நிரவ் மோடி எந்த நேரத்திலும் கைதாகலாம் - ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர்போல்

வங்கிக் கடன் மோசடியில் சிக்கி தலைமறைவான தொழிலதிபர் நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக சர்வதேச போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து அவரைத் தேடும் பணியை தொடங்கி உள்ளது. #NiravModi #PNBFraud #InterpolRedCornerNotice
நிரவ் மோடி எந்த நேரத்திலும் கைதாகலாம் - ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர்போல்
Published on

பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கியிடம் இருந்தும் ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கையைத் தவிர்க்க அவர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகிறது. விசாரணை முகமைகள் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றன. நிரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் அவர்களுடைய நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை முகமைகள் பறிமுதல் செய்து வருகின்றன. நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய விசாரணை முகமைகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நிரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடர்ந்து சம்மன்கள் அனுப்பி வருகின்றன. நிரவ் மோடியின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது. பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட தகவலை இண்டர்போலிடம்  சிபிஐ தெரிவித்தது. அத்துடன், நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி கேட்டுக்கொண்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com