search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னை விவசாயி"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வேளாண்மைத்துறை யின் மூலம் தென்னை விவ சாயிகளுக்கான குறைதீர்க் கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி, தென்னை விவசாயிகளுக்கு வேளாண் மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததுடன், மேலும் தென்னை விவசாயிகளிடம் அதிக மகசூல் பெறுவதற்கான மேற்கொள்ளப்படும் பணி கள் குறித்து கேட்டறிந்தார்.

    இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,300 ஹெக்டேர் பரப்பில் தென்னை விவசாயம் செய் யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் மழை குறைவு ஏற்படும் பகுதிகளில் மகசூல் குறைந்துள்ளன. மேலும் பிரதான தொழிலாக இருந்து வரும் தென்னை விவசாயிகளாகிய எங்க ளுக்கு ராமநாதபுரத்தில் வணிக வளாகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றனர்.

    தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவிக் கையில், தென்னை விவசா யிகளின் முக்கிய கோரிக் கையான வணிக வளாகம் அமைத்திட உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். சோலார் திட்டத்தில் உலர் கலவை அமைத்திட வேளாண் பொறியியல் துறையின் மூலம் 40 சதவீதம் அரசு மானிய திட்டத்தில் அமைத்துக் கொடுக்கப்படு கிறது. தேவையான தென்னை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.

    மேலும் தேங்காய் பருப்பு களை நல்ல முறையில் பதப்படுத்தி மதிப்பூட்டப் பட்ட பொருளாக விற்பனை செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும். நமது மாவட் டத்தில் 2 இடங்களில் தென்னை நாற்றங்கால் பண்ணை வேளாண்மை துறையின் மூலம் பராமரிக் கப்பட்டு வருகிறது. பொது வாக மண்டபம், திருப்புல் லாணி போன்ற பகுதிகளில் விலையும் தேங்காய்க்கு மக்களிடையே நல்ல வர வேற்பு உள்ளது.

    விவசாயிகள் வேளாண் மைத்துறை அலுவலர்களின் ஆலோசனைகளை பெற்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மகசூல் பெற்றிடும் வகையில் நன் றாக பராமரித்து பயன் பெற்றிட வேண்டும். தென்னை விவசாயிகளின் தேவைகளை சரிசெய்திட மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றார்.

    கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை மையச்செயலா ளர் ராஜா மற்றும் தென்னை விவசாயிகள், அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது.
    • பண்டிகை நாட்கள் வரும் சூழலில் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தேங்காய், கொப்பரை விற்பனையில் கிடைக்கும் பணத்தை வைத்து விவசாயிகள், வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.தென்னை விவசாயத்துக்கான இடுபொருட்கள் விலை, ஆட்கள் கூலி அனைத்தும் உயர்ந்துள்ள சூழலில் கடந்த, 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் விலை சரிந்தது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு மத்திய அரசு நிர்ணயித்த ஆதார விலையில், கிலோ 105.90 ரூபாய்க்கு கடந்த மாதம் வரை கொள்முதல் செய்யப்பட்டது.ஆனால் இதுவும் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றன. ஒரு விவசாயிடம் இருந்து ஒரு முறை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ததற்கு பணம் பட்டுவாடா செய்யவும் காலதாமதம் ஏற்பட்டது. கொள்முதல் நாட்கள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.இதுபோன்ற பிரச்னைகளால் கொள்முதல் செய்தும் விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்கவில்லை.

    தமிழகத்தில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது. தற்போது தொடர்ந்து பண்டிகை நாட்கள் வரும் சூழலில் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதற்கு நேர்மாறாக விலை குறைந்து வருவது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வியாபாரிகள், பெருநிறுவனங்கள், இடைத்தரகர்கள் கைகோர்த்து சிண்டிக்கேட் அமைத்து விலையை குறைப்பதாகவிவசாயிகள் கூறுகின்றனர்.

    காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி கடந்த வாரம், ஒரு டன் பச்சை காய் 24,500 ரூபாயாக இருந்தது. தற்போது 23 ஆயிரமாகவும், 26 ஆயிரம் ரூபாயாக இருந்த கருப்பு காய் 25 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.கடந்த சில வாரமாக ஒரு டின் (15 கிலோ) தேங்காய் எண்ணெய் 1,850 ரூபாயாக இருந்தது. நடப்பு வாரம் 1,770 ரூபாயாகவும் குறைந்துள்ளது. தேங்காய் பவுடர் கிலோ, 125 ரூபாயாக குறைந்துள்ளது. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:- பருவமழை தொடர்ந்து பெய்ததால் கொப்பரை உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது சீசன் நிறைவடையும் நிலையில் மார்க்கெட்டில் 50 சதவீதம் தேங்காய் வரத்து மட்டும் உள்ளது.ஆனால் கடந்த, 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சீசன் இல்லாத சூழலில், வரத்து குறைந்து விலை உயர்வது வாடிக்கை. ஆனால், 'சிண்டிக்கேட்' அமைத்து விலையை குறைக்கின்றனர்.அதே நேரத்தில் நுகர்வோருக்கு தேங்காய் எண்ணெய் விலை குறையவில்லை. விவசாயிகளை நசுக்கும் செயலாக இது கருதப்படுகிறது. ஆயில் நிறுவனங்கள், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளை லாபம் பார்க்க திட்டமிடுகின்றன.கடந்தாண்டு மார்க்கெட்டில் 95 - 100 ரூபாய் வரை விலை இருந்தது. அப்போதும், சிண்டிகேட்' அமைத்து 80 ரூபாயாக குறைத்தனர். ஆனால், வரத்து குறைவால் விலை மீண்டும் உயர்ந்தது. அதே நிலை மீண்டும் வரும் என எதிர்பார்க்கிறோம்.தற்போது, ஓணம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. இதனால் விலை உயரும் வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கு உயர்த்த வேண்டும்.

    திருப்பூர் :

    தேங்காய் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சியில்வருகிற 13ந் தேதி நடக்கிறது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் கூறியதாவது:-

    தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கு உயர்த்த வேண்டும். தமிழக அரசு அனைத்து தென்னை விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விவசாயிகளிடம் இருந்து தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவும், சத்துணவு திட்டத்தில் சமையலுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, கள் இறக்க அனுமதிக்க வேண்டும். தற்போது ஜூலை 31ந் தேதி வரை தேங்காய் கொள்முதலுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.விவசாய சங்கங்களின் கோரிக்கையை அடுத்து, ஆண்டு முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என வேளாண்மை துறை செயலாளர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை இது குறித்து எவ்வித அரசாணையும் வெளியாகவில்லை.எனவே உடனடியாக காலநீடிப்பு வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.

    தென்னையை தோட்டக்கலைத்துறைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.வருகிற 13-ந்தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்து வருகிறோம் என்றனர்.

    ×