search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demands"

    • அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாா்வசம் ஒப்படைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
    • ஒரே மையத்தில் இரண்டு திட்டங்களை தனிநபா்களை வைத்து சமைப்பது சாத்தியமில்லை.

    திருப்பூர் :

    திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற சத்துணவு ஊழியா்கள் கூறியதாவது :- அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாா்வசம் (சுயஉதவிக் குழு பெண்கள்) ஒப்படைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. ஒரே மையத்தில் இரண்டு திட்டங்களை தனிநபா்களை வைத்து சமைப்பது சாத்தியமில்லை. ஆகவே, சத்துணவு மையங்களில் உள்ள உணவுப் பொருள்கள், பாத்திரம், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருள்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தனியாரிடம் மையத்தின் சாவியைக் கொடுப்பதில்லை என்று சங்கம் முடிவெடுத்துள்ளது.மேலும் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியா்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் என்றனா்.

    இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளா் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • அனைத்து தலித் இயக்கங்களின் நியாயமான கோரிக்கைகளை வெல்வது என முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட அனைத்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வக்கீல் வின்சென்ட் ராஜ் தலைமையில், அனைத்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மூத்த போராளிகள் நிரவி தங்கராசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் நிலவழகன், டாக்டர் அம்பேத்கர் கல்வி பொருளாதாரம் மேம்பாட்டு மையம் நிறுவனர் தணிகாசலம், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் சூர்யா, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல கூட்டமைப்பின் தலைவர் நாகூரான், சமூக நீதிக் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணை ப்பாளர் வின்சன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், திட்டமிட்டப்படி எதிர்வரும் 29-ந் தேதி தொடர் முழுக்க போராட்டம் நடத்தி, அனைத்து தலித் இயங்களின் நியாயமான கோரிக்கைகளை வெல்வது என முடிவு செய்யப்பட்டது.

    • கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதாக கட்டிட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
    • திருமங்கலத்தில் அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலா ளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் அஜந்தன் வரவேற்றார். சட்ட ஆலோசகர் சக்திவேல் தீர்மானம் வாசித்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- பென்சன்தாரர்களுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதியத்தொகை ரூ1,000-ல் இருந்து ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தொகை ரூ.500-ல் இருந்து ரூ1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை விளக்கி ஒவ்வொரு மாவட்ட வாரியாக விழிப்புணர்வு தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது.

    மேற்கண்டவை உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதுகுறித்து மாநில தலைவர் மகாலிங்கம் கூறுகையில், தற்போது கட்டுமான பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென முதல்-அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    • மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்.
    • திருச்சிற்றம்பலத்தில் உள்ள பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டரை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சந்தித்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோரிக்கை சம்பந்த மான மனுக்களை வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    இலஞ்சி பேரூராட்சியில் மண்பாண்ட தொழில் மிகப் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்கி வருகிறது.

    பானைகள் தயார் செய்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிற குடோன் கடந்த வாரம் காற்றில் சேதம் அடைந்து உள்ளது.

    எனவே மீண்டும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, தவணை மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழு வார்டுகளில் சாலை பணிகள் அமைக்கப்பட வேண்டும், குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட வேண்டும், என்ற கோரிக்கையை வைத்துள்ளார். எனவே அதனையும் நிறைவேற்ற வேண்டும்.

    தொடர்ந்து தென்காசி ஒன்றிய துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன் திருச்சிற்றம்பலத்தில் செயல்பட்டு வருகிற பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை யையும் வைத்துள்ளார்.

    மாவட்ட கழகம் சார்பில் ஏற்கனவே மாவட்ட தலைமை நீதிமன்றம் அமைப்பதற்கும் நீதிபதிகள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்டுவதற்கும் 2ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அதற்கு முறையாக பாதை வசதி இல்லை. ஏற்கனவே இருந்த மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்ததன் பேரில் அறநிலை துறை ஆணையர் மற்றும் அறநிலை துறை அமைச்சர், அதன்பிறகு இணை ஆணையர் ஆகியோ ரை சந்தித்து பிள்ளையன் கட்டளைக்கு பாத்தியப்பட்ட இடம் சுமார் 40 சென்ட் நீதிமன்றம் கட்டப்பட இருக்கிற இடத்திற்கு வழி பாதைக்கு தேவைப்படுகிறது.

    ஆணையரிடமிருந்து கடிதம் வந்ததன் அடிப்படை யில் மாவட்ட கலெக்டர் தாங்களே பாதைக்கு தேவையான இடங்களை அதற்குரிய கட்டணத்தை அறநிலையத்துறைக்கு செலுத்தி விட்டு நில ஆர்ஜிதம் செய்யலாம் என்று சட்டத்தில் விதி இருக்கிறது. அதன் அடிப்படையில் நீதிமன்ற கட்டிடம் அமையும் இடத்திற்க்கு செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், மாவட்ட துணை செயலாளர் கென்னடி, சொக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி பாண்டியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தென்காசி ஒன்றிய துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய உதயநிதி நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன், சந்தோஷ், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வடமாநில தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
    • வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

    திருமங்கலம்

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் பரவியதால் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்றனர். இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டது. வதந்தி பரப்பி யவர்கள் கைது செய்யப்ப ட்டனர்.

    இந்த நிலையில் தமிழக காவல்துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழில் பேட்டையில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலா ளர்களை வரவழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பி ரண்டு வசந்தகுமார் தலைமை தாங்கி பேசும்போது கூறுகையில், ''வட மாநில தொழி லாளர்களுக்கு பாது காப்பான சூழ்நிலை உருவாக்கிட வேண்டும். அவர்களின் குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் புகார்கள் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்'' என்றார்.

    மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான வதந்தி பரவியது. இதனைப் பரப்பிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தொழில் அமைதியாக நடைபெற வேண்டும். இதற்காக தொழிலதிபர்கள் மற்றும் வட மாநில தொழிலா ளர்களை அழைத்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.

    இதன் ஒரு பகுதியாக கப்பலூர் தொழிற்பேட்டையில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை அழைத்து அறிவுரை வழங்கினோம். வட மாநில தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். சம்பளம் மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்க தலைவர் ரகுநாத ராஜா பேசியதாவது:-

    கப்பலூர் தொழிற்பேட்டையில் 16 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 2500-க்கும் மேற்பட்ட வட மாநில தொழி லாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடு க்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் தொழிலா ளர்களை விட அவர்களுக்கு நல்ல முறையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வதந்திகளால் வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.   தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை காவலர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பணி செய்பவர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

    பணியின் போது இறந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.  இதில் மாநில செயலாளர் டெல்லி அப்பாதுரை, மாவட்ட அமைப்பாளர் தணிகைவேல், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாநில பிரச்சார செயலாளர் அதிதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிராஜுதீன் நன்றி கூறினார்.

    • மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    • கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தியப்படி ஆர்ப்பாட்டம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதில், தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து 31-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஆனால், விவசாயிகளின் கோரிக்கை குறித்து இதுவரை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாததை கண்டித்தும், உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் விவசாயிகள் ஏராளமானோர் கூட்டத்தை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன்பு கைகளில் கரும்புகளை ஏந்தியப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
    • அரசு துறைகளில் பயன்படுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறு த்தி ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தின ரத்து செய்து அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தி னை வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு, நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு ஆகியவர்களை உடனே வழங்கிட வேண்டும்.

    சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட பணியாளர்க ளுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

    ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். கரு வூலம் உள்ளிட்ட அரசு துறைகளில் பயன்ப டுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவாரூர் வட்டாட்சி யர் அலுவலகம்முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

    நெடுஞ்சா லைத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் தம்பிதுரை தலைமை வகித்தார்.

    திருவாரூர் மின்வா ரிய அலுவலகம்முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு கிளைச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    திருவாரூர்க லெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசு ஊழியர் சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    • தமிழகத்தின் முதல்-அமைச்சரும், நமது குடும்பத்தின் மூத்த சகோதரருமான மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
    • நிறைய துறைகள் தென்காசி மாவட்டத்திற்கு வரவேண்டி உள்ளது.

    தென்காசி:

    தென்காசியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் வருவாய் துறை அமைச்சரும், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழகத்தின் முதல்-அமைச்சரும், நமது குடும்பத்தின் மூத்த சகோதரருமான மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இந்த மாவட்டத்தில் குற்றாலம் மிகவும் குளுமையான பகுதி. முதல்-அமைச்சரின் எண்ணத்தின்படி இன்று குளுமை அதிகமாக உள்ளது. இந்த குளுமை தொடர்ந்து மக்களுக்கு கிடைக்கும்.

    இந்த குளுமை நீடிக்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மிகவும் அக்கறையுடன் இருக்கிறார். நமது மாவட்டம் நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து வந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் நிறைய துறைகள் தென்காசி மாவட்டத்திற்கு வரவேண்டி உள்ளது.

    இங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்கான கோரிக்கைகளை வைத்தனர். அவை யெல்லாம் தெரியாதவரா நமது முதல்-அமைச்சர்.

    நீங்கள் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் கொடுக்கும் மனுக்களை படித்து பார்த்து உடனடியாக முடிவு எடுக்கிற உன்னதமான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    நமது கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும். பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் நானும், முதல்-அமைச்சருக்கு நியாபகப்படுத்தி தென்காசி மாவட்டம் சிறந்த மாவட்டமாக முன்னேற வழிவகை செய்வேன்.

    ஒவ்வொரு முறையும் நான் அவரை சந்திக்க செல்லும் போது தென்காசி மாவட்டம் எப்படி இருக்கிறது என்று அன்போடு விசாரிப்பார். அவர் மிகவும் பாசத்தோடு உள்ளார். அவரது பாசம் உங்களது எதிர்காலத்தை சுபிட்சத்தை உருவாக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறனே்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருப்பத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மக்கள் உரிமை கூட்டணி மாநில பொதுச் செயலாளர் விஸ்டம் கமருதீன் மனு அளித்தார். அதில், நகரில் செயல்பட்டு வரும் மருதுபாண்டியர் அரசு மருத்துவ மனையில் விபத்து போன்ற காலகட்ட ங்களில் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

    பொது பிரிவுக்கு என்று மட்டும் தற்சமயம் மருத்துவர்கள் இருந்து வரும் நிலையில் காது, மூக்கு, தொண்டை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு என்று மருத்துவர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும். நகரில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் பார்மலின் திரவம் கலக்கப்பட்டு விற்கப்படுவதை தடுப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது மாவட்ட தலைவர் சதக்கத்துல்லா உடனிருந்தார்.

    • தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும்.
    • 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பல்லடம் : 

    தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது. இதே போல, கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் உதவியாளர்கள் பணிக்கு வரவில்லை. கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மண்டல தலைவர்களுக்கு என சிறப்பு நிதி
    • மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களுக்கும் தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பீடு

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல கூட்டம், பலவஞ்சிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. இதற்கு 4-வது மண்டல தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ள நிலையில், மண்டல தலைவர்களுக்கு என சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

     அதன்படி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களுக்கும் தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டுகளுக்கும் ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வார்டு உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான நிதியை பெற்று, வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளலாம். முதல்முறையாக மண்டல தலைவர்களுக்கு என தனி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக்கூறி அதனை சரி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர்.கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல தலைவர் பத்மநாபன் உறுதி அளித்தார்.

    ×