என் மலர்
நீங்கள் தேடியது "insistence"
- காவிரி தொடா்பான எந்த சிக்கலையும் விவாதித்து முடிவெடுக்கக்காவிரி மேலாண்மை ஆணையத்துக்குக் கட்டற்ற அதிகாரம் இருப்பதாகக் கூறினார்.
- ஒரு வேளை அந்த ஆணைய கூட்டம் நடந்தால் அதை புறக்கணிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஜூன் 17- ஆம் தேதி கூட்ட உள்ளதாகவும், அதில் கா்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவது பற்றி விவாதிக்கப்படும் என்றும் அதன் தலைவா் எஸ்.கே. ஹல்தா் உறுதிபடக் கூறியுள்ளாா்.ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து, விவாதிக்கப் பொருள் நிரலில் சோ்த்த போதெல்லாம் தமிழக அரசுப் பிரதிநிதிகள் அதை எதிா்த்து வந்ததால், அதை விவாதிக்க முடியாமல் போய்விட்டது.
இதுகுறித்து சட்டவிளக்கம் அறிய இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தை அணுகி விளக்கம் கேட்டதாகவும், அதன் சாா்பில் இந்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா அளித்த விளக்கத்தில், காவிரி தொடா்பானஎந்தச் சிக்கலையும் விவாதித்து முடிவெடுக்கக்காவிரி மேலாண்மை ஆணைய த்துக்குக் கட்டற்ற அதிகாரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதாகவும், அந்த அடிப்படையில் அக்கூட்டத்தில் மேக்கே தாட்டு அணை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஹல்தா் கூறியுள்ளாா்.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றத் தீா்ப்பில் உள்ளபடி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட ஆணையிடும் அதிகாரம் மட்டுமே உள்ளது. காவிரியில் புதிய நீா்த்தேக்கங்கள் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் துளியும் இல்லை.
தமிழக அரசு உடனடியாக இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உரியவாறு எதிா்ப்புத் தெரிவிக்க வேண்டும். இதனைச் சுட்டிக்காட்டி ஜூன் 17- ஆம் தேதி நடைபெறவுள்ள ஆணையக் கூட்டத்துக்கு இடைக்காலத் தடை ஆணை பெற வேண்டும். ஒருவேளை அந்த ஆணையக் கூட்டம் நடந்தால் அதைப் புறக்கணிக்க வேண்டும். புதுச்சேரியும், கேரளமும் புறக்கணிக்குமாறு வேண்டு கோள் வைக்க வேண்டும்.
இப்போதுள்ளகாவிரி ஆணையத்தைக் கலைத்து விட்டு, நடுநிலை தவறாத அலுவலா் தலைமையில், காவிரி நீரைப் பிரித்து வழங்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட புதிய மேலாண்மை ஆணையம் அமைத்திட இந்திய அரசை வலியுறுத்தும் வெகுமக்கள் போராட்டத்துக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.
- கோவில்களுக்கு நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
உடுமலை :
உடுமலையில் இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.உடுமலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மாநாட்டுக்கு முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.
மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.நாகுமணி மாதாஜி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட அமைப்பாளர் சேகர் வரவேற்றார்.மாநாட்டில், நலிவடைந்த கிராம கோவில் பூஜாரிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத்தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.பூசாரிகளுக்கு பூஜை செய்யும் கோவிலுக்கு அருகிலேயே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.அனைத்து கோவில்களுக்கும் நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
- புதிய மின் இணைப்பு பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும், மாதந்தோறும் மின் அளவீடு செய்ய வேண்டும்,
புதிய மின் இணைப்பு பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநகர செயலாளர் வடிவேலன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவர் சீனிவாசன், மாவட்டக்குழு நிர்வாகிகள் குருசாமி, சரவணன், வசந்தி, மாநகர குழு நிர்வாகிகள் அன்பு, கரிகாலன், ராஜன், கோஸ்கனி, அப்துல்நசீர், ராஜன், காதர்உசேன், அருண்குமார், வின்சி லாராணி, பைந்தமிழ், 35-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வைஜெயந்திமாலா முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
- சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது.
உடுமலை :
உடுமலை சுற்றுப்பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கம்பு, தினை, சோளம், கொண்டைக்கடலை உட்பட தானியங்கள் இப்பகுதியிலேயே உற்பத்தியாகி சந்தைகளுக்கு வரத்து சீராக இருந்து வந்தது.பல்வேறு காரணங்களால் தானிய சாகுபடியும் சிறு தானிய உணவுகள் பயன்பாடும் குறைந்தது.
கடந்த சில ஆண்டுகளாக சிறு தானிய உணவுகள் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இதனால் சிறு தானியங்களுக்கான, தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தி இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இது குறித்து சிறு வியாபாரிகள் கூறியதாவது:- உடல் நலனுக்கு நன்மை தரும், சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தரமான, அதேவேளையில் விலை குறைவாக தானியங்கள் கிடைப்பதில்லை.உடுமலை பகுதியில் இவ்வகை சாகுபடிகள் வெகுவாக குறைந்து விட்டது. முன்பு அறுவடை சீசன் சமயங்களில் நேரடியாக கிராமங்களுக்கு சென்று சிறு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வோம். தற்போது அந்நிலை இல்லை. உள்நாட்டு தேவைக்கு போதுமான அளவு தானியங்கள் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆர்வமிருந்தாலும் தேவையான விதைகள் கிடைப்பதில்லை.
வேளாண்துறை சார்பில் சிறப்பு திட்டங்களின் கீழ் மானியத்தில் சிறு தானிய விதைகளை வழங்க வேண்டும். பருவமழைகள் கைகொடுத்தால், இவ்வகை தானியங்கள் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பும் என்றனர்.
- தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம்.
- தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.
திருப்பூர் :
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிட அரசாங்கம் பெரியாரை பற்றி கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என பள்ளிகல்வி துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் , சுதந்திரம் வேண்டாம் என்றும் சொன்னவர் பெரியார். அவர் வரலாறை பாடத் திட்டத்தில் கொண்டு வர சதி திட்டம் உள்ளது.இதற்கு இந்து முன்னனி கண்டனங்களை தெரிவித்து கொள்கிறது . மேலும் , தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம். திருப்பூரில் 1200 இடங்களில் வைத்து வழிபட உள்ளோம். பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.
திருப்பூரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் , கோவையில் எச்.ராஜா போன்றோரும் கலந்து கொள்ள உள்ளனர் .வீடுகளில் விநாயகர் சிலைகள் வைப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.1983 ஆம் ஆண்டு முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது முதலே அ.தி.மு.க., தி.மு.க., இரண்டு அரசாங்கமும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை தடை செய்ய நினைத்தார்கள். அதனை தாண்டி தான் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் .
மேலும், பங்களாதேஷ் போன்ற நாட்டிலிருந்து வருபவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்கள். திருப்பூர் போன்ற ஊர்களில் மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். தமிழகம் குறிவைக்கப்பட்டு எந்நேரமும் கலவரம் வரும் என்ற சூழல் நிலவுகிறது. உளவுத்துறை சரிவர செயல்படுவதில்லை .இவ்வாறு அவர் கூறினார்.
- அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியை கண்டித்தும், விசாரணையில் இருந்து அவரை விடுவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தஞ்சாவூர்:
சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியை கண்டித்தும், விசாரணையில் இருந்து அவரை விடுவிக்க வலியுறுத்தியும் தஞ்சை ரெயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள்மாவட்ட தலைவரும்முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரு மான நாஞ்சி கி.வரதராஜன், முன்னாள் துணைதலைவர் கலைச்செல்வன், பொது க்குழு உறுப்பினர் ஜேம்ஸ், துணை தலைவர்கள்லட்சுமிநா ராயணன், வயலூர் ராமநாதன், மதுக்கூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜான்தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலிட பார்வையாளர் பாலசுப்பிரமணியம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷ ங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் ஹைஜாக்கனி, ஐ.என்.டி.யூ.சி. ஆரோக்கியசாமி, எஸ்.ஆர்.இ.எஸ். அசோக்ராஜன், மக்கள் நலப்பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், சந்திர சேகரன், கரந்தை கண்ணன், செந்தில் சிவக்குமார், அடைக்கலசாமி, மேலஉளூர் ஆறுமுகம், நாஞ்சி ராஜே ந்திரன், சாமிநாததேவர், ரெயில் வடிவேல், மாரிய ம்மனகோயில் குமாரசாமி, யாத்திரை கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






