search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    உல்லாச வாழ்க்கைக்காக ஆடு திருடிய 2 சிறுவர்கள் கைது

    நாமக்கல் அன்பு நகரில் உல்லாச வாழ்க்கைக்காக ஆடு திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அன்பு நகரில் போலீசார் வாகன தணிக்கையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 சிறுவர்கள் ஆட்டு குட்டியை எடுத்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் ஆட்டுக்குட்டியை போட்டு விட்டு தப்பி ஓடினர். 

    அவர்களை துரத்தி பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நாமக்கல் இ.பி. காலனி, மற்றும் கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் நாமக்கல் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்தனர். 

    இந்த நிலையில் பள்ளியில் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு எஸ்.கே.நகரில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு துத்திக்குளம் பகுதியில் ஆட்டுக்குட்டியை திருடி சென்றுள்ளனர். மேலும் அவர்கள் உல்லாச வாழ்க்கைக்காக செலவிற்கு ஆடு திருடியதாக போலீசார் விசாரணையில் கூறியுள்ளனர்.

    மேலும் இந்த திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட மற்றொரு இளைஞரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×