search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Small grain cultivation"

    • சர்வதேச அளவில் அடுத்தாண்டு (2023) சிறு தானியங்களுக்கான ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது.
    • விவசாயிகளிடம் இருந்து, ஜி.எஸ்.டி., தொகையை மட்டும் வசூலித்துக் கொண்டு, இலவசமாக விதைகள் வழங்கப்படுகின்றன.

    அவிநாசி :

    சர்வதேச அளவில் அடுத்தாண்டு (2023) சிறு தானியங்களுக்கான ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறு தானிய சாகுபடி குறித்த விழிப்புணர்வு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அவிநாசி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து 3பிரசார வாகனங்கள் நகர, கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டன. பிரசார பயணம் துவக்க நிகழ்ச்சி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை தலைவர் சின்ன கண்ணன் தலைமையில் நடந்தது.

    இது குறித்து வேளாண்மை துறையினர் கூறியதாவது:- அவிநாசி வட்டாரத்தில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சிறு தானியப் பயிரான சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. கோ -32, கே-12 ரக விதைகளை பயன்படுத்துவதன் மூலம் ஏக்கருக்கு 1,000 கிலோ வீதம் மகசூல் கிடைக்கிறது.

    தீவனம் மற்றும் தானிய தேவைக்கும் சோளம் பயன்படுத்திக் கொள்ள முடியும். விவசாயிகளுக்கு கோடை உழவு மானியம், மானிய விலையில் நுண்ணூட்டம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    100 முதல் 250 ஏக்கர் பரப்பளவில் செயல் விளக்கத்திடல் அமைத்து விவசாயிகளிடம் இருந்து, ஜி.எஸ்.டி., தொகையை மட்டும் வசூலித்துக் கொண்டு, இலவசமாக விதைகள் வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள் சுஜி, சத்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் சின்னராஜ், வினோத், நாகராஜ், தினேஷ், சம்பத்குமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    • மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
    • சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கம்பு, தினை, சோளம், கொண்டைக்கடலை உட்பட தானியங்கள் இப்பகுதியிலேயே உற்பத்தியாகி சந்தைகளுக்கு வரத்து சீராக இருந்து வந்தது.பல்வேறு காரணங்களால் தானிய சாகுபடியும் சிறு தானிய உணவுகள் பயன்பாடும் குறைந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக சிறு தானிய உணவுகள் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இதனால் சிறு தானியங்களுக்கான, தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தி இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது.

    இது குறித்து சிறு வியாபாரிகள் கூறியதாவது:- உடல் நலனுக்கு நன்மை தரும், சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தரமான, அதேவேளையில் விலை குறைவாக தானியங்கள் கிடைப்பதில்லை.உடுமலை பகுதியில் இவ்வகை சாகுபடிகள் வெகுவாக குறைந்து விட்டது. முன்பு அறுவடை சீசன் சமயங்களில் நேரடியாக கிராமங்களுக்கு சென்று சிறு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வோம். தற்போது அந்நிலை இல்லை. உள்நாட்டு தேவைக்கு போதுமான அளவு தானியங்கள் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆர்வமிருந்தாலும் தேவையான விதைகள் கிடைப்பதில்லை.

    வேளாண்துறை சார்பில் சிறப்பு திட்டங்களின் கீழ் மானியத்தில் சிறு தானிய விதைகளை வழங்க வேண்டும். பருவமழைகள் கைகொடுத்தால், இவ்வகை தானியங்கள் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பும் என்றனர்.

    ×