search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிற்சி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
    X

    பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பயிற்சி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

    • இளங்கலை டாக்டர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    மருத்துவ தேசிய ஆணையம் கொண்டு வந்துள்ள இளங்கலை மருத்து வர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய கோரி தஞ்சையில் பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் தலைமை வகித்தார்.

    இளங்கலை மருத்துவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    மருத்துவ பாடத்திட்டங்களில் குழப்பத்தை ஏற்படு த்தும் நெக்ஸ்டை நடை முறைப்படுத்தக் கூடாது.

    இத்தேர்வை ரத்து செய்யக்கோரி மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×