search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  பள்ளங்களை சீரமைக்க வேண்டும் - வாகன ஓட்டிகள் கோரிக்கை
    X

    குண்டும், குழியுமாக காணப்படும் செங்கோட்டை சாலை.


    செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் - வாகன ஓட்டிகள் கோரிக்கை

    • செங்கோட்டை கூட்டுறவு பால்பண்ணை அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
    • அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கூட்டுறவு பால்பண்ணை அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதனை நகராட்சி ஊழியர்கள் சீரமைக்கும் போது தோண்டப்படும் பள்ளங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    மேலும் அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    இச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரகணக்கான வாகனங்கள் சென்றுவரும் நிலையில் தற்போதும் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் சென்று வருகிறது.

    எனவே உயர் அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×