search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது போதையில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது
    X

    மது போதையில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது

    ஜெயங்கொண்டத்தில் மது போதையில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகேசன்(50). கூலிதொழிலாளி. இவரது மகன் ராம்குமார்(20) படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். ராம்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி முருகேசன் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் இருந்தார்.

    அப்போது குடிபோதையில் வந்த ராம்குமார் தந்தை முருகேசனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×