என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளால் பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது- திருமாவளவன்
Byமாலை மலர்25 March 2019 5:03 AM GMT (Updated: 25 March 2019 5:03 AM GMT)
மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுவதாக திருமாளவன் தெரிவித்தார். #LSPolls #Thirumavalavan
அரியலூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடநாடு விவகாரத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை நாடே கவனித்து கொண்டிருக்கிறது. கொடநாடு பகுதியின் ஓரஞ்சாரத்தில் கூட எதிர்க்கட்சியினர் சென்றிருக்க வாய்ப்பில்லை.
தேர்தல் பரபரப்பான ஒரு சூழலை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை திசை திருப்புவதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபடுவதாக தெரிகிறது.
தமிழகத்தில் தி.மு.க. அமைத்துள்ளது தான் வலுவான அணி. இது கொள்கை கூட்டணி. இந்த அணி மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது என்பதை உணர்ந்த நிலையில் தமிழக முதல்வர் கொடநாடு கொள்ளை, கொலை சம்பவங்களில் தி.மு.க.வை முடிச்சு போட்டு பேச முயற்சிக்கிறார். உண்மை எது? என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சட்டமும் அதனை விரைவில் வெளிக்காட்டும்.
அதே போல் தமிழகத்தில் அமைந்துள்ள தி.முக. கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அச்சம் கொண்டுள்ளார். காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை பெற்று வருகின்றது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுகிறார் என்பதை இதன் மூலம் நான் புரிந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thirumavalavan
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடநாடு விவகாரத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை நாடே கவனித்து கொண்டிருக்கிறது. கொடநாடு பகுதியின் ஓரஞ்சாரத்தில் கூட எதிர்க்கட்சியினர் சென்றிருக்க வாய்ப்பில்லை.
தேர்தல் பரபரப்பான ஒரு சூழலை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை திசை திருப்புவதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபடுவதாக தெரிகிறது.
தமிழகத்தில் தி.மு.க. அமைத்துள்ளது தான் வலுவான அணி. இது கொள்கை கூட்டணி. இந்த அணி மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது என்பதை உணர்ந்த நிலையில் தமிழக முதல்வர் கொடநாடு கொள்ளை, கொலை சம்பவங்களில் தி.மு.க.வை முடிச்சு போட்டு பேச முயற்சிக்கிறார். உண்மை எது? என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சட்டமும் அதனை விரைவில் வெளிக்காட்டும்.
அதே போல் தமிழகத்தில் அமைந்துள்ள தி.முக. கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அச்சம் கொண்டுள்ளார். காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை பெற்று வருகின்றது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுகிறார் என்பதை இதன் மூலம் நான் புரிந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Thirumavalavan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X