search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரன்பட்டினத்தில்  தொடர் விபத்தை தடுக்க 4 சந்திப்பு ரோட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும் - வாகன ஓட்டிகள் கோரிக்கை
    X

    குலசேகரன்பட்டினத்தில் தொடர் விபத்தை தடுக்க 4 சந்திப்பு ரோட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும் - வாகன ஓட்டிகள் கோரிக்கை

    • உடன்குடி-குலசை ரோடு திருச்செந்தூர் - மணப்பாடு ரோடு ஆகியவை சந்திக்கும் 4 சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
    • முறையான சந்திப்பு அறிவிப்பு இல்லாததினாலும், அதிக வேகமாக செல்லும் வாகனங்களாலும் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது

    உடன்குடி:

    உடன்குடி-குலசை ரோடு திருச்செந்தூர் - மணப்பாடு ரோடு ஆகியவை சந்திக்கும் 4 சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. முறையான சந்திப்பு அறிவிப்பு இல்லாததினாலும், அதிக வேகமாக செல்லும் வாகனங்களாலும் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த சில காலங்களில் 100-க்கு மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. மேலும் சிலர் அங்கு ஏற்பட்ட விபத்தில் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன விபத்துகளை தடுக்க வருகின்ற தசரா திருவிழாவிற்கு முன்பாக இந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை ரவுண்டானா அமைத்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று பக்தர்களும், வாகன ஓட்டிகளு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் உடன்குடி கலீல் ரகுமான், ராஜா மற்றும் பல்வேறுசமூக நல அமைப்பினர் ரவுண்டானா அமைக்க மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

    Next Story
    ×