search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Red Corner Notice"

    • மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பித்த ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவை இன்டர்போல் நீக்கியது.
    • இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    புதுடெல்லி:

    பஞ்சாப் தேசிய வங்கி பணமோசடி வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் வைர வியாபாரி மெகுல் சோக்சி. அவருக்கு எதிராக பிறப்பித்த ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவை இன்டர்போல் நீக்கியது. எனினும், இந்தியாவில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது. இந்த வழக்கு விசாரணையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இருக்கிறது. ஆனால், மோடிஜியின் நமது மெகுல் பாய், இன்டர்போலில் இருந்து விடுவிக்கப்படுகிறார். சிறந்த நண்பருக்காக பாராளுமன்றம் முடக்கப்படும்போது 5 ஆண்டுக்கு முன் தப்பியோடிய பழைய நண்பருக்கு உதவுவதில் இருந்து எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்? என பதிவிட்டுள்ளார்.

    வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. #RedCornerNotice #MehulChoksi
    புதுடெல்லி:

    குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.  இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.



    இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி சர்வதேச போலீசை (இண்டர்போல்) சிபிஐ கேட்டுக்கொண்டது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்ற இண்டர்போல், மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இத்தகவலை சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் இன்று தெரிவித்துள்ளார்.

    தன் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் சதியின் விளைவு என்று மெகுல் சோக்சி கூறியதாகவும், இந்தியாவில் சிறைச்சாலையில் உள்ள வசதிகள், தனது பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது தப்பி ஓடியவர்களை கைது செய்வதற்காக இண்டர்போல் தனது உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் சர்வதேச கைது வாரண்ட் ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சொந்த நாட்டுக்கு அவரை கடத்த வேண்டும். #RedCornerNotice #MehulChoksi

    வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அதிகாரிகள் தற்போது ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர். #PNBFraud #NiravModi
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடந்த ஜனவரி மாதமே வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.

    இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளின் விசாரணைக்கு நிரவ் மோடி ஒத்துழைப்பு கொடுக்காததால், அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் (இன்டர்போல்) உதவி நாடப்பட்டது.



    இதை ஏற்று நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அதிகாரிகள் தற்போது ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர். நிரவ் மோடியை தங்கள் நாட்டில் பார்த்தால் அவரை பிடிக்கவோ, கைது செய்யவோ வேண்டும் என தனது 192 உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ள இன்டர்போல் அதிகாரிகள், பின்னர் அவரை நாடு கடத்துவதற்கான நடைமுறைகளை தொடங்கலாம் எனக்கூறியுள்ளனர்.

    நிரவ் மோடிக்கு எதிராக அமலாக்கத்துறை அளித்துள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகளையும் தங்கள் நோட்டீசில் இன்டர்போல் அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர். இதன் மூலம் நிரவ் மோடிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  #PNBFraud #NiravModi #Tamilnews 
    வங்கிக் கடன் மோசடியில் சிக்கி தலைமறைவான தொழிலதிபர் நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக சர்வதேச போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து அவரைத் தேடும் பணியை தொடங்கி உள்ளது. #NiravModi #PNBFraud #InterpolRedCornerNotice
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கியிடம் இருந்தும் ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கையைத் தவிர்க்க அவர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

    மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகிறது. விசாரணை முகமைகள் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றன. நிரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் அவர்களுடைய நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை முகமைகள் பறிமுதல் செய்து வருகின்றன. நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய விசாரணை முகமைகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.

    சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நிரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடர்ந்து சம்மன்கள் அனுப்பி வருகின்றன. நிரவ் மோடியின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது. பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட தகவலை இண்டர்போலிடம்  சிபிஐ தெரிவித்தது. அத்துடன், நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி கேட்டுக்கொண்டது.



    சி.பி.ஐ. அளித்த தகவல்களை உறுதி செய்து, அதன் அடிப்படையில் நிரவ் மோடியை பிடிக்க இண்டர்போல் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக நிரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி மற்றும் அவர்களின் நிறுவன தலைமை நிர்வாகி சுபாஷ் பராப் ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை இண்டர்போல் பிறப்பித்துள்ளது. அந்த நோட்டீசில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரின் இருப்பிடம் தெரிந்தால் அவர்களை கைது செய்யும்படி 192 உறுப்பு நாடுகளிடமும் இண்டர்போல் கூறி உள்ளது.

    எனவே, இண்டர்போல் உறுப்பு நாடுகளில் எதாவது ஒரு நாட்டில் நிரவ் மோடி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #NiravModi #PNBFraud #PNBScamCase #InterpolRedCornerNotice
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் விடுக்க இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #NiravModi #CBI #PNBScam #Interpol #redcornernotice

    புதுடெல்லி:

    மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் அளித்த நிலையில் நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் வெளிநாட்டு தப்பிச்சென்று விட்டனர். 

    இந்த வழக்கில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நிரவ் மோடி அவருடைய குடும்பத்தினர் தவிர, பஞ்சாப் நேஷனல் வங்கியின் 4 உயர் அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்ட இருந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வழக்கமான அறிக்கை தாக்கல் செய்தது.

    அதில், “நிரவ் மோடி வங்கிக்கு செலுத்தவேண்டிய ஒட்டு மொத்த கடன் தொகை ரூ.14,356 கோடி ஆகும். வங்கி உறுதியளிப்பு கடிதங்களை தவறான முறையில் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளிலும் இந்த மோசடி நடந்து இருக்கிறது. இதில் நிரவ் மோடியின் ஆபரண நிறுவனமும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டு உள்ளனர்” என்று கூறப்பட்டு இருக்கிறது. 



    நிரவ் மோடி, சோக்சி உள்ளிட்டோரின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலை ஏற்கனவே சிபிஐ நாடியது. வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பாஸ்போர்ட் மூலம் லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது சகோதரர் நிஷால் மோடி பெல்ஜியம் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அண்ட்வெர்ப் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க, மீண்டும் இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படும் பட்சத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பதுங்கியுள்ள நாட்டிலேயே கைது செய்யப்பட்டு, அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #NiravModi #CBI #PNBScam #Interpol #redcornernotice
    ×