search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலவரையற்ற"

    • தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும்.
    • 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பல்லடம் : 

    தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது. இதே போல, கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் உதவியாளர்கள் பணிக்கு வரவில்லை. கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு சமூக பேச்சுவார்த்தை மூலம் போனஸ் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்
    • இல்லை எனில் வருகிற 20 ம் தேதி முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தீபாவளி போனஸ், கூலி உயர்வு ஒப்பந்தம் சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும், அனைத்து கட்சி தொழில் சங்க கூட்டு குழுவிற்கும் போனஸ் ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படும்.

    கடந்த 2019 ம் வருடம் நடந்த மூன்றாண்டு ஒப்பந்த உடன்படிக்கை காலாவதியாகி விட்டதால் இந்த வருடம் புதிய ஒப்பந்தம் போட வேண்டும்.

    இது குறித்து தி.மு.க., தொழிற்சங்கமான எல்.பி.எப்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழில் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., ஆகிய தொழில் சங்கங்கள் மட்டும் போனஸ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளிக்கு 10 நாட்கள் தான் உள்ள நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் எந்த பேச்சுவார்த்தையும் தொடங்க வில்லை. மேலும் அனைத்து தொழில் சங்கமும் இணைந்து கூட்டு குழு ஏற்படுத்தி நோட்டீஸ் வழங்க வேண்டும் என முதலாளிகள் சங்கம் கூறி வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் ஏ.ஐ.டி.யு.சி., தொழில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக நேற்று வருகிற 19 ம் தேதிக்குள் சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு சமூக பேச்சுவார்த்தை மூலம் போனஸ் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் இல்லை எனில் வருகிற 20 ம் தேதி முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

    • மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி முதல் விசைத்தறிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்
    • அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தர கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கொங்கு பவர்லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி முதல் விசைத்தறிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் எனவும், இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தர கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பற்றி தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது:

    கொரோனவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு துன்பத்திற்கு ஆளானோம். மேலும் ஏற்கனவே நூல் விலை உயர்வால் தொழில் நசிந்து வருகிறது. இந்நிலையில் மின் கட்டண உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் முற்றிலுமாக இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் ராஜேந்திரன், உதவி தலைவர் குமாரசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×