search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "requests"

    • கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் நலச்சங்கத்தின் விதிமீறல் குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
    • தவளகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தட்சணா மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் அதிருப்தி ஆளர்கள் சார்பில் கேப்டன் பரமசிவம் தலைமையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 11-ந் தேதி சங்க தேர்தலை நிறுத்த வேண்டும். புதிய உறுப்பினர்களை பதிந்து பழைய உறுப்பினர்கள் இன்று வரை சந்தா செலுத்த செய்தும் முறைபடி தேர்தல் வாக்களர் பட்டியல் வெளியிட்டு வேட்புமனுவை பெற்று தேவையான அவகாசத்திற்கு பிறகே தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் நலச்சங்கத்தின் விதிமீறல் குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த சந்திப்பின் போது முன்னாள் தலைவர் கனகராஜ், முன்னாள் பொதுச்செயலாளர் ஜோதி குமார், கலியபெருமாள், ரங்கநாதன், ராஜா, ஜாபர், மற்றும் முன்னாள் ராணுவ வீரரும் தவளகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தட்சணா மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    • வாட்ஸ் அப் மூலம் புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும்.
    • பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 114 கிராம ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் உள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய அன்றாட தேவைகள் மற்றும் அடிப்படை கோரிக்கை நேரில் சந்தித்து மனுக்களாகவும், தகவல்களாகவும் தெரிவிக்க நேரம் மற்றும் பொருட்செலவை குறைக்கும் வகையில் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய கோரிக்கையான மின்சாரம், குடிநீர், தெரு மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை 6381666396 தொலைபேசி எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகைப்படத்துடன் அனுப்பினால் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டணியினர் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டணியினர் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்திருப்பேரையிலுள்ள வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆழ்வார்திருநகரி வட்டாரத்தலைவர் அகஸ்டின் ஞானதுரை தலைமையில் இம்மானுவேல், சுரேஷ் நியூமேன், ஜெபா பாண்டியன், தேவசகாயம், லாரன்ஸ், தாமஸ், இர்பான் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம்நடந்தது. மாவட்ட தலைவர் ஜீவா ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினர்.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் உத்தரவை உடனடியாகத் திரும்பபெற வேண்டும், காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் ஊதியமில்லாமல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி ஒப்புதல் வழங்கி, ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். முடிவில் பொருளாளர் ஜெயராஜ் நன்றி கூறினார். ஆழ்வார்திருநகரி வட்டாரச் செயலாளர் மகேஷ் துரைசிங் உட்பட 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏட்டப்படாததால் நள்ளிரவு வரை போராட்டம் தொடர்ந்தது.
    • கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றி தருகிறேன்.

    பட்டுக்கோட்டை:

    பல்வேறு கோரிக்கை களை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை திடீரென போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தின் போதுஒப்பந்த பணியாளர்களாக தங்களை பணியமர்த்த வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    தங்களின் சம்பளத்தை உயர்த்தி, பிரதி மாதம் மூன்றாம் தேதிக்குள்ளாக சம்பளம் வழங்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்களை நிரந்தர ஒப்பந்த பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர், மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் நள்ளிரவு வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே போனது.

    இந்நிலையில் நேற்று புதிதாக பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற கும ரன் போராட்டம் நடத்துபவர்க ளிடம் இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர் தூய்மை பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் அரசின் கொள்கை முடிவையும், தமிழக முதல்வர் எடுக்கும் முடிவையும் தவிர்த்து பட்டுக்கோட்டை நகராட்சி மூலமாக நிறைவேற்ற அதிகாரம் உள்ள கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் படிப்படியாக நிறைவேற்றி தருவதாகவும், நான் பட்டுக்கோட்டையில் இன்று தான் பணியில் சேர்ந்து உள்ளேன், எனக்கு குறைந்த கால அவகாசம் கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றி தருகிறேன் என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    • தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்க ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    • சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம்


    பெரம்பலூர்

    தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் வரதன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் நிறுவனர் நல்லப்பன் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், சங்கத்தின் பொதுச் செயலாளர் நேரு, அமைப்பு செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து பணியாற்றி கொண்டிருக்கும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு விரைவில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மாறுபட்ட பாடத்தில் உயர்கல்வி பயின்ற அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் 2 ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். அரசாணை எண் 194, நாள் 12.9.2018-ன்படி 6.4.2018 என்ற தேதியை நீக்கம் செய்து அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் 50 சதவீதத்தை கணக்கில் எடுத்து ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்."

    • மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
    • கொப்பரை தேங்காய் வருடம் முழுவதும் கொள்முதல் செய்து தேங்காய் அதிகம் விளையும் ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் தேங்காய் எண்ணெய் நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தென்னை சார்ந்த தொழில் பூங்கா அமைத்து தர வேண்டும். தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.

    கொப்பரை தேங்காய் வருடம் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும் தேங்காய் அதிகம் விளையும் ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தேங்காய் நார் தொழிற்சாலைகளை பாதுகாக்க வேண்டும். மதிப்புக் கூட்டப்பட்ட தேங்காய் பொருட்களின் ஏற்றுமதிக்கு உதவி செய்ய வேண்டும். தென்னங்கன்றுக்களுக்கு பராமரிப்பு மானியம் வழங்க வேண்டும்‌ என 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, தென்னை விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    • காரணம்பேட்டையில் ஜவுளி சந்தை இருந்தால் விவசாயிகள் பயனடைவார்கள்.

    கோவை:

    ஜவுளித்துறையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயலிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மனு கொடுத்தனர்.

    மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து ெகாள்ள கோவை வந்தார். இந்த நிலையில் அவரை நேற்று இரவு எதிர்க்கட்சி கொறடாவும். முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி சந்தித்து கோரிக்கை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பருத்தியின் விலை ஏற்றத் தாழ்வு காரணமாக, ஸ்பின்னிங் மில்ஸ் விசைத்தறிகள், கைத்தறி ஜவுளி மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, தொழில்துறை வளர்ச்சியில் ஆபத்து உள்ளது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தியாவில் ஜவுளி சந்தை இப்போது அகமதாபாத்தில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் சோமனூர் அல்லது பல்லடம் அல்லது காரணம்பேட்டையில் ஜவுளி சந்தை இருந்தால் விவசாயிகள் பயனடைவார்கள். விவசாயிகள் எதிர்பார்க்கும் மானியம் வழங்கினால் விவசாயிகள் அதிக பருத்தியை உற்பத்தி செய்வார்கள். ஜவுளித் தொழிலின் வளர்ச்சிக்கு மின்சார மானியம் வழங்க வேண்டும். கோவை சத்தி மெயின் ரோட்டில் இருந்து கணபதி எப்.சி.ஐ இந்திய உணவுக் கழகத்தின் சொந்தச்சாலை )ரோடு வரை மிகவும் பரிதாபமாக உள்ள சாலையை சீரமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    என்.டி.சி.மில்ஸ் வியாபாரத்தில் மிகவும் பின்தங்கி விட்டதால், அந்த ஆலைகளை மேம்படுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், பலருக்கு வேலை கிடைக்கும். இந்தியாவில் பருத்தி உற்பத்தி அமெரிக்கா மற்றும் சீனாவுடன் ஒப்பிடுகையில் தரமற்றதாக உள்ளது. எனவே விதை வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம் அதிக பருத்தி ஹெக்டேர் உற்பத்தி செய்ய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஜவுளித்துறை சம்பந்தமான தொழில்களில் வட இந்திய தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தங்குவதற்கு போதிய இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    எனவே வாடகை அடிப்படையில் ஒருதற்காலிக தங்குமிடம் அல்லது நிரந்தர குடியிருப்பு வழங்கினால் நன்றாக இருக்கும். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனை மூலம் மருத்துவ உதவி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மத்திய மந்திரி முருகன், பாரதீய ஜனதா தலைவர், அண்ணாமலை, வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கோவை வந்த மத்திய மந்திரி பியூஸ் கோயலை எதிர்க்கட்சி கொறடாவும்,முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுடன் சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் போது மந்திய மந்திரி முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, ஆகியோர் உடன் இருந்தனர்.

    பஞ்சாப் நேஷனல் வங்கி மோடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியை கைது செய்யுமாறு ஆண்டிகுவா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #PNBFraud #MehulChoksi
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக ரூ.13,400 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.



    இந்தநிலையில் கரீபிய தீவு நாடான ஆண்டிகுவா-பர்புடாவின் குடியுரிமையை பெற்றுள்ளதாக மெகுல் சோக்சி கடந்த வாரம் அறிவித்தார். இதன் மூலம் அவர் ஆண்டிகுவாவில் வசித்து வருவது உறுதியாகி உள்ளது. எனவே அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    அதன்படி மெகுல் சோக்சியை கைது செய்யுமாறு ஆண்டிகுவா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஆண்டிகுவா-பர்புடா அதிகாரிகளை நேரில் சந்தித்து இது தொடர்பாக வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் தரை, கடல், வான் வழியான அவரது பயணங்களுக்கு தடை விதிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.  #PNBFraud #MehulChoksi #Tamilnews
    26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கீழையூரில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 26 அம்க கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.60-ஐ ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

    ஊராட்சி ஒன்றியங்களின் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    ஊராட்சி செயலாளராக பணியாற்றி 2003-ம் ஆண்டுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் முந்தைய பணி காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பொறியாளர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வேலை நிறுத்தப்பட்ட போராட்டம் காரணமாக கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது. 
    ×