search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manoj Pandian MLA"

    • கீழப்பாவூர் ஒன்றியம் முத்துகிருஷ்ண பேரி கிராமத்தில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    தென்காசி:

    ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பாவூர் ஒன்றியம் முத்துகிருஷ்ண பேரி கிரா மத்தில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியி லிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதனை பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    இதில் ஓ. பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்புச் செயலாளர் ராதா, முத்து கிருஷ்ணபேரி பஞ்சாயத்து தலைவர் நாராயணன், துணைத் தலைவர் மணி கண்டன், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சத்யராஜ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு டாக்டர் பரணி குமார், புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

    கடையம்:

    கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன்

    எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் வார்டுகள், நோயாளிகள் தங்குவதற்கான அறைகள் கட்டுவதற்கான வசதிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    அரசு டாக்டர் பரணி குமார், ஓ.பன்னீர்செல்வம் அணி புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து, முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ், கடையம் ஒன்றிய செயலாளர் ராஜவேல், தொழிற்சங்க மண்டல தலைவர் சேர்மத்துரை, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதலியார்பட்டி அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
    • மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பள்ளியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்கு உட்பட்ட முதலியார்பட்டி அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்காக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சட்டமன்ற நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கினார். இதேபோல் பொது நிதியிலிருந்து ரூ.23 லட்சம் ஒதுக்கிய நிலையில் நேற்று முதலியார்பட்டி அரசு பள்ளியினை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் விருதுநகர் மாவட்ட செயலாளர் கதிரவன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து, நெல்லை மாநகர பகுதி செயலாளர் காமராஜ், மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., தென்காசி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.
    • திட்டத்தின் மூலம் 532.55 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தென்காசி:

    ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன், தென்காசி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீராணம் பெரிய குளத்திலிருந்து காசிக்குவித்தான் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வழங்கு கால்வாயில் இருந்து காவலாகுறிச்சி பெரியகுளம் மற்றும் அதன் கீழ் உள்ள சிறு குளங்களுக்கு தண்ணீர் வழங்க புதிய கால்வாய் அமைக்கும் பணிக்காக பொதுப்பணித்துறை மூலம் ஆய்வு பணிகள் நடைபெற்று, வடிவமைப்பு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு, திட்டத்தின் உத்தேச மதிப்பீடு ரூ.12 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, நிதி ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று நான் அறிகிறேன்.

    நிதி வழங்க...

    மேலும் கைவிடப்பட்ட இத்திட்டத்தின் மூலம் காவலாகுறிச்சி வெண்ணிலங்கபுரம், மருதம்புதூர், கடங்கநேரி, வெங்கடேஸ்வரபுரம், காடுவெட்டி, வடக்கு காவலாகுறிச்சி, கே.நவநீதகிருஷ்ணபுரம், நாச்சியார்புரம், ஏந்தலூர் ஆகிய கிராமங்களில் 532.55 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

    மேலும் மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் வானம் பார்த்த பூமியாக உள்ள இப்பகுதி விவசாய விளைநிலமாக மாறும். தற்போது மானாவாரி பகுதியாக உள்ள இந்த பகுதி மேற்கண்ட கால்வாய் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஆண்டிற்கு ஒருபோகம் விளையும் நெல் மகசூல் இரண்டு போகமாக விளைந்து விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவது மட்டுமல்லாமல் இப்பகுதியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை நம்பி வாழ்க்கையை நகர்த்தும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரமும் உயரும். மேலும் காவலாகுறிச்சி, கடங்கநேரி, காடுவெட்டி, வடக்கு காவலா குறிச்சி, கீழவீராணம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.

    எனவே மிக நீண்ட கால இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து திட்டத்திற்கு தேவையான நிதி ஒப்புதல் அளிப்பதற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×