search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
    X

    வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

    • மொடக்குறிச்சி அருகே வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • செல்போன், மளிகை கடையில் திருடிய ரூ.2500 ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு அடுத்த சோலார் அருகே உள்ள நகராட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). சிசிடிவி கேமரா பழுது நீக்கம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று சேலம் செல்வதற்காக தனது வீட்டில் இருந்து பஸ் நிறுத்தத்திற்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் சுரேஷின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல் மொடக்குறிச்சி அடுத்த 46புதூர் சுப்பராயவலசு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மறுநாள் காலை கடையை திறந்த போது கல்லாவில் இருந்த ரூ.2500 பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் மீது மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று லக்காபுரம் பரிசல்துறை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் சோலார் அடுத்த வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் முத்துக்குமார் (19), அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் கோகுல் (20), இவர்கள் இருவரும் சுரேஷின் செல்போனை பறித்து சென்றதும், மளிகை கடையில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த மொடக்குறிச்சி போலீசார் இவர்களிடம் இருந்து செல்போன், மளிகை கடையில் திருடிய ரூ.2500 ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×