search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demands"

    • தமிழகத்தில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் நீண்ட காலமாக உள்ள 10 முக்கியமான பிரச்னைகள் அல்லது குறைகள் குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
    • விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா மற்றும் அருப்புக்கோட்டை தொகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 10 கிலோமீடடர் தொலைவிலேயே அமைந்துள்ளது.

    கோவில்பட்டி:

    தமிழகத்தில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் நீண்ட காலமாக உள்ள 10 முக்கியமான பிரச்னைகள் அல்லது குறைகள் குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    புதிய மாவட்டம்

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம், கோவில்பட்டி தொகுதிக்கு தேவையான திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுவை கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ வழங்கினார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    தென்காசியில் உள்ள திருவேங்கடம் தாலுகாவில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா மற்றும் அருப்புக்கோட்டை தொகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 10 கிலோமீடடர் தொலை விலேயே அமைந்துள்ளது.

    எனவே இவற்றையெல்லாம் இணைத்து கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.

    கோவில்பட்டி நகரின் மெயின் ரோட்டில் சுமார் 70 ஆண்டுகாலமாக இருந்து வந்த நீரோடை ஆக்கிரமிப்புகள் பொதுமக்கள் நலன் கருதி 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. தற்போது இந்த நீரோடை, நகரின் மையப்பகுதியில் இருப்பதால் பாதுகாப்பு கருதி ஓடையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

    மருத்துவ கல்லூரி

    கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் ரூ. 4 கோடி மதிப்பில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

    கோவில்பட்டியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். கழுகுமலையில் கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் இடத்தில் கால்நடை மருத்துவ கல்லூரியும் அமைக்க வேண்டும்.

    கோவில்பட்டியில் அரசு செவிலியர் கல்லூரி அமைக்க இடம் கையகப்படுத்தப்பட்டு நிதி ஒப்புதல் வரை பெறப்பட்டுள்ளது. எனவே இங்கு அரசு விரைவாக செவிலியர் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். இனாம்மணியாச்சி, இலுப்பையூரணி, பாண்டவர்மங்கலம், நாலாட்டி ன்புத்தூர், திட்டங்குளம், மந்தித்தோப்பு ஆகிய ஊராட்சிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளனர். இங்கு குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்திட தனி குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும்.

    கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் அரசு விருந்தினர் மாளிகை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • செங்கோட்டை கூட்டுறவு பால்பண்ணை அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
    • அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கூட்டுறவு பால்பண்ணை அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதனை நகராட்சி ஊழியர்கள் சீரமைக்கும் போது தோண்டப்படும் பள்ளங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    மேலும் அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    இச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரகணக்கான வாகனங்கள் சென்றுவரும் நிலையில் தற்போதும் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் சென்று வருகிறது.

    எனவே உயர் அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைஉடனடியாக தொடங்க வேண்டும்.
    • 2022முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியையும் வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரியஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மின்வாரிய பணியாளர்களுக்கு 1.12.2019 முதல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைஉடனடியாக தொடங்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மின்வாரியத்திற்கு சொந்தமான வட சென்னை அனல் மின்நிலையம் அலகு-3ன் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளைமுழுவதுமாக அயல்பணிக்கு ஒப்படைக்கும் முறையை கைவிட வேண்டும். மின்வாரியத்திற்குசொ ந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள தரவுகளை தனியார் ஏஜென்சியிடம்ஒப்படைக்கக்கூடாது. நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பையும் மற்றும் ஜனவரி 2022முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியையும் வழங்க வேண்டும். தரமான தளவாட பொருட்கள்தடையின்றி தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் பி .என்.ரோட்டில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் இன்று காலை முதல் கா த்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அடைச்சாணி கிராமத்திற்கு மேற்புறமுள்ள அடைச்சாணி பெரிய குளத்திலிருந்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • மழைகாலங்களில் குளம் நிரம்பினால் குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மூன்று மடைகளின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வாய்க்கால்களில் சென்று விவசாய நிலங்களுக்கு பாயும்.

    கடையம்:

    கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அடைச்சாணி கிராமத்திற்கு மேற்புறமுள்ள அடைச்சாணி பெரிய குளத்திலிருந்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த நிலையில் மழைகாலங்களில் குளம் நிரம்பினால் குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மூன்று மடைகளின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வாய்க்கால்களில் சென்று விவசாய நிலங்களுக்கு பாயும். இந்நிலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் கற்களால் கட்டப்பட்டிருந்த வாய்க்கால்களின் நீரோடைகள் அனைத்தும் சிதிலமடைந்து இடிந்த நிலையில் காணப்படுகிறது.


    இதனால் சிதிலமடைந்த நீரோடைகளை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் அதிகளவில் வீணாக செல்வதால் அப்பகுதியில் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடைச்சாணி குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் வாய்க்கால் நீரோடைகளில் சுற்றுச்சுவர்கள் அனைத்தையும் புதுப்பித்து சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அடைச்சாணி குளத்தின் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களை சேர்ந்த அடைச்சாணி, மலையான்குளம், மயிலப்பபுரம், துப்பாக்குடி, இடைகால், புதுக்குடி பகுதியின் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் மழைக்காலங்கள் வருவதற்குள் நீரோ டைகளின் சுற்றுச்சுவர்கள் அனைத்தையும் அரசு சீரமைத்து கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • கடலூரில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மாவட்ட செயலாளர் பழநி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் மாவட்டம் சார்பாக 01.01.2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படி நிலுவை தொகையினை வழங்க வேண்டும். 1.07.2022 முதல் மருத்துவ காப்பீட்டு சந்தா தொகை 497 ரூபாயாக உயர்த்தியதை ரத்து செய்து 350 ரூபாயாக குறைத்திடவேண்டும். கொரோனா சிகிச்சை கட்டணம் செலவுத் தொகையை உடன் திரும்ப வழங்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர், வனக்காவலர்கள், கிராமபுற நூலகர்களுக்கு ஓய்வூதியம் 7850 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் கடலூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். வட்டக்கிளை நிர்வாகிகள் ராமதாஸ் , அன்பழகன், முத்தமிழ்ச்செல்வி, பன்னீர்செல்வன் ,செல்வராஜ், குமாரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இணைச் செயலாளர் பாலு, பச்சையப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பழநி கோரிக்கைகளை விளக்கி பேசினார் . ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறை ஓய்வூதியர் சங்க பூண்டியாங்குப்பம் சாம்பசிவம், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் தேவராஜ் வோளண்மை அனைத்து ஊழியர் சங்க மாவட்டத் தவைர் சுந்தரமூர்த்தி, மாவட்ட தவைர்சிவராமன், பொதுச் செயலாளர் மருதவானன், இந்து சமய அறயநிலைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சுப்ரமணியம் அலுலக உதவியாளர் அலுவலக பணியாளர் ஓய்வூதியர் சங்கம் மாவட்டத் தலைவர் பக்தவச்சலம், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஆதவன், ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள் கருணாகரன் , சிவப்பிரகாசம் , கலியமூர்த்தி , பத்பநாபன், ராமனுஜம் , ஞானமணி . சிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சி.குழந்தைவேலு நன்றி கூறினார். 

    • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாம்பவர் வடகரை நகர நாம் தமிழர் கட்சி தலைவர் பத்ரகாளி பெருமாள் தலைமையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது.
    • சாம்பவர் வடகரை மேலரத வீதி 4-வது வார்டில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பள்ளி வகுப்பு மழை நீரில் மிதக்கிறது.

    சாம்பவர் வடகரை:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாம்பவர் வடகரை நகர நாம் தமிழர் கட்சி தலைவர் பத்ரகாளி பெருமாள் தலைமையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    சாம்பவர்வடகரை மேலரத வீதி 4-வது வார்டில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பள்ளி வகுப்பு மழை நீரில் மிதக்கிறது. மேற்கூரை மழை நீரால் ஒழுகி வகுப்புகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். அதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள தரம் அற்ற பள்ளிகளை இடிக்க உத்தரவிட்டிருந்தனர். இப்பள்ளியில் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. அதுவும் இதுவரை கட்டித் தரப்படவில்லை.

    தற்போது உள்ள பள்ளியும் மழையால் நனைந்து மாணவர்களின் படிப்பு தடைப்படுகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் இடநெருக்கத்தாலும் அவதிப்படுகின்றனர். அதிக இட வசதியும் இல்லை.

    எனவே இப்பகுதி பள்ளி குழந்தைகளில் உயிர் சேதம் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேரூராட்சி கீழூரில், வடக்கே எம்.ஜி.ஆர். காலனியில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்காலணியில் வீட்டு கழிவுநீர் சாக்கடை செல்ல வாறுகால் வசதிகளை செய்து கொடுக்கவில்லை. அதனை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உடன்குடி சந்தையடி தெருசந்திப்பு போக்குவரத்து நிறைந்த ஒரு முக்கியமான 3 சந்திப்பு சாலையாகும்.
    • திருச்செந்தூர் தூத்துக்குடியில் இருந்து வரும் பஸ்களை சந்தையடிதெரு சந்திப்புக்கு முன்பு சுமார் 100 அடிக்கு முன்னதாகவே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.

    உடன்குடி:

    உடன்குடி சந்தையடி தெருசந்திப்பு போக்குவரத்து நிறைந்த ஒரு முக்கியமான 3 சந்திப்பு சாலையாகும். நெல்லை இருந்து வரும் பஸ்கள், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்கள், உடன்குடி பஸ் நிலையத்திலிருந்து வரும் பஸ்கள் ஆகிய 3 பஸ்களும் ஓரே நேரத்தில் ஒரே இடத்தில் நின்று பயணிகளை இறக்குவதாலும், ஏற்றுவதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அந்த இடத்தில் ஒரு ரவுண்டானா அமைக்க வேண்டும்.

    மேலும் திருச்செந்தூர் தூத்துக்குடியில் இருந்து வரும் பஸ்களை சந்தையடிதெரு சந்திப்புக்கு முன்பு சுமார் 100 அடிக்கு முன்னதாகவே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். இப்படி செய்தால் சந்தையடி தெரு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என்பது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாகும். 

    • தென்காசி அருகே உள்ள பாட்டாகுறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12-ந் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் உயிரிழந்துள்ளார்.
    • விபத்து நடந்த இந்த குவாரியில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கா மலும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதும் விபத்திற்கு காரணங்களாக அமைந்துள்ளன.

    தென்காசி:

    முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்ப தாவது:-

    தென்காசி அருகே உள்ள பாட்டாகுறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12-ந் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் உயிரிழந்துள்ளார்.

    விபத்து நடந்த இந்த குவாரியில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கா மலும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதும் விபத்திற்கு காரணங்களாக அமைந்துள்ளன.

    மேலும் அங்கே விதிகளை மீறி அதிக அளவு ஆழத்தில் துளையிட்டு சக்தி வாய்ந்த வெடி பொருட்களை வெடித்ததால் தான் நில அதிர்வு ஏற்பட்டு உயரமான பகுதியில் இருந்து பாறை சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக காவல்துறை தற்செயல் விபத்து மரணம் என்ற 174- வது பிரிவின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளது.

    விதிமுறைகளை பின்பற்றாத அந்த குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து குவாரி இயங்குவதை தடை செய்ய வேண்டும்.

    விபத்தில் பலியான பரமசிவம் குடும்பத்திற்கு அரசு தரப்பில் உரிய நஷ்ட ஈடு வழங்குவதுடன் தொழிலாளர் நலச் சட்டப்படி குவாரி உரிமையாள ரிடமிருந்து குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து நடந்த குவாரியில் கனிமவளத்துறை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஒளிவு மறைவற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள குவாரிகள் இதுபோல ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெட்ரோ ரெயில் சேவையை அனைத்து மக்களும் பயன்பெறும்வகையில் திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும்.
    • இந்த திட்டத்தால் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பின்னலாடை தொழில் அமைப்பினர் சந்தித்து மனு அளித்தனர்.பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்க(நிட்மா) தலைவர் ரத்தினசாமி அளித்த மனுவில்,கோவை உக்கடத்திலிருந்து, அவிநாசி மார்க்கமாக, விமானநிலையம், கணியூர் வரையிலும், பல்லடம் மார்க்கத்தில் உக்கடத்திலிருந்து காரணம்பேட்டை வரை மெட்ரோ ெரயில் சேவை தொடங்க தமிழக அரசால் உத்தேச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ெரயில் சேவையை அனைத்து மக்களும் பயன்பெறும்வகையில், கணியூரில் இருந்தும், காரணம் பேட்டை, சாமளாபுரம் வழியாக திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும்.

    உலகளவில் புகழ் பெற்ற பின்னலாடை நகரம் திருப்பூர். கோவையில் இருந்து திருப்பூருக்கும், திருப்பூரிலிருந்து கோவைக்கும் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து செல்கின்றனர். கோவை - திருப்பூரை இணைக்கும் வகையில் மெட்ரோ ெரயில் இயக்கினால், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி தொழில் வளர்ச்சி பெறும்.

    சாமளாபுரத்தில் இருந்து நொய்யலாற்றின் மேல் மெட்ரோ ெரயில் திட்டம் அமைந்தால் நில ஆர்ஜிதம் செய்வது சுலபமாகும். இந்த திட்டத்தால் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும். விபத்து தவிர்க்கப்படும். பயண நேரம் குறையும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதனுடன் கோவை - திருப்பூர் இடையே மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பது குறித்த மாதிரி வரைபடத்தையும் அவர் இணைத்துள்ளார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் அளித்த மனுவில்,பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் உள்ள குறு, சிறு நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. நூல் விலை உயர்வால் ஆடை தயாரிப்பு செலவினம் அதிகரித்துள்ளது. உற்பத்தி பிரிவில், 50 சதவீதம் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்கிறது.வடமாநில தொழிலாளரை சார்ந்தே நிறுவனங்களை இயக்கவேண்டியுள்ளது. திருப்பூர் முழுவதும் மூன்று லட்சம் வடமாநில தொழிலாளர் உள்ளனர். ஒரு தொழிலாளருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 300 கோடி ரூபாய் திருப்பூரிலிருந்து வெளிமாநிலத்துக்கு செல்கிறது.

    டீமா சங்கம் சார்பில் அரசு உதவியுடன் வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படுகிறது. இதில், உள்ளூரை சேர்ந்த 10 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். தமிழகத்தில் தொழிலாளர் மிகுந்த மாவட்டங்களில் ஆயத்த ஆடை பூங்காக்களை அமைத்தால் வேலைவாய்ப்பு பெருகும், மாநில பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்.தொழிலாளர் நலன், தொழில் நலன் கருதி, டாஸ்மாக் கடைகளை மாலை 5 மணிக்கு மேல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பருத்தி கொள்முதல் மையம், பின்னலாடை துறைக்கு தனி வாரியம் அமைப்பது அவசியம். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்குகிறது. ஆயிரத்து 200 தென்னை விவசாயிகள் இதில் பங்குதாரர்களாக உள்ளனர்.

    தென்னையிலிருந்து கிடைக்கும் நீரா பானத்தை, அதன் தன்மை மாறாமல் பேக்கிங் செய்து மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம். தென்னையிலிருந்து பெறப்படும் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துக்கள் அடங்கிய நீரா பானத்தை, தென்னீரா என்ற பெயரில் விற்று வருகிறோம்.கேரள மாநிலம் காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிறுவனம் அங்கீகரித்த தென்னீராபானத்தை, அரசு பானமாக அறிவித்து முதல்வர் அலுவலகம் மற்றும் அமைச்சரவையில் வரவேற்பு பானமாக பயன்படுத்த வேண்டும்.ஆரம்ப சுகாதார மையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். நீரா பானம் இறக்குவதற்கான உரிமம் பெறும் வழிமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
    • 80 மாத காலமாக பஞ்சப்படி வழங்கப்படாமல் உள்ளது.

    தாராபுரம் :

    போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்த போராட்ட விளக்க வாயிற்கூட்டம் தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்றது. கூட்டத்துக்கு தாராபுரம் மண்டல துணைத்தலைவர் டி.ராமசாமி தலைமை தாங்கி பேசுகையில்,14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    போக்குவரத்து கழகத்தின் வரவு-செலவு பற்றாக்குறையை அரசே ஏற்று பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். ஓய்வுபெறும் தொழிலாளியை வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஓய்வுபெற்ற தொழிலாளிக்கு பணப்பலன்களை உடனே வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 80 மாத காலமாக பஞ்சப்படி வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

    • வரையறுக்கப்பட்ட ஊதியமும், ஓய்வூதியமும் கேட்டு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி வாயிற் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
    • குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கிட வேண்டும்,

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முதலமைச்சரின் கவன ஈர்ப்பு பேரணி மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன முழக்க வாயிற்கூட்டம் நடத்தினர்.

    வரையறுக்கப்பட்ட ஊதியமும், ஓய்வூதியமும் கேட்டு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட தலைநகரங்களில் பேரணி வாயிற் கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன வாயிற் கூட்டம் நடத்தினர்.

    மாவட்டத் தலைவர் சிவபழனி பேரணியை தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கிய பேரணியானது நகரின் முக்கிய விதிகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கண்டன வாயிற் கூட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

    • தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கு உயர்த்த வேண்டும்.

    திருப்பூர் :

    தேங்காய் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சியில்வருகிற 13ந் தேதி நடக்கிறது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் கூறியதாவது:-

    தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கு உயர்த்த வேண்டும். தமிழக அரசு அனைத்து தென்னை விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விவசாயிகளிடம் இருந்து தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவும், சத்துணவு திட்டத்தில் சமையலுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, கள் இறக்க அனுமதிக்க வேண்டும். தற்போது ஜூலை 31ந் தேதி வரை தேங்காய் கொள்முதலுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.விவசாய சங்கங்களின் கோரிக்கையை அடுத்து, ஆண்டு முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என வேளாண்மை துறை செயலாளர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை இது குறித்து எவ்வித அரசாணையும் வெளியாகவில்லை.எனவே உடனடியாக காலநீடிப்பு வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.

    தென்னையை தோட்டக்கலைத்துறைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.வருகிற 13-ந்தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்து வருகிறோம் என்றனர்.

    ×