என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Keezhapavoor"
- கீழப்பாவூர் ஒன்றியம் முத்துகிருஷ்ண பேரி கிராமத்தில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
தென்காசி:
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பாவூர் ஒன்றியம் முத்துகிருஷ்ண பேரி கிரா மத்தில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியி லிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதனை பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
இதில் ஓ. பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்புச் செயலாளர் ராதா, முத்து கிருஷ்ணபேரி பஞ்சாயத்து தலைவர் நாராயணன், துணைத் தலைவர் மணி கண்டன், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சத்யராஜ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜையை தொடர்ந்து 10 மணி வரை சுவாமி சயன சேவை நடைபெற்றது.
- 12-ந் தேதி ஆண்டாள் திருக்கல்யாணத்துடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 23-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை 21 நாட்கள் தினந்தோறும் அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை சுப்ரபாதம், கும்ப ஜபம், மா பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர்,தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனத்தால் அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சகஸ்ர நாம பாராயணம், ஆண்டாள் பாசுரம்,கோதா பிரபந்தம், சதுர்வேத பாராயணம் மற்றும் கீர்த்தனாவளி ஆகியன நடைபெற்று வருகிறது.
வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜையை தொடர்ந்து 10 மணி வரை சுவாமி சயன சேவை நடைபெற்றது. பகல் 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் கும்பாபிஷேகம், தீபாரதனை நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு, சுவாமி வீதி உலா, வேத பாராயணம், பஜனை கோலாட்டம், கும்மி ஆகியன நடைபெறுகிறது. 12-ந் தேதி ஆண்டாள் திருக்கல்யாணத்துடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்