search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Storage Tank"

    • கீழப்பாவூர் ஒன்றியம் முத்துகிருஷ்ண பேரி கிராமத்தில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    தென்காசி:

    ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பாவூர் ஒன்றியம் முத்துகிருஷ்ண பேரி கிரா மத்தில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியி லிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதனை பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    இதில் ஓ. பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்புச் செயலாளர் ராதா, முத்து கிருஷ்ணபேரி பஞ்சாயத்து தலைவர் நாராயணன், துணைத் தலைவர் மணி கண்டன், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சத்யராஜ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    ×