என் மலர்
நீங்கள் தேடியது "Kadayam"
கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி லதா என்பவர் வீட்டிற்குள் அரிய வகை உயிரினமான உடும்பு குட்டி ஒன்று பதுங்கியிருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனப் பணியாளர்கள் அங்கு சென்று உடும்பை மீட்டு ஆம்பூர் பீட் வனப்பகுதிக்குள் விட்டனர். நடவடிக்கை எடுத்த கடையம் வனத்துறையினரை பொதுமக்களும் வன ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.
கடையம் வனச்சரகத்தில் உட்பட்ட மாதாபுரம் கிராமத்தில் விநாயகர் கோவிலில் மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக கடையம் வனச்சரக அலுவலர் பொறுப்பு உதவி வனப்பாதுகாவலர் ராதைக்கு கிடைத்தது. இதையடுத்து வனப் பணியாளர்ள் சம்பவ இடத்திற்கு சென்று நல்ல பாம்பை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வரி கொடுக்காமல் பணம் முழுவதையும் சந்தனகுமார் மது குடித்து காலி செய்துவிட்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
கடையத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் சந்தனகுமார்(வயது 22). இவருக்கு சமீபத்தில் மீனா(20) என்பவருடன் திருமணமானது.
சந்தனகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கடையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையத்தில் நடைபெற உள்ள ஒரு கோவில் கொடை விழாவிற்கு வரி செலுத்துமாறு ரூ.5 ஆயிரத்தை மீனா தனது கணவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வரி கொடுக்காமல் பணம் முழுவதையும் சந்தனகுமார் மது குடித்து காலி செய்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி, சந்தன குமாரை திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள்
- ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடையம்:
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பராமரிக்கப்பட்டு விவசாயி களுக்கு வழங்கப்படும் பழக்கன்றுகள் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன், ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன், ஊராட்சி செயலர் ஆணைமணி மக்கள் நல பணியாளர் மங்களம், தொழில் நுட்ப உதவியாளர் சிவனேசன் , வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர் ஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- அரசு டாக்டர் பரணி குமார், புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.
கடையம்:
கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன்
எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் வார்டுகள், நோயாளிகள் தங்குவதற்கான அறைகள் கட்டுவதற்கான வசதிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அரசு டாக்டர் பரணி குமார், ஓ.பன்னீர்செல்வம் அணி புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து, முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ், கடையம் ஒன்றிய செயலாளர் ராஜவேல், தொழிற்சங்க மண்டல தலைவர் சேர்மத்துரை, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதலியார்பட்டி அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
- மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பள்ளியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடையம்:
கடையம் யூனியனுக்கு உட்பட்ட முதலியார்பட்டி அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்காக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சட்டமன்ற நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கினார். இதேபோல் பொது நிதியிலிருந்து ரூ.23 லட்சம் ஒதுக்கிய நிலையில் நேற்று முதலியார்பட்டி அரசு பள்ளியினை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் விருதுநகர் மாவட்ட செயலாளர் கதிரவன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து, நெல்லை மாநகர பகுதி செயலாளர் காமராஜ், மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- டி.கே.பாண்டியன் தலைமையில் சிவபத்பநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
கடையம்:
தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடையம் ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் சிவபத்பநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
இதில் பெரும்பத்து பொன் ஷீலா பரமசிவன், ஏ.பி.நாடானூர் அழகுதுரை, சேர்வைகாரன்பட்டி ரவிச்சந்திரன், தெற்கு மடத்தூர் பிரேமராதா ஜெயம், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி, முதலியார்பட்டி அசன் பீவி மைதீன், ரவணசமுத்திரம் உசேன் மற்றும் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி தொழிலதிபர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் கோரிக்கை.
- கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று மண்பாண்ட தொழிலை நவீனப்படுத்துவது தொடர்பான பணிகள், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டல்புதூர் கிராம ஊராட்சி மற்றும் மேலாம்பூர் கிராம ஊராட்சிகளில் குளங்கள் தூர்வாரும் பணிகள், கடையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் , கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கடையம் கிராம ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினரின் ரூத் ஆடையகம், மற்றும் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார். அப்போது அரசுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் சென்றனர்.
- ஐந்தாங்கட்டளை ஊராட்சியில் கிராம சபைகூட்டம் முப்புடாதி பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
- வெங்கடாம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார்.
கடையம்:
கடையம் யூனியனுக்குட்பட்ட ஐந்தாங்கட்டளை ஊராட்சியில் கிராம சபைகூட்டம் முப்புடாதி பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய வட்டார வளர்ச்சி மண்டல அதிகாரி முன்னிலை வகித்தார்.இதில் துணைத்தலைவர் சுதன், 4-வது வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மற்றும் உறுப்பினர்கள் மாரிச்செல்வி, முருகேசன், சரோஜா , ஜெயபாரதி, கனகராசாத்தி,செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன.
வெங்காடம்பட்டி ஊராட்சி
கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி லட்சுமியூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு, வார்டு உறுப்பினர்கள் சரஸ்வதி, விஜயா, அம்பிகா , பொருள் செல்வி, விஜயகுமார், சங்கர்ராம், குருசாமி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜனதா, ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் மீனா, ரத்னா பாய், ராமேஸ்வரி, வேளாண்மை துறை கருப்பசாமி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மக்கள் நலபணியாளர், பணித்தள பொறுப்பாளர் உறுப்பினர் ,மகளிர் குழு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பாரத் நன்றி கூறினார்.






