search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "construction"

    • பல்லடம்ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

    திருப்பூர்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம்ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.

    பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்புதூர்ஊராட்சி அல்லாளபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கணபதிபாளையம் வி.ஏ.டி.டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பார்க் கல்லூரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, திருப்பூர் சப்கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார்ஜெ ய்சிங் சிவக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • மேட்டூர் மீன்வளத் துறையின் உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப் படும் செய்யப்படும் எந்திரங்கள் அடங்கிய கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்தது.
    • ஐஸ் கட்டி உற்பத்தி எந்திரம் பழுதடைந்து இருந்ததால் கடந்த பல வருடங்களாக ஐஸ் கட்டி உற்பத்தி என்பது நடைபெறாமலே இருந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் பிடிக் கப்படும் மீன்களை பாது காத்து வைப்பதற்காக, மேட்டூர் மீன்வளத் துறை யின் உதவி இயக்குனர் அலு வலக வளாகத்தில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப் படும் செய்யப்படும் எந்தி ரங்கள் அடங்கிய கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், ஐஸ் கட்டி உற்பத்தி எந்திரம் பழுதடைந்து இருந்ததால் கடந்த பல வருடங்களாக ஐஸ் கட்டி உற்பத்தி என்பது நடைபெறாமலே இருந்தது. தற்போது இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு உதவி இயக்குனருக்கு புதிதாக அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.

    இதையடுத்து பழைய ஐஸ் கட்டி உற்பத்தி செய்யப் படும் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    • வளர்ச்சி திட்ட பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கு வேண்டும் என அறிவுறுத்தினார்.
    • ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணியை பார்வையிட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கிராம ஊராட்சி செயலகம் கட்டும் பணி, ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணி, அரசு வீடுகள் கட்டும்பணி, ஊராட்சியில் 600 குடும்பங்க ளுக்கு தனிநபர் உறிஞ்சிகுழி அமைக்கப்பட்டு வரும் பணி,கழிவு நீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி, அங்குள்ள சாவடிக்குளம் சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்டும் பணி உள்ளிட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இது குறித்து கலெக்டர் அதிகாரிகளிடம் கூறுகை யில், அனைத்து பணிகளையும் தரமாகவும் விரைந்தும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் ஒன்றிய ஆணையர் அருள்மொழி, பிடிஓ ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளர்கள்தாரா, பலராமன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அமலாராணி, ஊராட்சி மன்ற தலைவர் வனிதாமுரு கானந்தம் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல்சாத்தமங்கலத்தில் குடுவை ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
    • ரூ.1 கோடியே 85 லட்சத்தில் 5 மாதத்தில் தடுப்பணை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல்சாத்தமங்கலத்தில் குடுவை ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுவை வேளாண்துறை நிலத்தடி நீர் அதிகார அமைப்பு நிதி உதவியின் மூலம் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் 5 மாதத்தில் தடுப்பணை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    படுகை அணை கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக் குமார், பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், நிலத்தடி நீர் அதிகார அமைப்பு உறுப்பினர் செயலர் மனோகர், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன், உதவி பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் ஜெயராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல உறுவையாறு அன்பு நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இங்கு 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி யுடன் கூடிய குடிநீர் திட்டம் ரூ. 1 கோடியே 51 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதற்கான அடிக்கல்லை முதல்- அமைச்சர் ரங்கசாமி நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மரகதவல்லி கோவிலில் கற்கோவில் கட்டும் பணி தொடங்கியது.
    • இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள இருள்சிறை கிராமத்தில் மரகதவல்லி உடனுறை கடம்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கற்கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.

    முன்னதாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து வாத்தியங்கள் முழங்க புனித நீருடன் சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்தனர். அதனை தொடர்ந்து பூமிபூஜை விழா நடந்தது. புனித நீரை கற்கோவில் கட்ட இருக்கும் இடத்தில் ஊற்றி வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • சாலை அமைக்க பூமிபூைஜ நடந்தது.
    • ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சாலைப் பணி நடைபெறவுள்ளது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில் தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ரூபி, துணைத் தலைவர் சுலைமான், ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு, தலைமை மருத்துவர் அசோக், வார்டு உறுப்பினர் நாகநாதன், பெரியாள் என்ற முனியசாமி, மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதி நிதியில் இருந்து ரூ.4 லட்சமும், தி.மு.க. தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிக்குமார் கவுன்சில் நிதியில் இருந்து ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சாலைப் பணி நடைபெறவுள்ளது.

    • குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது
    • புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் முயற்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 கோடி 82 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகி யோர் குறிஞ்சிப்பாடியில் புதிதாக கட்டுமான பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சி இயக்குனர் கிரண் குராலா, திருச்சி மண்டல செயற்பொறியாளர் கருப்பையா, உதவி இயக்குனர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவகுமார், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், செயல் அலுவலர் கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், பேரூராட்சி துணைத் தலைவர் ராமர், நகர செயலாளர் ஜெய்சங்கர் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • மாதாந்திர ஓய்வூதி யம் பெறும் அடையாள அட்டை 10 பேருக்கு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி, எம்.எல்.ஏ அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் புதுவை அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் 93 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 32 லட்சத்து 70 ஆயிரத்திற்கான பணிஆணை வழங்கப்பட்டது.

    ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வீடு கட்டும் மானியம். 30 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சத்திற்கான பணி ஆணை வழங்க ப்பட்டது. தொடர்ந்து சமூக நலத்துறை மூலம் மாற்றுதிறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதி யம் பெறும் அடையாள அட்டை 10 பேருக்கு வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1கோடியே 92 லட்சம் ஆகும்

    இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அதிகாரி சவுந்த ர்ராஜன், உதவி பொறி யாளர் சுதர்சன் தொகுதி என். ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு சிந்தன் நகரில் இன்று பாதாள சாக்கடை கழிவுநீர் ஊற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாளசாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துள்ளனர். எனினும் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் கைவிடவில்லை.

    ஏற்கனவே கடந்த 2 வாரத்திற்கு முன்பு இங்கு பணிகள் மேற்கொள்ள வந்த மாநகராட்சி அதிகாரிகளை இப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து பணிகளை செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைப்பதற்கு குழிகள் தோண்டுவதற்காக இன்று மீண்டும் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.

    அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வராஜ், மாலதி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் இருந்தனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு ஒன்று திரண்டனர்.

    அவர்கள் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பணிகள் செய்ய விடாமல் தடுக்க சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளி, கோவில்கள் உள்ளன. திடீரென மாநகராட்சி சார்பில் குடியிருப்பு மத்தியில் பாதாள சாக்கடை கழிவுநீர்ஊற்று நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    இதற்கு நாங்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளோம். ஆனால் இன்று திடீரென மாநகர் சார்பில் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் வந்தனர். நாங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் அவர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இருந்தாலும் போலீசார் உதவியுடன் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

    இது சம்பந்தமாக எங்களிடம் எந்த ஒரு கருத்தும் இதுவரை கேட்கப்படவில்லை. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஊற்று நிலையம் அமைந்தால் எங்கள் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பள்ளி குழந்தைகள் இந்த வழியாகத்தான் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.

    இதனால் துர்நாற்றம், சுகாதார கெடு, நோய் தொற்று பரவ ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த திட்டம் அமைக்கப்படுவதற்கு பதில் ஊரின் ஒதுக்குப்புறமாக இந்தத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குமாரபாளையத்தில் தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தாலுகா அலுவலகம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தொகை வாடகையாக கொடுக்கப்பட்டு மக்கள் வரி பணம் வீணாகி வருகிறது. 

    மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகி கோப்புகள் வீணாகி வருகிறது என்று புகார் கூறப்பட்டது. இதைதொடர்ந்து புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.   இந்த பணி முழுமையாக முடிவடையவில்லை. இதனால் தாலுகா அலுவலக பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது. 

    இதுபற்றி  தாசில்தார் தமிழரசி கூறுகையில், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் கட்டுமான பணி பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  நிதி பற்றாக்குறையால் கட்டுமான பணி நிறைவுபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடரும். பணிகள் முழுமையாக முடிந்த பின் தாலுகா அலுவலகத்தை எங்களிடம் ஒப்படைப்பார்கள் என்றார்.

    இந்நிலையில் புதிய தாலுகா அலுவலகம் விரைவில் செயல்பட உள்ளது பற்றி  தகவல் தெரிந்ததும், தாலுகா அலுவலக பகுதியில் ஜெராக்ஸ், டீ, பேக்கரி, கடைகள் மற்றும் இ-சேவை மையங்கள் தொடங்க பலர் மும்முரமாக உள்ளனர்.
    இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    மானாமதுரை
     
    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய  பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். 

    இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான   பணிகள் தொடங்க ப்பட்டுள்ளது. யாருக்கும் பயன்தராத வகையில் ஊருக்கு வெளியே பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்கவேண்டியும், அனைத்து  கட்சியினர், உள்ளூர் அனைத்து ஜமாத்தார்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும்  போராட்டம் நடந்தது. 

    இதில்  பங்கேற்ற பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மக்கள் நலக் கூட்டமைப்பு தலைவர் சைபுல்லா, செயலாளர் துருக்கி ரபீக்ராஜா ஆகியோர் தலைமையில் இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் கூடி அங்கிருந்து  கோஷங்கள் எழுப்பியபடி பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். 

    அதன்பின்  பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டும், புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராகவும், கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.  போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து   வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

    இதுகுறித்து மக்கள் நல கூட்டமைப்பு தலைவர் சைபுல்லா கூறுகையில், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி யாருக்கும் பயன்தராத வகையில் இளையான்குடியில் ஊருக்கு வெளியே 4 கி.மீ தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்யவும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். 

    விரைவில் தேதி அறிவிக்காமலேயே  சென்னையில்   தலை மை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பஸ் நிலைய பிரசனைக்கு தீர்வு கிடைக்கும்வரை   போராட்டம் தொடரும் என்றார்.
    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆலங்குளம் பகுதியில் அணுகு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலங்குளம்:

    நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கி கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது.சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள், பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் உள்ளிட்டவை இந்த பகுதியில் அமைக்கப்படுகிறது. இதில் சில பாலங்கள் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படாமல் ராட்சத குழாய்களை கொண்டு அமைக்கப்படுகிறது.

    சாலையின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு மழைநீர் செல்ல குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.  ஆனால் ஆலங்குளம் மலைக்கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள குழாய்களின் இருபுறமும் பாதி அளவு மண் நிரம்பி உள்ளது.

     மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் மறு நடவு செய்யப்பட்ட நிலையில் அவைகளில் பெரும்பாலானவை பராமரிப்பின்றி பட்டு போகும் நிலையில் உள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ. 1.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும்  அவை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலையில் இருபுறமும் அணுகுசாலை இல்லாமல் இருப்பதால் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறினால் நேரடியாக சாலையிலேயே கால் வைக்கும் நிலை உள்ளது. எனவே பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஏனெனில் இந்த சாலை வழியே பயணிக்கும் வாகனங்கள் அதிவேகமாக செல்லக்கூடும். நகர் மற்றும் ஊர் பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்கள் இதை கவனிக்காமல் சாலையின் குறுக்காக சென்றால் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    இதேபோல் குழாய் பதிக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் பேரிகார்டுகள் உள்ளிட்ட எச்சரிக்கை பலகைகள் வைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     தற்போதைய திட்டப்படி சாலை அமைக்காமல் அணுகு சாலை அமைத்து நான்குவழிச் சாலை பணிகளை தொடரவேண்டும்.  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நான்குவழிச் சாலை பாலம், அணுகுசாலை, மரங்கள் மறு நடவு, பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    ×