search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officer inspects"

    • செந்துறையில் அரசு பள்ளிகளில் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவ-மாணவிகளின் தனித்திறனை வளர்க்கவேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எடுத்து கூறினார்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே கரந்தமலை பகுதியில் உள்ள பெரியமலையூர்அரசு நடுநிலைப்பள்ளியிலும், சின்னமலையூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், வலசை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலம் பாடங்களில் வாசிப்புத்திறன், கணிதப்பயிற்சி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். பின்னர் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். இந்த கல்வியாண்டில் மாணவ-மாணவிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

    அவர்களின் தனித்திறனை வளர்க்கவேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எடுத்து கூறினார். இந்த ஆய்வின் போது நத்தம் வட்டார கல்வி அலுவலர்கள் சுதா, எஸ்தர்ராஜம் மற்றும் பிற ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    • கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள்
    • ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பராமரிக்கப்பட்டு விவசாயி களுக்கு வழங்கப்படும் பழக்கன்றுகள் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன், ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன், ஊராட்சி செயலர் ஆணைமணி மக்கள் நல பணியாளர் மங்களம், தொழில் நுட்ப உதவியாளர் சிவனேசன் , வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர் ஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×