search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்பத் தகராறில் விளையாட்டாக விஷம் குடித்த பெண் சாவு
    X

    குடும்பத் தகராறில் விளையாட்டாக விஷம் குடித்த பெண் சாவு

    • நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே குடும்பத் தகராறில் விளையாட்டாக விஷம் குடித்த பெண் பாலியானார்.
    • பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் பிரனேஷ் (வயது 28) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி(25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. 3 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

    பள்ளிக்கு செல்லும் தங்களது மகன்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு ஜோதி தனது கணவர் பிரனேஷிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது கணவன்- மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.‌

    இந்த நிலையில் ஜோதி விளையாட்டாக கடந்த 15-ம் தேதி விஷம் குடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் திடீரென மயக்கமடைந்த அவரை கணவர் பிரனேஷ் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிக்கு திருமணமாகி 6 வருடங்களே ஆனதால் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி விசாரணை நடத்தி வருகிறார்.

    விளையாட்டாக விஷம் குடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×