என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "DMK Alliance"
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மே 23ம் தேதிக்குள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பெயரில் ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. காங்கிரஸ் கட்சியின் லெட்டர் பேடில் அந்த அறிக்கை அச்சிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த அறிக்கை போலியானது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உடனடியாக டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டது. “தலைவர் கே.எஸ்.அழகிரி பெயரில் போலியான அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இதை போன்ற போலி செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த டுவிட்டர் பதிவில் காங்கிரஸ் கூறியிருந்தது.
அத்துடன், போலி அறிக்கை தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும், தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும் இதுபோன்ற மோசடி அறிக்கையை பரவ விட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த போலி தகவலால் மோசமான விளைவுகள் நிகழ்வதற்கு முன் துரிதமாக நடவடிக்கை எடுத்து, போலி அறிக்கையை பரப்பியதன் பின்னணியில் உள்ளவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியா என்ற அமைப்பின் பேராயர் எஸ்ரா சற்குணம், வன்னிய சமுதாயத்தை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, கிழட்டு சிறுத்தையான தாம் சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது என்றும் வன்னியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எஸ்ரா சற்குணத்தின் வார்த்தைகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஒவ்வாதவை; கண்டிக்கத்தக்கவை.
எஸ்ரா சற்குணம் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மாறாக, உண்மை நிலை அறியாமல் பாட்டாளி மக்கள் கட்சியையோ, வன்னியர்களையோ இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
வன்னியர்களை இழிவு படுத்தி பேசியதற்காக அந்த மக்களிடம் எஸ்ரா சற்குணம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ்ரா சற்குணத்தைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
வன்னிய மக்கள் மீது மட்டும் ஒருசார்பாக அவதூறு பரப்பிக் கொண்டிருந்தால் வன்னியர் எதிர்ப்பு என்ற சாக்கடையில் அரசியல் லாபம் என்ற அரிசி பொறுக்குபவர்களாகவே அவர்களை சமுதாயம் பார்க்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ramadoss #EzraSargunam #vanniyarissue
அரியலூர்:
தமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம. கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்டதலை நகரிலும் வரும் 24-ந் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அரியலூரில் அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும். அதேபோல் 18 தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைதேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணிராமதாஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதே வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. தர்மபுரி உட்பட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்ற திட்டமிட்டனர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராம வாக்கு சாவடியில் வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
மேலும் பா.ம.க.வினர் பானை சின்னத்தை போட்டு உடைத்தனர். ஆதிதிராவிடர் பகுதிக்குள் நுழைந்து பானை சின்னம் போடப்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்திருந்தனர். இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளன.
பத்திரிகையாளர்கள் யார்? என்று தெரியாமல் தாக்கியுள்ளனர். அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளரை பார்த்து ஆறுதல் கூறி வந்துள்ளேன்.
தமிழகம் முழுவதும் பா.ம. க.வினர் வன்முறையை தூண்டி வருகிறார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அரசும், காவல் துறையும் மெத்தனம் காட்டி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் வருகின்ற 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது தலைமையிலும், அரியலூரில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., அனைத்து தோழமைக் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு திருமாளவளவன் கூறினார்.
பேட்டியின்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் கிட்டு, மேலிட பொறுப்பாளர் கோவேந்தன், துணை பொது செயலாளர் கனி அமுதன், மாவட்ட செயலாளர் செல்வநம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பா நந்தம், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் லூயிகதிரவன் உட்பட ஏராளமானோர் இருந்தனர். #thirumavalavan #Ponparappi #pmk
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடநாடு விவகாரத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை நாடே கவனித்து கொண்டிருக்கிறது. கொடநாடு பகுதியின் ஓரஞ்சாரத்தில் கூட எதிர்க்கட்சியினர் சென்றிருக்க வாய்ப்பில்லை.
தேர்தல் பரபரப்பான ஒரு சூழலை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை திசை திருப்புவதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபடுவதாக தெரிகிறது.
தமிழகத்தில் தி.மு.க. அமைத்துள்ளது தான் வலுவான அணி. இது கொள்கை கூட்டணி. இந்த அணி மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது என்பதை உணர்ந்த நிலையில் தமிழக முதல்வர் கொடநாடு கொள்ளை, கொலை சம்பவங்களில் தி.மு.க.வை முடிச்சு போட்டு பேச முயற்சிக்கிறார். உண்மை எது? என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சட்டமும் அதனை விரைவில் வெளிக்காட்டும்.
அதே போல் தமிழகத்தில் அமைந்துள்ள தி.முக. கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அச்சம் கொண்டுள்ளார். காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை பெற்று வருகின்றது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுகிறார் என்பதை இதன் மூலம் நான் புரிந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thirumavalavan
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான, பலமான கூட்டணி அமைந்துள்ளது. ஒத்த கருத்துடைய தலைவர்கள் இடம் பெற்றுள்ள கூட்டணி 39 தொகுதிகளிலும், இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்கள் பிரச்சனைக்காக போராடுகிற இந்த கூட்டணியில் நான் திருச்சியில் போட்டியிட தலைவர் ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் விரைவில் வர இருக்கிறார். பிரியங்கா வருவது பற்றி ராகுல்தான் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi #thirunavukkarasar
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்து வருகிறார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் அவர் பிரசாரம் செய்யவில்லை. மீண்டும் 26-ந்தேதி தொடங்கி 28-ந் தேதி வரை அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்
அவரது பிரசார விவரத்தை ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இன்று மாலை 3.30 அளவில் கோவில்பட்டி தேவர் சிலை அருகில் வைகோ பேசுகிறார்.
4.00 சாத்தூர்
4.30 படந்தால்
4.45 சுப்ரமணியபுரம் விலக்கு
5.00 தாயில்பட்டி
5.15 மண்குண்டாம்பட்டி
5.45 வெம்பக்கோட்டை
6.00 முத்துசாமிபுரம்
6.15 ஆலங்குளம் முக்கு ரோடு
6.30 டி.கரிசல்குளம்
6.45 தொம்பக்குளம்
7.00 கீழராஜகுலராமன்
7.15 திருவேங்கடபுரம்
7.45 வ.உ.சி. நகர்
8.30 ராஜபாளையம் பொதுக்கூட்டம்.
26.03.2019 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆம்பூர், பேரணாம்பட்டு , குடியாத்தம், வேலூர், மேல் விஷாரம், ஆற்காடு , ராணிப்பேட்டை முத்துக்கடை, வாலஜா, சோளிங்கர் பாணாவரம், மணப்பாக்கம், நெமிலி.
27 மார்ச் 2019 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வட சென்னை பழனியாண்டவர் கோவில் தெரு, பெரம்பூர்.
மத்திய சென்னை டாணா தெரு, புரசைவாக்கம், தென் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில், மேற்கு சைதாப்பேட்டை சாரதி நகர் பேருந்து நிலையம் அருகில் (ஜோன்ஸ் ரோடு).
மார்ச் 28 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #MDMK #Vaiko
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கணேச மூர்த்தி போட்டியிடுகிறார். ஈரோட்டில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #LSPolls #MDMK #Vaiko
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை 27 விவசாய சங்கங்களின் தலைவர்கள் சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
1. கு.செல்லமுத்து (தமிழக விவசாயிகள் சங்க கூட்டு நடவடிக்கை குழு)
2. கே.பி.ராஜ்குமார் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)
3. ஜி.எஸ்.தளபதி (இந்திய விவசாயிகள் சங்கம்)
4. அக்ரி பசுமைவளவன் (விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்)
5. இளங்கீரன் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு)
6. கிருஷ்ணன் (ஏரிநீர் பாசன சங்கம் மற்றும் பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்)
7. பொன்னுசாமி (தேசிய மயமாக்கப்பட்ட கடன்பெற்ற விவசாயிகள் சங்கம்)
8. கோபாலகிருஷ்ணன் (தேசிய நெடுஞ்சாலைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மரவள்ளி, மக்காச் சோளம் உற்பத்தியாளர்கள் சங்கம்).
9. சரவணன் (இயற்கை வேளாண்மை சிறுதானிய உற்பத்தியாளர் சங்கம்)
10. வெங்கடபதி (தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கம்)
11. விஸ்வநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்)
12. நல்லசிவம் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)
13. ராமமூர்த்தி (கோத்தாரி கரும்பு விவசாயிகள் சங்கம்)
14. ஜெனார்த்தன் (படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் இலத்தூர் ஒன்றிய கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)
15. சுதர்சனம் (படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)
16. சோழந்தூர் பாலகிருஷ்ணன் (சோழந்தூர் மற்றும் 72 கண்மாய்களின் பாசன சங்கம், ராமநாதபுரம்)
17. செல்வக்குமார் (தென்னிந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் துணைத் தலைவர், வி.வி.எம். சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)
18. அமரேசன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை).
19. ராஜேந்திரன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை)
20. ரகுபதி (ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை).
21. சுதர்சனம் (மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை).
22. லோகநாதன் (பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்)
23. திருப்புலிவனம் திருவேங்கடம் (அனைத்து பயிர்கள் சாகுபடி உற்பத்தியாளர்கள் சங்கம்).
24. சென்னியப்பன் (கரும்பு வளர்ப்போர் மற்றும் சர்க்கரை ஆலை முன்னேற்றச் சங்கம்).
25. ஜெயபிரகாஷ் (டெல்டா அமைப்பு)
26. மு.திருவேங்கடம் (அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம்)
27. ஏழுமலை (காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கம்). #LSPolls #DMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்