என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union protested"

    • கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை.
    • அரசு சம்பளம் வழங்க உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    நீலகிரி

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் நேற்று மாலை கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறும்போது, அரசு பள்ளிக்கூடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 சம்பளமாக வழங்கப்படுகிறது. கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. அரசு சம்பளம் வழங்க உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றனர்.

    கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    கரூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தை மாநில துணைத்தலைவர் மு.செல்வராணி தொடங்கி வைத்தார்.

     மாவட்டச்செயலாளர் கெ.சக்திவேல் கோரிக்கை விளக்க உரையாற்றினார். 

    போராட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும்.

    சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.  

    ராணுவ தளவாட தொழிற்சாலை, ரயில்வே, ஆயுள் காப்பீடு, வங்கி, தொலைத்தொடர்பு  உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். 

    விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி பொது விநியோக முறையை சீர்படுத்திடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    ×