search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father murder threats"

    ஜெயங்கொண்டத்தில் மது போதையில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகேசன்(50). கூலிதொழிலாளி. இவரது மகன் ராம்குமார்(20) படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். ராம்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி முருகேசன் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் இருந்தார்.

    அப்போது குடிபோதையில் வந்த ராம்குமார் தந்தை முருகேசனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×