என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐந்தாங்கட்டளை ஊராட்சியில் கிராம சபைகூட்டம்
    X

    ஐந்தாங்கட்டளை ஊராட்சியில் கிராம சபைகூட்டம் நடைபெற்ற காட்சி.


    ஐந்தாங்கட்டளை ஊராட்சியில் கிராம சபைகூட்டம்

    • ஐந்தாங்கட்டளை ஊராட்சியில் கிராம சபைகூட்டம் முப்புடாதி பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
    • வெங்கடாம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட ஐந்தாங்கட்டளை ஊராட்சியில் கிராம சபைகூட்டம் முப்புடாதி பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய வட்டார வளர்ச்சி மண்டல அதிகாரி முன்னிலை வகித்தார்.இதில் துணைத்தலைவர் சுதன், 4-வது வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மற்றும் உறுப்பினர்கள் மாரிச்செல்வி, முருகேசன், சரோஜா , ஜெயபாரதி, கனகராசாத்தி,செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன.

    வெங்காடம்பட்டி ஊராட்சி

    கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி லட்சுமியூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு, வார்டு உறுப்பினர்கள் சரஸ்வதி, விஜயா, அம்பிகா , பொருள் செல்வி, விஜயகுமார், சங்கர்ராம், குருசாமி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜனதா, ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் மீனா, ரத்னா பாய், ராமேஸ்வரி, வேளாண்மை துறை கருப்பசாமி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மக்கள் நலபணியாளர், பணித்தள பொறுப்பாளர் உறுப்பினர் ,மகளிர் குழு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பாரத் நன்றி கூறினார்.

    Next Story
    ×