search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாலாங்கட்டளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    நாலாங்கட்டளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    கடையம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ‘திடீர்’ ஆர்ப்பாட்டம்

    கடையம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ‘திடீர்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    கடையம்:

    அம்பை அருகே உள்ள அனந்தநாடார்பட்டி, பெரியசாமி பட்டி, இடை கால், பனையன்குறிச்சி, கடையம் அருகே உள்ள நாலாங்கட்டளை பகுதி களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று காலை நாலாங்கட்டளையில் உள்ள கல்குவாரி முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    கடையம் ஒன்றிய ச.ம.க. செயலாளர் பெரியசாமி, ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்து துணைத்தலைவர் சுதன் உள்பட 8-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    கல்குவாரிகளில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால் சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு கற்கள் தூக்கி வீசப்படுகிறது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படு கிறார்கள்.

    மேலும் குவாரி பகுதியில் ஏராளமான விவசாய நிலம் உள்ளதால் விவசாயிகளும் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என கூறினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பாக்குடி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×