search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insistence"

    • மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பை அகற்றி விபத்தை தடுக்க வலியுறுத்த வேண்டும்.
    • தடுப்பு சுவர் தேவையா என்பதை பரிசீலிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகு திக்குள் நுழையும் வழியில் பிரசித்தி பெற்ற மடவார் வளாகம் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையான மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை எல். ஐ.சி. அலுவலக திருப்பத்தில் மிகக் குறுகிய தேசிய நெடுஞ்சாலையாகவும், அதில் சென்டர் மீடியன் தடுப்புச் சுவரும் அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த தடுப்பு சுவர் அமைக்கப்படுவதற்கு முன் னால் பல ஆண்டுகளாக பெரும்பாலும் விபத்துக்கள் நடைபெற்றது இல்லை. ஆனால் இந்த தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதுக்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களில் 10-க்கும் மேற்கட்ட கனரக லாரிகள் தடுப்புச் சுவரில் மோதி திருப்ப முடியாமல் விபத்துக்களில் சிக்கியுள் ளன.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பாக அந்த திருப்பத்தில் தடுப்புச் சுவர் இருப்பது தெரியாமல் வெளி மாநி லத்திலிருந்து வந்திருந்த லாரி மோதி பலத்த சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த தடுப்பு சுவர் தேவையா என்பதை பரிசீலிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வலுத்து வருகி றது.

    அவ்வாறு தேவை எனில் ஒளிரும் விளக்குகளும், முக் கியமான திருப்பத்தில் தடுப்புச் சுவர் உள்ளது என்ற தெளிவான விளம்பர பலகையும் தேசிய நெடுஞ் சாலை நிர்வாகத்தால் கன ரக ஓட்டுநர்களின் பார்வை யில் படும்படி விளம்பரப்ப டுத்த வேண்டும். காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கடந்த இரண்டு ஆண்டுகளில் பரிசீலித்தால் இதன் விபத் துக்கள் குறித்த விவரம் தெரிய வரும்.

    தேசிய நெடுஞ்சாலையின் பராமரிப்பில் இருந்த இந்த சாலை ஆணையத்தால் தற் போது பராமரிக்கப்படு கிறது. ஆனால் சாலைகளில் குண்டும் குழியும் ஏற்படும் போது உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. கடும் நிர்ப்பந்தத்தால் ஒரு சில நேரங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் சாலை தற்காலிகமாக சரி செய்யப் படுகிறது. இந்த தொடர் விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அக்கறை செலுத்துவது இல்லை என்று குற்றச்சாட் டும் நிலவுகிறது.

    போதிய நிதி இல்லை, சாலை பணியாளர்கள் இல்லை என்ற காரணங்கள் கூறப்படுகிறது. மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலை யில் பெரியகுளம் கண்மாய் தடுப்புச் சுவர் உள்ளது. இந்த கண்மாய் கரை மூல மாக மழை காலங்களில் வடியும் மழை நீர் செல்வ தற்கு தேசிய நெடுஞ்சாலை யில் வடிகால் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை.

    கலெக்டர் பரிசீலனை

    இதனால் செங்கோட்டை பகுதியில் இருந்து மதுரை நோக்கி வரும் சாலையில் இருசக்கர பயணிகள் ஒதுங் குவதற்கு இடம் இல்லாமல் மழைநீர் தேங்கி கடந்த காலங்களில் விலைமதிப் பற்ற உயிர்கள் பறிபோகி யுள்ளது. எனவே விருதுநகர் மாவட்ட கலெக்டர் இப்பகு தியில் அமைக்கப்பட் டுள்ள தடுப்புச் சுவர் தேவைதானா என்பதை பரிசீலிக்கவும், தொடர் விபத்து நடக்காமல் நிரந்தர தீர்வு காணவும் உடனடி நடவடிக்கை எடுக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் சேவை மைய அமைப்பு சார் பில் அதன் செயல் தலை வர் பாலகிருஷ்ணன் கேட் டுக்கொண்டுள்ளார்.

    • புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    • வர்த்தக நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மின்துறை மின் கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளது. ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் சிறுகுறு, குடிசைத்தொழில் முனைவோர், வர்த்தக நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் 4 முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மின் கட்டணம் உயர்வால் பொதுமக்கள் மீள முடியாத சூழலில் மீண்டும் மின் கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது கண்டிக்கதக்கது. 

    எனவே விலைவாசி உயர்வால் வறுமையில் வாழும் மக்கள் மீது உயர்த்தி உள்ள மின் கட்டண உயர்வை முதல் அமைச்சர் ரங்கசாமி- ப.ஜனதா அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடலாடி ஒன்றியத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும்.
    • ஒன்றிய மேலாளர் முனியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

    சாயல்குடி

    கடலாடியில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஜெய ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, துணை சேர்மன் ஆத்தி, ஒன்றிய கவுன்சிலர் குமரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் முனியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். உதவியாளர் கணேசன் அறிக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் பனைக்குளம், மாரந்தை, ஓரிவயல், ஆகிய கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழைக்காலம் வரும் முன் மழைநீர் தேங்கும் இடங்களை தேர்வு செய்து மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வரத்து கால்வாய்களை சரி செய்து மழை நீர் கண்மாய்களுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டிச்சிகுளம், களநீர்மங்களம், தொட்டியபட்டி கிராமங்களில் பெண்கள் குளிப்பதற்கு படித்துறை அமைக்க வேண்டும், சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும், ஏர்வாடி 9-வது வார்டு பகுதியில் குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனங்குடி, கருங்குளம் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    சிறைக்குளம் கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை களை சீரமைக்க வேண்டும், மடத்தா குளம் கிராமத்தில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன் வைத்தனர். இதில் கவுன்சிலர்கள் மாயகிருஷ்ணன், முனியசாமி பாண்டியன், அம்மாவாசி, பிச்சை, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், வசந்தா கதிரேசன், ராமலட்சுமி, பெரோஸ் பானு ஜலில், குஞ்சரம் முருகன், பானுமதி ராமமூர்த்தி, செய்யதுஅலி பாத்திமா, முருகன் வள்ளி மலை ராஜ் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    • காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டம் உருவாக்க வேண்டும்.
    • வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டத்தில் வெள்ளக்கோவில் உள் வட்டம் அமைந்துள்ளது. இதில், 16 வருவாய் கிராமங்கள், 9 ஊராட்சிகள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் 3.40 லட்சம் பேரும், நகராட்சியில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் உள்ளனா். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 25க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் வங்கிகள், 89க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகள், 3 கல்லூரிகள் அமைந்துள்ளன.

    மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், 450க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், 10 பனியன் நிறுவனங்கள், 30 அரிசி ஆலைகள், 50-க்கும் மேற்பட்ட சமையல் எண்ணெய் ஆலைகள், 500 நிதி நிறுவனங்கள், 1,500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் கிடைத்து வருகிறது.

    காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என 1988-ம் ஆண்டிலேயே அன்றைய பேரூராட்சி மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட பல்வேறு வட்டங்கள் வெள்ளக்கோவிலை விட குறைந்த மக்கள்தொகையும், பரப்பளவும் கொண்டவையாக உள்ளன. ஆனால் வெள்ளக்கோவிலை தனி வட்டமாக அறிவிக்க போதிய மக்கள்தொகை, பரப்பளவு, வரி வருவாய் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருந்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    அதேபோல 1967-ல் உருவாக்கப்பட்ட வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியும் நீக்கப்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகளின் அலட்சியத்தால் சட்டப்பேரவை தொகுதி நீக்கப்பட்டதுடன், தனி வட்டம் கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    எனவே வெள்ளக்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம், மீண்டும் வெள்ளக்கோவில் சட்டப்பேரவை தொகுதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.   

    • புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் இயங்கும் படகு துறையில் கட்டணம் செலுத்தி சவாரி செய்வது வழக்கம்.
    • படகுகளில் 5 பேர் அளவில் ஏற்ற வேண்டிய இடத்தில் 15-க்கு மேற்பட்டவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் வருகிறது. அவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரை முகத்துவாரத்தில் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் இயங்கும் படகு துறையில் கட்டணம் செலுத்தி சவாரி செய்வது வழக்கம். இவர்கள் முறையான படகு சவாரியை செய்வதில்லை என்ற குற்றச் சாட்டு கடந்த சில வருடங்களாக உள்ளது.

    இந்நிலையில் காரைக்கால் கடற்கரை பகுதிக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை, அங்குள்ள மீனவர்கள் தங்கள் பைபர் படகில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தங்கள் படகுகளில் 5 பேர் அளவில் ஏற்ற வேண்டிய இடத்தில் 15-க்கு மேற்பட்டவர்களை ஏற்றி செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    • ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும்.
    • திருமங்கலம் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்தகூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி னர்.

    செக்கானூரணி பகுதிக்கு மின் மயானம் வேண்டாம். மயானம் செல்வதற்கான பாதை பட்டா இடத்தில் உள்ளதால் பொதுமக்கள் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்ததாக கவுன்சிலர் ஓம் ஸ்ரீ முருகன் தெரி வித்தார். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இதற்கான பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து வாகைகுளம் கவுன்சிலர் மின்னல் கொடி ஆண்டிச்சாமி கூறுகையில், வாகைகுளத்தில் உள்ள சுகாதார மையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். கொக்குளம் கவுன்சிலர் சிவபாண்டி பேசும்போது, மதுரை-போடி ரெயில் செல்லும் வழியில், செக்கானூரணியில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும். ஏற்கனவ ரெயில்வே நிலையம் இருந்தது. தற்போது காமராஜர் பல்கலைக்கழகம் கருமாத்தூர் ஆகிய 2 பகுதிகளிலும் புதிய ரெயில் நிலையங்கள் தொடங்கப் பட்டுள்ளது. எனவே செக்கானூர ணியிலும் ரெயில் நிலையம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு அனுப்பி வைக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

    சாத்தக்குடி ஒன்றிய கவுன்சிலர் பரமன் பேசுகையில், சாத்தங்குடி கிராம பகுதியில் சாக்கடை தூர்வாறுவது இல்லை. தெரு விளக்குகள் சரியாக எரிவது இல்லை. வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யப் படாமல் உள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன் இதை சரி செய்ய வேண்டும் என்ன பேசினார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி மற்றும் உச்சப்பட்டி செல்வம் ஆகியோர் பேசுகையில், மாநகராட்சி நகராட்சி கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் அரசு அறிவித்துள் ளது. இதேபோல் ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனை அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாண்டியன், சங்கர்கைலாசம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் பிரிவு மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத் திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மேலும், மாற்றுத்திற னாளிகள் மற்றும் அதிக வயது முதிர்ந்தோர் களுக்காக அமைக்கப் பட்டுள்ள சிறப்பு அமரு மிடத்திற்குச் சென்று, மாவட்ட கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி னார்கள்.

    இக்கூட்டத்தில், காரியா பட்டி வட்டம், வெற்றிலை முருகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொ.மாயகிருஷ்ணன் என்பவரின் வாரிசு தாரர்களான அழகம்மாள், ராமமூர்த்தி மற்றும் கற்பகவள்ளி ஆகியோர்க ளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காண்ட்ராக்டர் மற்றும் வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பிரேத பரிசோதனைக்காக உடலை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வழுதலைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 25) கொத்தனார்.

    இவர் வழுதலைகுடியில் இருந்து வடகால் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.

    எடமணல் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லியில் வழுக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுரேந்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விபத்தில் உயிரிழந்த சுரேந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

    அப்போது அங்கு திரண்ட சுரேந்திரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்துக்கு காரணமான கட்டுமான பணி காண்ட்ராக்டர் மற்றும் வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அந்த சாலையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து எடமணல் பகுதியில் இருந்து புறவழிச் சாலை பணிக்காக மண் ஏற்றிச் சென்ற லாரி தான் விபத்தை ஏற்படுத்தியது என்பதை கண்டறிந்து லாரி ஓட்டுநர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் கூறினர்.

    இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    அதன் பின்னர் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
    • அரசு துறைகளில் பயன்படுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறு த்தி ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தின ரத்து செய்து அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தி னை வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு, நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு ஆகியவர்களை உடனே வழங்கிட வேண்டும்.

    சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட பணியாளர்க ளுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

    ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். கரு வூலம் உள்ளிட்ட அரசு துறைகளில் பயன்ப டுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவாரூர் வட்டாட்சி யர் அலுவலகம்முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

    நெடுஞ்சா லைத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் தம்பிதுரை தலைமை வகித்தார்.

    திருவாரூர் மின்வா ரிய அலுவலகம்முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு கிளைச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    திருவாரூர்க லெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசு ஊழியர் சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    • இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.
    • கோவில்களுக்கு நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலையில் இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.உடுமலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மாநாட்டுக்கு முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.

    மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.நாகுமணி மாதாஜி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட அமைப்பாளர் சேகர் வரவேற்றார்.மாநாட்டில், நலிவடைந்த கிராம கோவில் பூஜாரிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத்தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.பூசாரிகளுக்கு பூஜை செய்யும் கோவிலுக்கு அருகிலேயே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.அனைத்து கோவில்களுக்கும் நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
    • புதிய மின் இணைப்பு பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும், மாதந்தோறும் மின் அளவீடு செய்ய வேண்டும்,

    புதிய மின் இணைப்பு பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநகர செயலாளர் வடிவேலன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவர் சீனிவாசன், மாவட்டக்குழு நிர்வாகிகள் குருசாமி, சரவணன், வசந்தி, மாநகர குழு நிர்வாகிகள் அன்பு, கரிகாலன், ராஜன், கோஸ்கனி, அப்துல்நசீர், ராஜன், காதர்உசேன், அருண்குமார், வின்சி லாராணி, பைந்தமிழ், 35-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வைஜெயந்திமாலா முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காவிரி தொடா்பான எந்த சிக்கலையும் விவாதித்து முடிவெடுக்கக்காவிரி மேலாண்மை ஆணையத்துக்குக் கட்டற்ற அதிகாரம் இருப்பதாகக் கூறினார்.
    • ஒரு வேளை அந்த ஆணைய கூட்டம் நடந்தால் அதை புறக்கணிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஜூன் 17- ஆம் தேதி கூட்ட உள்ளதாகவும், அதில் கா்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவது பற்றி விவாதிக்கப்படும் என்றும் அதன் தலைவா் எஸ்.கே. ஹல்தா் உறுதிபடக் கூறியுள்ளாா்.ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து, விவாதிக்கப் பொருள் நிரலில் சோ்த்த போதெல்லாம் தமிழக அரசுப் பிரதிநிதிகள் அதை எதிா்த்து வந்ததால், அதை விவாதிக்க முடியாமல் போய்விட்டது.

    இதுகுறித்து சட்டவிளக்கம் அறிய இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தை அணுகி விளக்கம் கேட்டதாகவும், அதன் சாா்பில் இந்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா அளித்த விளக்கத்தில், காவிரி தொடா்பானஎந்தச் சிக்கலையும் விவாதித்து முடிவெடுக்கக்காவிரி மேலாண்மை ஆணைய த்துக்குக் கட்டற்ற அதிகாரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதாகவும், அந்த அடிப்படையில் அக்கூட்டத்தில் மேக்கே தாட்டு அணை குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஹல்தா் கூறியுள்ளாா்.

    காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றத் தீா்ப்பில் உள்ளபடி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட ஆணையிடும் அதிகாரம் மட்டுமே உள்ளது. காவிரியில் புதிய நீா்த்தேக்கங்கள் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் துளியும் இல்லை.

    தமிழக அரசு உடனடியாக இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உரியவாறு எதிா்ப்புத் தெரிவிக்க வேண்டும். இதனைச் சுட்டிக்காட்டி ஜூன் 17- ஆம் தேதி நடைபெறவுள்ள ஆணையக் கூட்டத்துக்கு இடைக்காலத் தடை ஆணை பெற வேண்டும். ஒருவேளை அந்த ஆணையக் கூட்டம் நடந்தால் அதைப் புறக்கணிக்க வேண்டும். புதுச்சேரியும், கேரளமும் புறக்கணிக்குமாறு வேண்டு கோள் வைக்க வேண்டும்.

    இப்போதுள்ளகாவிரி ஆணையத்தைக் கலைத்து விட்டு, நடுநிலை தவறாத அலுவலா் தலைமையில், காவிரி நீரைப் பிரித்து வழங்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட புதிய மேலாண்மை ஆணையம் அமைத்திட இந்திய அரசை வலியுறுத்தும் வெகுமக்கள் போராட்டத்துக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×