என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

    சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியை கண்டித்தும், விசாரணையில் இருந்து அவரை விடுவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியை கண்டித்தும், விசாரணையில் இருந்து அவரை விடுவிக்க வலியுறுத்தியும் தஞ்சை ரெயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள்மாவட்ட தலைவரும்முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரு மான நாஞ்சி கி.வரதராஜன், முன்னாள் துணைதலைவர் கலைச்செல்வன், பொது க்குழு உறுப்பினர் ஜேம்ஸ், துணை தலைவர்கள்லட்சுமிநா ராயணன், வயலூர் ராமநாதன், மதுக்கூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜான்தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலிட பார்வையாளர் பாலசுப்பிரமணியம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷ ங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் ஹைஜாக்கனி, ஐ.என்.டி.யூ.சி. ஆரோக்கியசாமி, எஸ்.ஆர்.இ.எஸ். அசோக்ராஜன், மக்கள் நலப்பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், சந்திர சேகரன், கரந்தை கண்ணன், செந்தில் சிவக்குமார், அடைக்கலசாமி, மேலஉளூர் ஆறுமுகம், நாஞ்சி ராஜே ந்திரன், சாமிநாததேவர், ரெயில் வடிவேல், மாரிய ம்மனகோயில் குமாரசாமி, யாத்திரை கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×