search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roundabout"

    • அடிக்கடி சாலை விபத்துகளும் நடந்து வந்தது.
    • நினைவு தூணுடன் கூடிய ரவுண்டானாவில் ஒரு பகுதியும் நேற்று முன்தினம் இடிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் ஏற்கெனவே உள்ள ரவுண்டானாவில் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, மாலை புதிதாக தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்டது.

    தஞ்சாவூர் காந்தி - இர்வீன் ஆற்றுப்பாலம் அருகே காந்திஜி சாலை - நீதிமன்றச் சாலை சந்திப்பில் கடக்கும்போது வாகன ஓட்டுநர்களிடையே குழப்பம் நிலவி வந்தது. இதனால், அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வந்ததால், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே நீதிமன்றச் சாலை நுழைவு பகுதியில் இடது புறம் இருந்த ரவுண்டானா முழுவதுமாகவும், வலது புறம் நினைவுத் தூணுடன் கூடிய ரவுண்டானாவில் ஒரு பகுதியும் நேற்று முன்தினம் இடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் புதிதாக தற்காலிக ரவுண்டானா நேற்று மாலை அமைக்கப்பட்டது.

    இந்தத் தற்காலிக ரவுண்டானா சில நாள்களுக்கு தொடரும் என்றும், இதிலுள்ள நிறை, குறைகளை அறிந்து நிரந்தரமான ரவுண்டானா அமைக்கப்படும் என போக்குவரத்து ஒழுங்கு காவல் பிரிவினர் தெரிவித்தனர்.

    • போக்குவரத்து நெரிசல், காத்திருப்பு குறைந்தது
    • போக்குவரத்து சுலபமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர்.

    கோவை,

    தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக கோவை உள்ளது.

    இங்கு நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது.

    போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடி–க்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தற்போது மாநகரில் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்க–ளை அகற்றிவிட்டு அங்கு ரவுண்டானா அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியை தொடங்கி உள்ளனர் கோவை மாநகர போலீசார்.

    இந்த பணிகளை போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் முன்னின்று தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி, கோவையில் அதிக போக்குவரத்து நெரிசலும், அதிக நேரம் சிக்னல்காக காத்திருக்க வேண்டி உள்ள லாலி ரோடு சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலையில் சிந்தாமணி சந்திப்பு மற்றும் புரூக் பாண்டு சாலையில் கிக்கானி பள்ளி சந்திப்பு ஆகிய பகுதிகளில் இருந்த போக்குவரத்து சிக்னல்களை முழுவதுமாக அகற்றி விட்டனர்.

    அதற்கு பதிலாக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் ரவுண்டானா அமைத்துள்ளனர்.

    இதன் காரணமாக அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சுலபமாக சென்று வருகின்றன. இந்த 3 இடங்களிலும் வாகன நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது.

    இதில் புரூக் பாண்டு சாலையில் கிக்கானி பள்ளி சந்திப்பு பகுதியில் தற்போது நிரந்தரமாக ரவுண்டானா அமைக்கப்பட்டது. இந்த பணியினை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர். இந்த ரவுண்டானா காரணமாக போக்குவரத்து சுலபமாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். ஆனாலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா பகுதியில் புழுதி மண் பரப்பதால் சற்று அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோன்று புரூக் பாண்டு சாலையில் மற்றொரு சிக்னலில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தை குறைப்ப–தற்காகவும் கோட்டப் பொறியாளா், சாலைப் பாதுகாப்பு பிரிவை சோ்ந்த அலுவலா்களுடன் இணைந்து புரூக் பாண்டு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதில், புரூக் பாண்டு சாலையில் இருந்து தேவாங்கர் பள்ளி சிக்னலில் வலதுபுறம் வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.எனவே, புரூக் பாண்டு சாலையில் இருந்து பூ மாா்கெட், ஆா்.எஸ்.புரம், சிந்தாமணி, காந்திபுரம், மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள், தேவாங்கர் பள்ளி சிக்னலில் வலதுபுறம் திரும்பாமல் நேராக சென்று, சிரியன் சா்ச் ரோட்டில் வலதுபுறம் திரும்பி பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோன்று, புரூக் பாண்டு சாலை வழியாக அவினாசி சாலை பழைய மேம்பாலத்துக்கு செல்லும் வாகனங்கள், தேவாங்க–பேட்டை சிக்னலுக்காக காத்திருக்காமல் தொடா்ந்து பயணம் செய்யலாம்.

    தேவாங்கர் பள்ளி சாலை மற்றும் அவினாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழக்கம்போல் பயணத்தை மேற்கொள்ளலாம்.

    • உடன்குடி சந்தையடி தெருசந்திப்பு போக்குவரத்து நிறைந்த ஒரு முக்கியமான 3 சந்திப்பு சாலையாகும்.
    • திருச்செந்தூர் தூத்துக்குடியில் இருந்து வரும் பஸ்களை சந்தையடிதெரு சந்திப்புக்கு முன்பு சுமார் 100 அடிக்கு முன்னதாகவே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.

    உடன்குடி:

    உடன்குடி சந்தையடி தெருசந்திப்பு போக்குவரத்து நிறைந்த ஒரு முக்கியமான 3 சந்திப்பு சாலையாகும். நெல்லை இருந்து வரும் பஸ்கள், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்கள், உடன்குடி பஸ் நிலையத்திலிருந்து வரும் பஸ்கள் ஆகிய 3 பஸ்களும் ஓரே நேரத்தில் ஒரே இடத்தில் நின்று பயணிகளை இறக்குவதாலும், ஏற்றுவதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அந்த இடத்தில் ஒரு ரவுண்டானா அமைக்க வேண்டும்.

    மேலும் திருச்செந்தூர் தூத்துக்குடியில் இருந்து வரும் பஸ்களை சந்தையடிதெரு சந்திப்புக்கு முன்பு சுமார் 100 அடிக்கு முன்னதாகவே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். இப்படி செய்தால் சந்தையடி தெரு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என்பது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாகும். 

    • உடன்குடி-குலசை ரோடு திருச்செந்தூர் - மணப்பாடு ரோடு ஆகியவை சந்திக்கும் 4 சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
    • முறையான சந்திப்பு அறிவிப்பு இல்லாததினாலும், அதிக வேகமாக செல்லும் வாகனங்களாலும் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது

    உடன்குடி:

    உடன்குடி-குலசை ரோடு திருச்செந்தூர் - மணப்பாடு ரோடு ஆகியவை சந்திக்கும் 4 சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. முறையான சந்திப்பு அறிவிப்பு இல்லாததினாலும், அதிக வேகமாக செல்லும் வாகனங்களாலும் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த சில காலங்களில் 100-க்கு மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. மேலும் சிலர் அங்கு ஏற்பட்ட விபத்தில் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன விபத்துகளை தடுக்க வருகின்ற தசரா திருவிழாவிற்கு முன்பாக இந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை ரவுண்டானா அமைத்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று பக்தர்களும், வாகன ஓட்டிகளு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் உடன்குடி கலீல் ரகுமான், ராஜா மற்றும் பல்வேறுசமூக நல அமைப்பினர் ரவுண்டானா அமைக்க மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

    ×