search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கைகள்"

    • ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமானத்தை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்றனர்.
    • ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் அவதியடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாதாரண ஆட்டோக்களை (அபே ஆட்டோ) இயக்குபவர்களும், ஷேர் ஆட்டோக்கள் செல்லும் வழித்தடங்களிலே தங்கள் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி செல்கி ன்றனர். இதனால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமானத்தை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட ஷேர் ஆட்டோ டிரை வர்கள் இன்று தங்கள் ஆட்டோ க்களை இயக்காமல், பஸ் நிலையம் அருகில் சாலையோரம் ஆட்டோ க்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் மனு அளித்தனர். ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் அவதியடைந்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அரசு வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், மாற்றுத்தி றனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அரசு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மோகன், மாவட்டத் துணைச் செயலா ளர்கள் ராஜன், சாமியப்பன், ராதிகா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இதில் மாற்றுத்திறனா ளிகள் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வாட்ஸ் அப் மூலம் புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும்.
    • பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 114 கிராம ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் உள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய அன்றாட தேவைகள் மற்றும் அடிப்படை கோரிக்கை நேரில் சந்தித்து மனுக்களாகவும், தகவல்களாகவும் தெரிவிக்க நேரம் மற்றும் பொருட்செலவை குறைக்கும் வகையில் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய கோரிக்கையான மின்சாரம், குடிநீர், தெரு மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை 6381666396 தொலைபேசி எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகைப்படத்துடன் அனுப்பினால் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
    • 317 சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட மையம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மடியேந்தி போராட்டம் மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்தில் தமிழக முதல்வர் காலை சிற்றூண்டி உணவு திட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஆகிய நாங்கள் வரவேற்கிறோம்.

    அதே சமயத்தில் அதனை சத்துணவு ஊழியர் ஆகிய எங்களிடமே வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான காலம் முறை ஊதி யத்தை வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    மாவட்ட செயலாளர் ராஜு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுச்செய லாளர் ராணி, மாவட்ட பொருளாளர் அந்துவ ன்சேரல், சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி, நாகை வட்ட கிளையின் தலைவர் ரவிச்சந்திரன், சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் 317 சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பழகன் நிறைவுரை யாற்றினார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார். 

    • நீர்தேக்கத்தொட்டி சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
    • சாலை களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற சாதார ணக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் ஹேமலதா, துணை தலைவர் சுப்பராயன், பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் முன்னிலை வகித்தனர்.

    இளநிலை எழுத்தர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    பாலமுருகன்(சுயே) மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாதபோது, தேர்வடக்கு வீதியில் புதிய மழைநீர் வடிகால் அவசிய மின்றி கட்டப்படுகிறது. ஈசானியத்தெருவில் கழிவுநீர் முழுவதும் வந்து தேங்கிநிற்கிறது.

    இதனால் கொசுதொல்லை அதிகமாக உள்ளது.கொசுமருந்து அடிப்பதில்லை என்றார்.

    நித்தியாதேவி(சுயே) : எனது வார்டில் அனைத்து சாலைகளும் பழுதாகியுள்ளது.சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    நாகரத்தினம்(அதிமுக): எனது வார்டில் பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    தேவதாஸ்(திமுக): எனது வார்டில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பலமாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.இதனை சரிசெய்யவேண்டும்.

    சூரியபிரபா : எனது வார்டில் உள்ள இரண்டு நகர்களில் சாலை அமைக்கும் பணி துவங்கி பல மாதம் ஆகியும் முழுமை பெறவில்லை. குடிநீர் பைப் லைன் உடைந்து குடிநீர் வீனாகி வருகிறது இதனை சரிசெய்யவேண்டும்.

    ராமு(திமுக) மீன்மார்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவேண்டும். கொள்ளிடமுக்கூட்டில் எரியாமல் உள்ள மின்விளக்கு களை சரிசெய்யவேண்டும் என்றார்.

    முபாரக்அலி(திமுக) பழையபேருந்துநிலையம் அருகேயுள்ள குறுகிய பாலத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடந்துவருகிறது.இதற்கு பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டவேண்டும்.

    ராஜசேகர் :(தேமுதிக)எனது வார்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை யோரம்தேங்கி நிற்கிறது இதனை சீரமைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரியும் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை விரைவில் சீரமைக்க விட்டால் கழிவு நீரில் இறங்கி போராட்டம் நடத்துவேன் என்றார்.

    ஜெயந்திபாபு(சுயே.) எனது வார்டில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் தேங்கி பலமாதங்க ளாக நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுதொல்லை அதிகரித்துள்ளது.சாலை களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

    உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சாமிநாதன்(திமுக) : பழையபேருந்துநிலைய கட்டண கழிப்பறை கழிவுநீர் இரட்டை காளியம்மன் தெருவில் உள்ள கால்வாயில் விடப்படுகிறது.

    இதனால் அதிகளவு கொசுஉற்பத்தியாகி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    இவ்வாறு கூட்டம் நடை பெற்றது.

    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பஞ்சாலை ஓய்வூதியர்கள் உண்ணாவிர போராட்டம் நடத்தினர்.
    • உயர் பென்ஷன் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக பஞ்சாலை ஓய்வூதியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். சிவசாமி முன்னிலை வகித்தார்.சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி பேசினார். மின் ஊழியர் ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திர பாபு வாழ்த்தி பேசினார். ஓய்வு பெற்றோர் நல சங்க பஞ்சாலை மாவட்ட செயலாளர்.வெங்கடசுப்பிரமணியன் போராட்டத்தை முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில், குறைந்தபட்ச பென்ஷன் ரூ. 9 ஆயிரம் பஞ்சபடியுடன் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட வந்த ெரயில்வே கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி உயர் உயர் பென்ஷன் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
    • விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில்  நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விவசாயிகள், திண்டிவனத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மரவள்ளி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுர் அணைக்கட்டை சுற்றி மண் அணைப்பு செய்திருக்கும் இடத்தில் மண் சரிவு வராமல் பாதுகாக்க பனைக்கன்றுகள் நட வேண்டும். விவசாயிகளின் பாரம்பரிய நெல் விதைகளை வேளாண் உற்பத்தியா ளர்கள் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகள், அரசாங்க புறம்போக்கு இடங்கள், சுடுகாடு, வழிப்பாதை போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். மாதந்தோறும் விவசாயிகள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளும் உரிய அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது விவசாயிகள் வைத்த கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளின் கோரி க்கைகள் நிறைவேற்ற ப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் சண்முகம், மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம் லட்சுமி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கம் யசோதா தேவி, மேலாண்மை இயக்குநர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இளஞ்செல்வி, செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை ஷோபனா, வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இளங்கலை டாக்டர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    மருத்துவ தேசிய ஆணையம் கொண்டு வந்துள்ள இளங்கலை மருத்து வர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய கோரி தஞ்சையில் பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் தலைமை வகித்தார்.

    இளங்கலை மருத்துவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    மருத்துவ பாடத்திட்டங்களில் குழப்பத்தை ஏற்படு த்தும் நெக்ஸ்டை நடை முறைப்படுத்தக் கூடாது.

    இத்தேர்வை ரத்து செய்யக்கோரி மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏட்டப்படாததால் நள்ளிரவு வரை போராட்டம் தொடர்ந்தது.
    • கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றி தருகிறேன்.

    பட்டுக்கோட்டை:

    பல்வேறு கோரிக்கை களை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை திடீரென போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தின் போதுஒப்பந்த பணியாளர்களாக தங்களை பணியமர்த்த வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    தங்களின் சம்பளத்தை உயர்த்தி, பிரதி மாதம் மூன்றாம் தேதிக்குள்ளாக சம்பளம் வழங்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்களை நிரந்தர ஒப்பந்த பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர், மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் நள்ளிரவு வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே போனது.

    இந்நிலையில் நேற்று புதிதாக பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற கும ரன் போராட்டம் நடத்துபவர்க ளிடம் இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர் தூய்மை பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் அரசின் கொள்கை முடிவையும், தமிழக முதல்வர் எடுக்கும் முடிவையும் தவிர்த்து பட்டுக்கோட்டை நகராட்சி மூலமாக நிறைவேற்ற அதிகாரம் உள்ள கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் படிப்படியாக நிறைவேற்றி தருவதாகவும், நான் பட்டுக்கோட்டையில் இன்று தான் பணியில் சேர்ந்து உள்ளேன், எனக்கு குறைந்த கால அவகாசம் கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றி தருகிறேன் என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    • தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • அனைத்து தலித் இயக்கங்களின் நியாயமான கோரிக்கைகளை வெல்வது என முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட அனைத்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வக்கீல் வின்சென்ட் ராஜ் தலைமையில், அனைத்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மூத்த போராளிகள் நிரவி தங்கராசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் நிலவழகன், டாக்டர் அம்பேத்கர் கல்வி பொருளாதாரம் மேம்பாட்டு மையம் நிறுவனர் தணிகாசலம், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் சூர்யா, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல கூட்டமைப்பின் தலைவர் நாகூரான், சமூக நீதிக் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணை ப்பாளர் வின்சன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், திட்டமிட்டப்படி எதிர்வரும் 29-ந் தேதி தொடர் முழுக்க போராட்டம் நடத்தி, அனைத்து தலித் இயங்களின் நியாயமான கோரிக்கைகளை வெல்வது என முடிவு செய்யப்பட்டது.

    • கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதாக கட்டிட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
    • திருமங்கலத்தில் அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலா ளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் அஜந்தன் வரவேற்றார். சட்ட ஆலோசகர் சக்திவேல் தீர்மானம் வாசித்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- பென்சன்தாரர்களுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதியத்தொகை ரூ1,000-ல் இருந்து ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தொகை ரூ.500-ல் இருந்து ரூ1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை விளக்கி ஒவ்வொரு மாவட்ட வாரியாக விழிப்புணர்வு தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது.

    மேற்கண்டவை உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதுகுறித்து மாநில தலைவர் மகாலிங்கம் கூறுகையில், தற்போது கட்டுமான பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென முதல்-அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் கணேசன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் களத்தூர் ஊராட்சியில் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளை செயலாளர் கணேசன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செய ற்குழு விஎஸ்.கலிய பெருமாள், என்.ராதா, எஸ்.இளங்கோவன், காமராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அரசு அதிகாரிகள் கோரி க்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததன் அடிப்படையில்எழுத்து ப்பூர்வமாக எழுதி வாங்க ப்பட்டு போராட்டம் தற்காலி கமாக ஒத்திவை க்கப்பட்டது.

    ×