூ, 4 மானிடர், 1 எல்.இ. டி, டிவி, 1 லேட்டாப், 4 சார்ஜர் ஆகியவற்றை பறி முதல் செய்த போலீசார் 2 ேபரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்த னர். இதில் விஜய் என்பவர் மீது ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வழக்கு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

      Next Story
      ×