search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "claims"

    • நீர்தேக்கத்தொட்டி சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
    • சாலை களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற சாதார ணக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் ஹேமலதா, துணை தலைவர் சுப்பராயன், பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் முன்னிலை வகித்தனர்.

    இளநிலை எழுத்தர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    பாலமுருகன்(சுயே) மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாதபோது, தேர்வடக்கு வீதியில் புதிய மழைநீர் வடிகால் அவசிய மின்றி கட்டப்படுகிறது. ஈசானியத்தெருவில் கழிவுநீர் முழுவதும் வந்து தேங்கிநிற்கிறது.

    இதனால் கொசுதொல்லை அதிகமாக உள்ளது.கொசுமருந்து அடிப்பதில்லை என்றார்.

    நித்தியாதேவி(சுயே) : எனது வார்டில் அனைத்து சாலைகளும் பழுதாகியுள்ளது.சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    நாகரத்தினம்(அதிமுக): எனது வார்டில் பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    தேவதாஸ்(திமுக): எனது வார்டில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பலமாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.இதனை சரிசெய்யவேண்டும்.

    சூரியபிரபா : எனது வார்டில் உள்ள இரண்டு நகர்களில் சாலை அமைக்கும் பணி துவங்கி பல மாதம் ஆகியும் முழுமை பெறவில்லை. குடிநீர் பைப் லைன் உடைந்து குடிநீர் வீனாகி வருகிறது இதனை சரிசெய்யவேண்டும்.

    ராமு(திமுக) மீன்மார்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவேண்டும். கொள்ளிடமுக்கூட்டில் எரியாமல் உள்ள மின்விளக்கு களை சரிசெய்யவேண்டும் என்றார்.

    முபாரக்அலி(திமுக) பழையபேருந்துநிலையம் அருகேயுள்ள குறுகிய பாலத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடந்துவருகிறது.இதற்கு பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டவேண்டும்.

    ராஜசேகர் :(தேமுதிக)எனது வார்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை யோரம்தேங்கி நிற்கிறது இதனை சீரமைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரியும் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை விரைவில் சீரமைக்க விட்டால் கழிவு நீரில் இறங்கி போராட்டம் நடத்துவேன் என்றார்.

    ஜெயந்திபாபு(சுயே.) எனது வார்டில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் தேங்கி பலமாதங்க ளாக நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுதொல்லை அதிகரித்துள்ளது.சாலை களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

    உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சாமிநாதன்(திமுக) : பழையபேருந்துநிலைய கட்டண கழிப்பறை கழிவுநீர் இரட்டை காளியம்மன் தெருவில் உள்ள கால்வாயில் விடப்படுகிறது.

    இதனால் அதிகளவு கொசுஉற்பத்தியாகி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    இவ்வாறு கூட்டம் நடை பெற்றது.

    • வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
    • திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் ராஜபாளையம் ரிதம் அறிவுசார் குறை பாடுடையோர்க்கான சிறப்பு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர் முனியசாமி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், மாணவி ஜீவிதா நீளம் தாண்டுதல் போட்டியிலும், மாணவி அமலா கிரிக்கெட் பந்து எறிதல் போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். அவர்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    முன்னாள் படைவீரர் கொடிநாளையொட்டி 2019-ம் ஆண்டில் அதிக வசுல் செய்து சாதனை புரிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, சார் பதிவாளர் முத்துச்சாமி ஆகியோருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில், ஆனையூர், மங்களம், கீழ திருத்தங்கல் பகுதிகளை சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு தலா 2 சென்ட் வீதம் தலா ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 20ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.65ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 30ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    உ.பி.யில் பாலம் இடிந்த விபத்தில் அலட்சியப்போக்குடன் செயல்பட்டதாக உத்தரபிரதேச மாநில பால கழகத்தின் அதிகாரிகள் மீது சிக்ரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #VaranasiFlyoverCollapse
    வாரணாசி:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் ஒன்று நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 30 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிகாரிகள் 18 பேர் பலியானதாக தெரிவித்தனர். இந்த நிலையில் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், வாரணாசிக்கு நேற்று சென்றார். பால விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களை ஆஸ்பத்திரியில் சந்தித்து அவர் நலம் விசாரித்தார். அப்போது அவர் இந்த விபத்தில் 15 பேர் பலியானதாக தெரிவித்தார்.

    இதற்கு இடையே பாலம் இடிந்து விழுந்ததில், அலட்சியப்போக்குடன் செயல்பட்டதாக உத்தரபிரதேச மாநில பால கழகத்தின் அதிகாரிகள் மீது சிக்ரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ள நிலையில் மாஜிஸ்திரேட்டு விசாரணை தொடங்கி உள்ளது.  #VaranasiFlyoverCollapse 
    ×