search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "against officials"

    உ.பி.யில் பாலம் இடிந்த விபத்தில் அலட்சியப்போக்குடன் செயல்பட்டதாக உத்தரபிரதேச மாநில பால கழகத்தின் அதிகாரிகள் மீது சிக்ரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #VaranasiFlyoverCollapse
    வாரணாசி:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் ஒன்று நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 30 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிகாரிகள் 18 பேர் பலியானதாக தெரிவித்தனர். இந்த நிலையில் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், வாரணாசிக்கு நேற்று சென்றார். பால விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களை ஆஸ்பத்திரியில் சந்தித்து அவர் நலம் விசாரித்தார். அப்போது அவர் இந்த விபத்தில் 15 பேர் பலியானதாக தெரிவித்தார்.

    இதற்கு இடையே பாலம் இடிந்து விழுந்ததில், அலட்சியப்போக்குடன் செயல்பட்டதாக உத்தரபிரதேச மாநில பால கழகத்தின் அதிகாரிகள் மீது சிக்ரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ள நிலையில் மாஜிஸ்திரேட்டு விசாரணை தொடங்கி உள்ளது.  #VaranasiFlyoverCollapse 
    கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #HighCourt #TamilnaduGovernment #CooperativeUnionElection
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.  இந்த தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடப்பதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டது.

    சென்னை புதுப்பேட்டை கூட்டுறவு சங்கம், சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    அதில், தேர்தலின்போது, போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்து, பலர் கள்ள ஓட்டு போட்டதாகவும், கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இல்லாதவர்களை கொண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று காலையில் விசாரித்தார்.

    பின்னர், ‘கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தினமும் தொடரப்படுகின்றன. ஏராளமாக முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றன. எனவே, இந்த வழக்குகளின் விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    இதன்படி, பிற்பகலில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்தபோது, ஆணையர் ராஜேந்திரன் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் கூடுதல் செயலாளர் வாசுகி ஆஜரானார்.

    அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘கூட்டுறவு தேர்தலில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. விதிகளை மீறி செயல்படவில்லை. விண்ணப்பங்கள் எல்லாம் தேர்தல் விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படுகிறது’ என்று வாதிட்டார்.

    மனுதாரர்கள் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் வாதிட்டார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் ஏழை, எளிய பொதுமக்களுக்கு கொண்டு செல்வதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏழை, எளிய மக்களுக்காக இந்த கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

    ஆனால், அப்படிப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் அழியும் நிலையில் உள்ளது. இது வேதனை அளிக்கிறது. அழியும் நிலையில் உள்ள இந்த சங்கங்களை மேம்படுத்தவேண்டும். அதற்காக அந்த கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். சரியான முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.

    ஆனால், கூட்டுறவு சங்க தேர்தலில் பல முறைகேடுகள் நடக்கிறது. சில தேர்தல் அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுடன் கூட்டுச் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். விதிகளை மீறி, சட்டவிரோதமாக செயல்படுகின்றனர் என்று மனுதாரர்கள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

    எனவே, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தேர்தல் அதிகாரிகள் மீது தேர்தல் நன்னடத்தை விதிகளின் படியும், கிரிமினல் நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தன்னுடைய கடமையில் இருந்து தவறும்போது, அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

    எனவே, கூட்டுறவு சங்க தேர்தலில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் ஆணையத்திடம் புதிய புகாரை உடனே கொடுக்கவேண்டும். அந்த புகாரை பெற்றுக்கொண்ட பின்னர், தேர்தல் ஆணையம் வெளிப்படையான, நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

    தேவைப்பட்டால், புகார் கொடுத்தவரை நேரில் அழைத்து விசாரிக்கலாம். இதன்பின்னர், அந்த புகார் மனு மீது 8 வாரத்துக்குள் இறுதி முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.

    முடிவு எடுக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் முடிவை வெளியிடலாம். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளாலும், தேர்தல் முடிவு வெளியிட்டதாலும், யாராவது பாதிக்கப்பட்டால், அவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம், பிரிவு 90(1)ன் கீழ் தமிழக அரசிடம் புகார் மனு கொடுத்து முறையிடலாம்.

    இந்த புகார் மனுவை 6 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலித்து, தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் கூறியுள்ளார்.  #CooperativeUnionElection #HighCourt #Tamilnews 
    ×