search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PNB Fraud"

    மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையில் அடைப்பீர்களா என லண்டன் நீதிபதி இளகிய மனதுடன் கேள்வி கேட்டார். #NiravModi #VijayMallya
    லண்டன்:

    பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி, சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் அவரது ஜாமீன் மனு 2-வது முறையாக நேற்று முன்தினமும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, இந்தியா சார்பில் ஆஜரான கிரவுண் சட்டப்பணிகள் குழு வக்கீல்களிடம் பேசிய நீதிபதி எம்மா அர்பத்னோட், நிரவ் மோடியை நாடு கடத்தினால் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த வக்கீல், ‘ஏற்கனவே விஜய் மல்லையாவுக்காக தயார் செய்யப்பட்டு இருக்கும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார்’ என்று கூறினார். உடனே நீதிபதி, ‘மல்லையாவுக்காக தயாராகும் சிறையின் வீடியோவை ஏற்கனவே பார்த்தோம். அதில் இடமும் இருந்தது. இருவரையும் ஒரே சிறையிலா அடைப்பீர்கள்?’ என இளகிய மனதுடன் கேட்டார்.

    முன்னதாக, நிரவ்மோடிக்கு வயதான பெற்றோர் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயிலும் மகன் இருப்பதாகவும், அத்துடன் அவர் செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருவதாகவும் கோர்ட்டில் கூறிய அவரது வக்கீல் கிளேர் மோண்ட்கோமெரி, எனவே அவர்களை பராமரிப்பதற்காக நிரவ் மோடியை ஜாமீனில் விட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனாலும் நீதிபதி அவரது வாதத்தை ஏற்கவில்லை.

    இங்கிலாந்தில் செல்லப்பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே அதை முன்வைத்து இந்த வாதத்தை நிரவ் மோடி தரப்பு எடுத்து வைத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NiravModi #VijayMallya
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். #PNBFraud #MehulChoksi #IndianCitizenship
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ்மோடி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. வெளிநாடு தப்பிச்சென்ற அவர்கள் இருவரையும் இந்தியா தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது.

    ஆண்டிகுவா நாட்டுக்கு தப்பிச்சென்ற மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்துவர தூதரகம் வழியாகவும், சட்டரீதியாகவும் இந்தியா முயற்சி செய்துவருகிறது. இந்நிலையில் மெகுல் சோக்சி கடந்த ஆண்டு ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்றார். இந்திய குடிமக்கள் வெளிநாட்டு குடியுரிமை பெறும்போது தங்கள் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அதன்படி மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.  #PNBFraud #MehulChoksi #IndianCitizenship 
    விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு மெகுல் சோக்சியின் உடல்நிலை தகுதியாக இருந்தால், அவர் கோர்ட்டில் ஆஜராவார் என்று மும்பை கோர்ட்டில் வக்கீல் தெரிவித்தார். #MehulChoksi #PunjabBankFraud #PNBFraud
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி ரூ.13 ஆயிரத்து 400 கோடி மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிஓடி விட்டனர்.

    மெகுல் சோக்சி விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள்’ சட்டப்படி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரி, மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.



    இதற்கு கடந்த மாதம் 30-ந் தேதி பதில் மனு தாக்கல் செய்த மெகுல் சோக்சி, தான் மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதாகவும், எனவே, 41 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து வர முடியாது என்றும் கூறி இருந்தார்.

    இந்நிலையில், அமலாக்கத்துறையின் மனு, மும்பை கோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மெகுல் சோக்சி சார்பில் அவரது வக்கீல் சஞ்சய் அப்போட் ஆஜரானார். அவர் கோர்ட்டில் கூறியதாவது:-

    மெகுல் சோக்சியின் உடல்நிலை, விமான பயணத்துக்கு தகுதியானதாக இல்லை. எனவே, வீடியோ கான்பரன்சிங் மூலமாகவோ அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆன்டிகுவா நாட்டுக்கு நேரில் சென்றோ அவரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யலாம். இல்லாவிட்டால், 3 மாதங்கள் காத்திருங்கள். மெகுல் சோக்சி உடல்நிலை முன்னேறினால், அவர் இந்தியாவுக்கு நேரில் வந்து ஆஜராவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MehulChoksi #PunjabBankFraud #PNBFraud
    ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமாக இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள், வைர நகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.255 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது. #PNBFraud #NiravModi #ED
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர்கள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாக வசித்து வருகின்றனர். இந்த வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.



    இந்த வழக்கில் நிரவ் மோடியின் சொத்துகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமாக இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள், வைர நகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.255 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது.

    இவற்றை முடக்கி இருப்பதற்கான உரிய உத்தரவு நகலை விரைவில் ஹாங்காங் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பி வைக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. #PNBFraud #NiravModi
    11,400 கோடி ரூபாய் வங்கிக்கடன் மோசடியில் தலைமறைவாக பதுங்கியுள்ள மெஹுல் சோக்சியின் 218 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்தது. #PNBfraud #EDattaches #EDattaches #Choksiassets #MehulChoksi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார்.

    இதைதொடர்ந்து, மெஹுல் சோக்சிக்கு எதிராக ஜாமினில் விடுவிக்க முடியாத கைது வாரன்ட்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்தது. முன்னர் லண்டனில் இருந்ததாக நம்பப்பட்ட மெஹுல் சோக்சி அங்கிருந்து தப்பிச்சென்று, கரிபியன் நாடுகளான ஆண்டிகுவா பர்புடாவில் தற்போது தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், கருப்புப்பணப் பதுக்கல் தடுப்பு சட்டத்தின்கீழ் மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள மெஹுல் சோக்சியின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு அமலாக்கத்துறை நீதிமன்றம் 3 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

    இந்த உத்தரவின் அடிப்படையில் மெஹுல் சோக்சி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 218 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
    #PNBfraud #EDattaches #EDattaches #Choksiassets #MehulChoksi
    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்பாக மெகுல் சோக்சியின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கை தொடரும் என நிதி மோசடி தடுப்பு சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. #PNBFraud #MehulChoksi #PMLA
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரும், தொழிலதிபருமான மெகுல் சோக்சி ஆகியோர் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.



    இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் இருவரின் சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கி வருகிறது. இதில் மெகுல் சோக்சியின் அடுக்குமாடி வீடுகள், அலுவலகங்கள், நிலம் என ரூ.1,210 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை பி.எம்.எல்.ஏ. ஆணையம் விசாரித்தது.

    இதில் அமலாக்கத்துறை அளித்த சான்றுகள் மற்றும் விண்ணப்பங்களை பரிசீலித்த இந்த ஆணையம், முடக்கப்பட்ட மெகுல் சோக்சியின் சொத்துகள் அனைத்தும் பணமோசடி சொத்துகள் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்து உள்ளது. எனவே இந்த முடக்க நடவடிக்கை தொடர வேண்டும் என உத்தரவிடுவதாகவும் ஆணையம் அறிவித்தது.

    மெகுல் சோக்சியின் முடக்கப்பட்ட சொத்துகளில், விழுப்புரத்தில் உள்ள நிலமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  #PNBFraud #MehulChoksi #PMLA
    பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி தொடர்பாக வங்கியின் முன்னாள் இயக்குனர் உஷா அனந்தசுப்பிரமணியத்தை பணிநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. #PNBFraud #UshaAnanthasubramanian
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இந்த வங்கியில் 2015 ஆகஸ்டு முதல் 2017 மே வரையிலான காலகட்டத்தில் 2 முறை நிர்வாக இயக்குனாக இருந்தவர் உஷா அனந்தசுப்பிரமணியன். பின்னர் இவர் அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்தார்.



    பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனராக உஷா அனந்தசுப்பிரமணியன் பதவியில் இருந்தபோது தான், நிரவ் மோடியின் கடன் மோசடி நடந்தது. எனவே இந்த மோசடி தொடர்பாக உஷா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதால் அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன் அவர் விலகினார். எனினும் ஒரு சாதாரண ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற இருந்தார்.

    ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி தொடர்பாக அவரை மத்திய அரசு நேற்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.  #PNBFraud #UshaAnanthasubramanian #Tamilnews
    பஞ்சாப் நேஷனல் வங்கி மோடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியை கைது செய்யுமாறு ஆண்டிகுவா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #PNBFraud #MehulChoksi
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக ரூ.13,400 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.



    இந்தநிலையில் கரீபிய தீவு நாடான ஆண்டிகுவா-பர்புடாவின் குடியுரிமையை பெற்றுள்ளதாக மெகுல் சோக்சி கடந்த வாரம் அறிவித்தார். இதன் மூலம் அவர் ஆண்டிகுவாவில் வசித்து வருவது உறுதியாகி உள்ளது. எனவே அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    அதன்படி மெகுல் சோக்சியை கைது செய்யுமாறு ஆண்டிகுவா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஆண்டிகுவா-பர்புடா அதிகாரிகளை நேரில் சந்தித்து இது தொடர்பாக வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் தரை, கடல், வான் வழியான அவரது பயணங்களுக்கு தடை விதிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.  #PNBFraud #MehulChoksi #Tamilnews
    வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அதிகாரிகள் தற்போது ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர். #PNBFraud #NiravModi
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடந்த ஜனவரி மாதமே வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.

    இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளின் விசாரணைக்கு நிரவ் மோடி ஒத்துழைப்பு கொடுக்காததால், அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் (இன்டர்போல்) உதவி நாடப்பட்டது.



    இதை ஏற்று நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அதிகாரிகள் தற்போது ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர். நிரவ் மோடியை தங்கள் நாட்டில் பார்த்தால் அவரை பிடிக்கவோ, கைது செய்யவோ வேண்டும் என தனது 192 உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ள இன்டர்போல் அதிகாரிகள், பின்னர் அவரை நாடு கடத்துவதற்கான நடைமுறைகளை தொடங்கலாம் எனக்கூறியுள்ளனர்.

    நிரவ் மோடிக்கு எதிராக அமலாக்கத்துறை அளித்துள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகளையும் தங்கள் நோட்டீசில் இன்டர்போல் அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர். இதன் மூலம் நிரவ் மோடிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  #PNBFraud #NiravModi #Tamilnews 
    வங்கிக் கடன் மோசடியில் சிக்கி தலைமறைவான தொழிலதிபர் நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக சர்வதேச போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து அவரைத் தேடும் பணியை தொடங்கி உள்ளது. #NiravModi #PNBFraud #InterpolRedCornerNotice
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கியிடம் இருந்தும் ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கையைத் தவிர்க்க அவர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

    மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகிறது. விசாரணை முகமைகள் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றன. நிரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் அவர்களுடைய நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை முகமைகள் பறிமுதல் செய்து வருகின்றன. நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய விசாரணை முகமைகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.

    சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நிரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடர்ந்து சம்மன்கள் அனுப்பி வருகின்றன. நிரவ் மோடியின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது. பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட தகவலை இண்டர்போலிடம்  சிபிஐ தெரிவித்தது. அத்துடன், நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி கேட்டுக்கொண்டது.



    சி.பி.ஐ. அளித்த தகவல்களை உறுதி செய்து, அதன் அடிப்படையில் நிரவ் மோடியை பிடிக்க இண்டர்போல் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக நிரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி மற்றும் அவர்களின் நிறுவன தலைமை நிர்வாகி சுபாஷ் பராப் ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை இண்டர்போல் பிறப்பித்துள்ளது. அந்த நோட்டீசில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரின் இருப்பிடம் தெரிந்தால் அவர்களை கைது செய்யும்படி 192 உறுப்பு நாடுகளிடமும் இண்டர்போல் கூறி உள்ளது.

    எனவே, இண்டர்போல் உறுப்பு நாடுகளில் எதாவது ஒரு நாட்டில் நிரவ் மோடி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #NiravModi #PNBFraud #PNBScamCase #InterpolRedCornerNotice
    பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தி வரக்கோரி, மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனு தாக்கல் செய்தது. #PNBFradu #NiravModi
    மும்பை:

    ரூ.13 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன. இவ்விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, நிரவ் மோடி மற்றும் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    அதன் அடிப்படையில், நிரவ் மோடிக்கு எதிராக மும்பை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்தி வரக்கோரி, மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனு தாக்கல் செய்தது. நிரவ் மோடி இங்கிலாந்து, பெல்ஜியம் உள்பட எந்த நாட்டில் இருந்தாலும் அவரை நாடு கடத்திக்கொண்டு வருமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  #PNBFradu #NiravModi #Tamilnews 
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் விரைவில் ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று செலுத்தாமல் மோசடி செய்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இது தொடர்பாக நிரவ்மோடி, அவரது உறவினர் மொகுல் சோக்ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இருவரும் கடந்த ஜனவரி மாதமே இந்தியாவை விட்டு தலைமறைவாகி வெளிநாடு சென்றனர். அவர்களது சொத்துக்கள், வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை முடக்கி சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்தது.

    இதற்கிடையே நிரவ் மோடி இங்கிலாந்தில் தங்கி இருப்பதாகவும், அந்நாட்டில் அடைக்கலம் கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அவரை பிடிக்க இன்டர்போல்(சர்வதேச) உதவியை சி.பி.ஐ. நாடியது.

    நிரவ் மோடிக்கு எதிரான ஆவணங்களை இன்டர்போலுக்கு சி.பி.ஐ. அனுப்பி வைத்தது. அவர் மீது மும்பை கோர்ட்டு பிறப்பித்த ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட் மற்றும் வழக்கின் குற்றப்பத்திரிகை விவரங்களை சி.பி.ஐ. கொடுத்தது.

    மேலும் இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இன்டர்போல் கூட்டு அமைப்புக்கு பலமுறை சி.பி.ஐ. நினைவூட்டல் கடிதமும் எழுதியது.

    இந்த நிலையில் நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் விரைவில் ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சி.பி.ஐ. அளித்துள்ள ஆவணங்களை இன்டர்போல் ஆய்வு செய்தது. இந்த ஆவணங்கள் குறித்து திருப்தி தெரிவித்தது. நிரவ்மோடிக்கு எதிரான ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதால் இன்டர்போல் இன்றோ அல்லது அடுத்த வாரம் தொடக்கத்திலேயோ ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்து இன்டர் போலிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இவர்கள் விமான நிலையம் வந்து வேறு நாட்டுக்கு செல்ல முடியாது. விமான நிலையத்திலேயே கைது செய்யப்படுவார்கள்.

    இதேபோல நிரவ் மோடியின் உறவினர் மொகுல் சோக்ஷிக்கு எதிராகவும் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.

    இதற்கிடையே நிரவ் மோடியிடம் பல பாஸ்போர்ட்டுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று ஆலோசிக்கிறார்கள்.

    ×