search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் பகுதிகளில் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மண்பாண்ட தொழிலை நவீனபடுத்துவது தொடர்பாக கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்த காட்சி.




    கடையம் பகுதிகளில் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

    • ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் கோரிக்கை.
    • கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.

    ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று மண்பாண்ட தொழிலை நவீனப்படுத்துவது தொடர்பான பணிகள், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டல்புதூர் கிராம ஊராட்சி மற்றும் மேலாம்பூர் கிராம ஊராட்சிகளில் குளங்கள் தூர்வாரும் பணிகள், கடையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் , கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கடையம் கிராம ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினரின் ரூத் ஆடையகம், மற்றும் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார். அப்போது அரசுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் சென்றனர்.

    Next Story
    ×