search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டன ஆர்ப்பாட்டம்"

    • தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்.
    • பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு 28-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து விவாதித்து மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்தும்,

    காவிரி நீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தொடர்ந்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாநகர, நகர செயலாளர்கள், இந்நாள், முன்னாள் எம்.பி, எம்எல்ஏக்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக வந்து நேரடியாக தஞ்சை திலகர் திடலுக்கு வந்தார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

    • மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 29-ம் தேதி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

    காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட 'பணி வரம்புக்கு' அப்பாற்பட்டு, 28-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், கர்நாடகம் 2023-24ம் ஆண்டிற்கு காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத தி.மு.க. அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 29-ம் தேதி தஞ்சாவூர், திலகர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் விவசாயத் தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. நகர செயலாளர் கே.கே.ராசுக்குட்டி முன்னிலை வகித்தார்.
    • காங்கிரஸ் நகர தலைவர் வேலன்(எ)ரங்கசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரித்திடுக! பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிக்கும் மோடி அரசை கண்டித்தும், ஐ.நா. சபையே போரை நிறுத்து எனக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செயலாளர் கொளந்தசாமி தலைமை வகித்தார். தி.மு.க. நகர செயலாளர் கே.கே.ராசுக்குட்டி முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுக்கா செயலாளர் வி.ஏ.சரவணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.சுந்தரராஜு, காங்கிரஸ் நகர தலைவர் வேலன்(எ)ரங்கசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    • தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் சேலம் மாவட்ட துணை தலைவர் ஜான் பெர்ணான்டஸ் தலைமை வகித்தார்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் சேலம் மாவட்ட துணை தலைவர் ஜான் பெர்ணான்டஸ் தலைமை வகித்தார். மேட்டூர் வட்ட தலைவர் அம்மாச்சி கண்டன உரை ஆற்றினார். இதில் 100 நாள் வேலை ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும், பண்டிகை காலம் நெருங்குவதால் தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் மகாத்மா தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்டம் சம்பந்தமாக மாற்றுத்திறனாளிகளுக்காக குறை கூட்டம் நடத்த வேண்டும், வீடு, கழிப்பிடம் போன்ற துறை சார்ந்த பயனுள்ள திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் கோபால், பவுல்ராஜ், நடராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    சனாதான ஒழிப்பு மாநாட்டில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜயன் தலைமையில் இந்து சமய அறிநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை இட முயன்றதாக பா.ஜ.க.வினர் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு அருகே நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் வி.அன்பழகன் முன்னிலை வைத்தார். அனைவரையும் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.தீபா வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் சண்முகம், பொதுச் செயலாளர்கள் கவியரசு, தண்டபாணி, மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வர், நகர செயலாளர் குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாஜகவினர் தர்மராஜா கோவிலில் உள்ள இந்து அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பெண்கள் உள்ளிட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது சிவில் சட்டம் என்ற பெயரால் மதத்தை வைத்து மக்களை பிளவு படுத்துவது, மணிப்பூர், ஹரியானா கலவரத்தை தூண்டுவது, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை பழி வாங்குவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீரழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் தலைவர் ஹாஜி வருசை முகமது தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜகான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழ உறுப்பினர் ராஜன், செந்தில்வேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருவேல், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட மகளிரணி தலைவர் ராமலட்சுமி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அற்புத குமார், மனித நேய மக்கள் கட்சி இப்ராஹீம் மக்கள் ஒற்றுமை மேடை வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிப்பூர் இன மக்களின் கலவரத்தை தூண்டிவிட்டு இரண்டு இன மக்களின் வாழ்வாதா ரம் பாதிக்கும் வகையிலும் சிறுபான்மை சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் இரக்கமின்றி இருக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்தும், அதை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்தும்

    மற்றும் நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னத்து ரைக்கு நடந்த சாதிவெறி தாக்குதல் இது போன்ற செயல்கள் இனிமேல் எங்கும் நடைபெற கூடாது என்று வலியுறுத்தி விடுத லைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிவகாசி மாநகர மாவட்ட செயலாளர் ஜே.கே.செல்வின் ஏசுதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல துணைச் செய லாளர் வல்லரசு முன்னிலை யில், மாநில துணைச் செயலாளர் நவமணி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் செல்வகுமார், மகளிர் அணி மகளிர் அணி துணைச் செயலாளர் லூர் தம்மாள், நகரச் செயலா ளர் கள் தமிழரசி, செல்வ மீனா,

    மாவட்ட அமைப்பா ளர்கள் அசோக்குமார், லில்லி ராஜன், தமிழ்ச்செல் வன், பைக் பாண்டி, சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் தேவா நகரத் துணைச் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி சாமுவேல், சாமுராய்அமீர், மணி, அகஸ்தியன், குட்டி வளவன், ஆகாஷ், வெளிச்சம், பாண்டி மற்றும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர் கள் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மணிப்பூர் சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய அரசு

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர மும்முனை சந்திப்பில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மீரான் ஷா தலைமை தாங்கினார். கிராத் மன்சூர் அஹமத் ஹஜரத் ஓதினார். மாநில நிர்வாகி நவாப் ஜான் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் பீர் முகமது முன்னிலை வகித்தார்.

    மாவட்டச் செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ., கட்சி மாவட்டத் தலைவர் முகமது ரபிக், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் தலித் சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முடிவில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜாபீர் உசேன் நன்றி கூறினார்.

    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பவானி வட்டார கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    பவானி:

    பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பவானி வட்டார கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பவானி வட்டார தலைவர் பூங்கொடி தலைமை வகித்தார். செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் விஜயாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடியில் அதிகமான பணி சுகாதாரத் துறை பணிகள் செய்யப்ப டுகின்றன. அதனால் தான் அங்கன்வாடி ஊழியர்களு க்கு 42 வயதில் பிஎச்என் பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களுக்கு கிராமப்புற செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பதவி உயர்வை வழங்கிட வேண்டும். இல்லை என்றால் சுகாதாரத் துறை பணியை கண்டிப்பாக புறக்கணி ப்போம்.

    அதிகமாக உள்ள காலி பணிகளினால் ஒரு ஊழியர் இரண்டு மூன்று மையங்களில் பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. திட்டத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை உள்ளது.

    எனவே உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் பவானி வட்டார அளவில் பணியாற்றும் அங்கன்வாடி பணியா ளர்கள் மற்றும் உதவியா ளர்கள் என 50க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர் பர்கூர் சாலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் வட்டாரத் தலைவர் வி.கற்பகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் தமிழரசி வரவேற்புரை யாற்றினார்.

    கூட்டத்தில்1993 அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு மேற்பார்வை யாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் 5 ஆண்டு பணி முடிந்த குரு மைய ஊழியர்களுக்கும் 10 வருட பணி முடித்த உதவியாளர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,

    காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும்.

    ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும்.உள்ளி ட்ட பல்வேறு கோரி க்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் கொங்காடை, தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த தாமரைக்கரையில் பர்கூர் மலை ப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்த தை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோ ட்டையன் எம்.எல்.ஏ. தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அப்போது கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசியதாவது:

    அனைத்து கட்சியினரும் அ.தி.மு.க, உடைந்துவிட்டது என நினைக்கின்றனர். ஆனால் அப்படியில்லை. ஆகஸ்ட் 20-ந் தேதி நடக்கும் பொதுக்கூட்டம், அனை வரும் ஒன்றாகத்தான் உள்ள னர் என்பதை வெளிப்படு த்தும். அடித்தட்டு மக்கள் மேன்பட கல்வி ஒன்றால் தான் முடியும். அதை கவனத்தில் கொண்டு பள்ளி க்கல்வித்துறை அமைச்சர் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரமணீதரன், கோவை மண்டல தகவல் தொழி ல்நுட்பப்பிரிவு பொரு ளாளர் மோகன்குமார், அந்தியூர் நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், அந்தியூர் ஒன்றிய செயலாளர் தே வராஜ், துணை செயலாளர் எஸ்.ஜி. சண்முகானந்தம், மேற்கு மாவட்ட மாணவ ரணி செயலாளர் குருராஜ், சசி பிரபு, அத்தாணி அ.தி.மு.க. கவுன்சிலர் வேலு மருதமுத்து,

    ஒன்றிய ஜெயலலிதா பேரவை செய லாளர் ஓட்டல் கிருஷ்ணன், நகர இளைஞரணி செய லாளர் பார் மோகன், நகர பேரவை செயலாளர் பாலு சாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா சம்பத், பர்கூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையன், சவுந்தரராஜன்,

    நகைக்கடை அதிபர் கிருஷ்ணமூர்த்தி, முருக பிரகாஷ், கனகராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராயண்ணன், இ.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அலையோசை அந்தோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கொங்காடை, தாமரைக்கரை, தட்டக்கரை. பர்கூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிர்வாகிகள் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் முதலியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் - அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.செ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள், ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க நிர்வாகிகள் தி.மு.க. அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷம் எழுப்பினர்.

    இதில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணைமேயர் கே.சி. பழனிச்சாமி, மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.டி.தங்கமுத்து, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஸ், கோவிந்தராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், பெரியார் நகர் அவைத்தலைவர் மீன் ராஜா, வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி இயக்குனர் பொன்சேர்மன், முருகானந்தம், மாதையன், முன்னாள் கவுன்சிலர் கோபால், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி, சூரிய சேகர் உள்பட கலர் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவரது கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சில அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தின. குறிப்பிட்ட அவமதிக்கும் வார்த்தைக்காக வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யலாம் என்றும் கண்டித்தன.

    இதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாளை (புதன்கிழமை) பகல் 2 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்துகிறார். இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் கே.மங்காபிள்ளை, சி.எஸ்.கவுரி சங்கர், பி.தன்ராஜ், வக்கீல் வா.பிரபு, டி.இருதய நாதன், என்.ரமேஷ்குமார், செம்மை அ.தனசேகர், என்.சம்பத், சா.சாலமோன், வக்கீல். துர்வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    ×