என் மலர்
நீங்கள் தேடியது "Transport staff"
- 2020 முதல் தற்போது வரை போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை.
- தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் சீருடை இல்லாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்
கம்பம்:
தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவற்றின் ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 2 சீருடைகள் போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஆண்டுக்கு 2 செட் சீருடை அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் வழங்க வேண்டும்.
2016ம் ஆண்டு அப்போ தைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 4 சீருடைகள் வழங்கப்படும் என அறி வித்தார்.
அறிவித்த அடுத்த ஆண்டான 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் சீருடை வழங்கப்படவில்லை. 2019ம் ஆண்டு 1 செட் சீருடை மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் 2020 முதல் தற்போது வரை போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை.
இது குறித்து அதிகாரி களுக்கு பல முறை அறிவுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே சீருடை வழங்காத போக்குவரத்து கழகத்தை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் சீருடை இல்லாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் கோரிக்கையை அரசுக்கும், போக்குவரத்து கழகத்துக்கும் பல முறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே இன்று முதல் சீருடை இல்லாமல் கோரிக்கை அட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.
- தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும்.
- அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை:
போக்குவரத்து ஊழியர்களுக்கு முழுமையாக ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். டிரைவர்-கண்டக்டர் (டி அண்ட் சி) என நியமிக்காமல், இரு பணிகளுக்கும் தனித்தனியே ஊழியர்களை நியமிக்க வேண்டும். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும்.
வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொ.மு.ச. பேரவை பொருளாளர் கி.நடராஜன், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலர் க.பணீந்திர ரெட்டியை சந்தித்தனர்.
அப்போது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை டிசம்பர் 2-வது வாரத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், ஓய்வு கால பணப்பலன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். மேலும் அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், வரவு-செலவுக்கு இடையேயான வித்தியாசத் தொகை தொடர்பான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் சங்க நிர்வாகிகளிடம் போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
- 14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
- 80 மாத காலமாக பஞ்சப்படி வழங்கப்படாமல் உள்ளது.
தாராபுரம் :
போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்த போராட்ட விளக்க வாயிற்கூட்டம் தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்றது. கூட்டத்துக்கு தாராபுரம் மண்டல துணைத்தலைவர் டி.ராமசாமி தலைமை தாங்கி பேசுகையில்,14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
போக்குவரத்து கழகத்தின் வரவு-செலவு பற்றாக்குறையை அரசே ஏற்று பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். ஓய்வுபெறும் தொழிலாளியை வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஓய்வுபெற்ற தொழிலாளிக்கு பணப்பலன்களை உடனே வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 80 மாத காலமாக பஞ்சப்படி வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.






