search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை ஆற்றுப்பாலத்தில் புதிதாக தற்காலிக ரவுண்டானா அமைப்பு
    X

    புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக ரவுண்டானா.

    தஞ்சை ஆற்றுப்பாலத்தில் புதிதாக தற்காலிக ரவுண்டானா அமைப்பு

    • அடிக்கடி சாலை விபத்துகளும் நடந்து வந்தது.
    • நினைவு தூணுடன் கூடிய ரவுண்டானாவில் ஒரு பகுதியும் நேற்று முன்தினம் இடிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் ஏற்கெனவே உள்ள ரவுண்டானாவில் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, மாலை புதிதாக தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்டது.

    தஞ்சாவூர் காந்தி - இர்வீன் ஆற்றுப்பாலம் அருகே காந்திஜி சாலை - நீதிமன்றச் சாலை சந்திப்பில் கடக்கும்போது வாகன ஓட்டுநர்களிடையே குழப்பம் நிலவி வந்தது. இதனால், அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வந்ததால், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே நீதிமன்றச் சாலை நுழைவு பகுதியில் இடது புறம் இருந்த ரவுண்டானா முழுவதுமாகவும், வலது புறம் நினைவுத் தூணுடன் கூடிய ரவுண்டானாவில் ஒரு பகுதியும் நேற்று முன்தினம் இடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் புதிதாக தற்காலிக ரவுண்டானா நேற்று மாலை அமைக்கப்பட்டது.

    இந்தத் தற்காலிக ரவுண்டானா சில நாள்களுக்கு தொடரும் என்றும், இதிலுள்ள நிறை, குறைகளை அறிந்து நிரந்தரமான ரவுண்டானா அமைக்கப்படும் என போக்குவரத்து ஒழுங்கு காவல் பிரிவினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×