search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட பணி"

    • செட்டி குளம் துார் வாரி, படித்துறை அமைத்திருக்கும் பணியை பார்வையிட்டார்.
    • பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றி யத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். விக்கிரவாண்டி ஒன்றி யத்தில் மாவட்ட கலெக்டர் பழனி ஒரத்துார் ஊராட்சி யில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ 12லட்சத்து 31ஆயிரத்து 400 மதிப்பீட்டில் செட்டி குளம் துார் வாரி, படித்துறை அமைத்திருக்கும் பணியை பார்வையிட்டார். 

    வேம்பி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிட பணியையும், ஏரிக்கரையில் ரூ16.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய பொது கிணறையும், அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெறும் பணிகளையும் பார்வை யிட்டு பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி னார்.

    இந்த ஆய்வின்போதுகூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், செயற் பொறி யாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி செயலாளர் ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, முபாரக் அலி பேக் , ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், முருகன் உட்பட அரசு பணி யாளர்கள் உடனிருந்தனர்.

    • கிழக்கு மண்டல புதிய அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • ரூ.4 கோடி மதிப்பீட்டில் அலுவலகம் கட்ட மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளன இதில் 1-வது மண்டலத்தில் கிழக்கு 1 முதல் 20 வார்டுகள் உள்ளன. இந்த மண்டலத் திற்கு தனி அலுவலகம் இல்லாமல் மதுரை ஆனை யூரில் உள்ள அரசு கட்டி டத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் கிழக்கு மண்டல அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மதுரை சர்வேயர்காலனி ரவுண்டானா அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் அலுவலகம் கட்ட மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    இதற்கு அரசு ஒப்புதல் கிடைத்த நிலையில் இன்று பூமிபூஜை நடந்தது. அமைச்சர் மூர்த்தி கலந்து ெகாண்டு கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வீரராக வன், கவுன்சிலர்கள், கார்த்திகேயன், ரோகிணி பொம்மை தேவன், தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட தலைவர் நேரு பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து செட்டிகுளம் ஊராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கிராம சாவடி கட்டும் பணிகளையும் அமைச்சர் ெதாடங்கி வைத்தார்.

    • பல்லடம்ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

    திருப்பூர்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம்ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.

    பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்புதூர்ஊராட்சி அல்லாளபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கணபதிபாளையம் வி.ஏ.டி.டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பார்க் கல்லூரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, திருப்பூர் சப்கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார்ஜெ ய்சிங் சிவக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கயல்விழி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
    • கட்டுமான பணிகளுக்கு தரமான சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு கட்ட வேண்டும்.

    தாராபுரம்

    தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிக்கு அரசு ரூ.12½ கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான கட்டுமான பணிகளை தாராபுரம் ஐ.டி.ஐ. வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர். அதன் முதற்கட்ட பணி தொடங்கி நடந்து வருகிறது. கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கயல்விழி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு கலைக்கல்லூரி கட்டிடம் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும் கட்டுமான பணிகளுக்கு தரமான சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு கட்ட வேண்டும். நீங்கள் கட்டும் கல்லூரி கட்டிடம் 100 ஆண்டுகளை கடந்தாலும் உறுதி தன்மையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது ஆர்.டி.ஓ.செந்தில் அரசன், தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, தாராபுரம் தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவருமான எஸ்.வி.செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் வக்கீல் கே.செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • ரேசன் கடைகள் கட்டிட பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள36 வார்டுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட வார்டுகளை உள்ளடக்கிய ஒரு ரேசன் கடை இருப்பதால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மேலும் ரேசன் கடை பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக, பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 21, 28 26 ஆகிய வார்டுகளில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் முன்னிலை வகித்தார்.

    இதில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பங்கேற்று ரேசன் கடை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இளநிலை பொறியாளர் சுரேஷ், 28-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி, 30-வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் மும்மூர்த்தி, நகர் மாணவரணி மகேந்திரன், 26-வது கவுன்சிலர் ராதா பூசத்துரை, சோலை செல்லப்பாண்டி, 21-வது வார்டு கவுன்சிலர் பிரபா சாலமன், வார்டு செயலாளர் வாணி குமார், நகர் மீனவரணி அமைப்பாளர் நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    • ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை உயர்ந்த மலைப் பகுதியில் 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக உள்ளது.

    இந்நிலையில் புங்கனூர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்படுத்த ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    பின்பு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நமக்கு நாமே திட்டத்தின் மூலம் நேற்று ஏலகிரி புங்கனூர் பகுதியில் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க ஊராட்சி மன்றம் சார்பில் பணியை தொடங்கி வைத்தார்.

    ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஜவ்வாது மலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிவனேசன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.7.43 லட்ச மதிப்பில் கட்டப்படுகிறது
    • பூமி பூஜை போடப்பட்டது

    சோளிங்கர்:

    சோளிங்கர் ஒன்றியம் வாங்கூர் ஊராட்சியில் எடையந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் புதிய சமையலறை ரூ.7.43 லட்ச மதிப்பில் கட்டும் பணிக்காக பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.

    வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமை தாங்கினார் சோளிங்கர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மதிவாணன் கரடிகுப்பம் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் சோளிங்கர் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கனகராஜ் சமூக சேவகர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ரமேஷ் கோதண்டராமன் பிரபு மற்றும் இடையதாங்கல் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    • அரியலூரில் ரூ.7.80 கோடியில் மத்திய பேருந்து நிலைய கட்டிட பணிகள் விரைவில் தொடங்குகிறது
    • கடைகளை காலி செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமாக திகழும் அரியலூர் 2010 முதல் 2-ம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகின்றது. 18 வார்டுகளை கொண்ட நகராட்சியின் பரப்பளவு 7.62 சதுர கிலோ மீட்டர் ஆகும். 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இங்கு 1975-ம் ஆண்டு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக் கப்பட்டது.சுமார் 25 பேருந்து வழித்தடங்களில் தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வரு–கின்றது. சுமார்30 கி.மீ. சுற்றளவு பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.

    48 ஆண்டுகால பழைய கட்டிடங்கள் என்பதால் மழைக்காலங்களில் பயணி கள் நனைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி வெயில் காலங்களில் ஒதுங்ககூட போதுமான வசதிகள் இல்லாமல் இருந்தது. இங்கு சுமார் 60 கடைகள் ஏலம் விடப்பட்டாலும், 100 கடை–கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் பய–ணிகள், பொதுமக்கள் நிற்கவோ, ஒதுங்கவோ மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே மத்திய பேருந்து நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அரியலூ–ரில் மத்திய பேருந்து நிலை–யம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக ரூ.7.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான டெண்டர் பணிகளும் முடிவ–டைந்த நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளது.இதற்கிடையே தற்போது பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் கடை–களை காலி செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நோட் டீஸ் வழங்கியுள்ளது. அது–வரையில் தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர்-திருச்சி பூறவழிச்சாலை தனியார் இடத்தில் செயல்படவுள்ளது. கட்டு–மான பணிகள் முடிந்தவுடன் டெண்டர் மூலம் கடைகள் ஏலம் விடப்படும்.

    அரியலூர் நகரில் நவீன வசதிகளுடன் மத்திய பேருந்து நிலையம் அமைக் கப்படுவதற்கு பொது–மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நக ராட்சி நிர்வாகம் சார்பில் கேட் டுக்கொள்ளப்பட்டு உள் ளது. அரியலூர் நகரில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு அரியலூர் நகரரை அழகுபடுத்தும் பணியிலும் நகராட்சி நிர் வாகம் ஈடுபட்டுள்ளது.மத்திய பேருந்து நிலை–யத்தின் கட்டுமான பணி–களுக்கான பூமி பூஜை நடைபெற்றது. வாரசந்தை பூதிய கட்டுமான பணிகளும் தொடங்கியுள்ளதால் அங்கு பழைய கட்டிடங்களை ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி துவங்கியது.


    • விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • 75 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த துணை அஞ்சலகம் மூடப்பட்டு வாடகை கட்டிடத்தில் இயக்கி வருகிறது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல்நிலையம் முன்பு 75 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த துணை அஞ்சலகம் பழுதானதால் பராமரிப்பு காரணங்களுக்காக மூடப்பட்டு சிறிது தொலை வில் உள்ள ஆரணி விளையில் வாடகை கட்டிடத்தில் முதல் மாடியில் இயக்கி வருகிறது.

    இதனால் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள், வயதனாவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விரைவாக தபால் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் பொது மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதனையடுத்து குலசேகரம் வருகை தந்த விஜய் வசந்த் எம்.பி. துணை அஞ்சலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் தபால் நிலையம் சென்று அஞ்சல் அதிகாரியை சந்தித்து காரணங்களை கேட்டு அறிந்தார்.

    பின்பு அங்கிருந்து தொலைபேசி வாயிலாக தபால் துறை மேல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறிந்து விரைவாக பணிகள் முடிக்க கேட்டுக்கொண்டார். 

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், வட்டார தலைவர்கள் அருள்ராஜ், சதிஷ், குலசேகரம் நகர தலைவர் விமல்செர்லின், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி, வேர் கிளம்பி பேரூராட்சி தலைவர் சுதிர், வார்டு கவுன்சிலர்கள் ஸ்டெல்லா, ருபின்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பால் கொள்முதல் நிலையம்.
    • துவக்கப்பள்ளியின் பவள விழா மற்றும் காலை உணவு திட்டம் உள்ளரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பால் கொள்முதல் நிலைய கட்டிட பணி துவக்க விழா நடைபெற்றது.

    புதிய பால் கொள்முதல் நிலைய கட்டிட பணியை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். பிறகு சிலம்பகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் பவள விழா மற்றும் காலை உணவு திட்டம் உள்ளரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி, நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவி கவிதா.திமுக பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம், வெள்ளகோவில் திமுக ஒன்றிய செயலாளர் மோளக்கவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன். முன்னாள் நகரச் செயலாளர் கே.ஆர். முத்துகுமார், இளைஞர் அணி ஆதவன் ஜெகதீஷ் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள், பாசன சபை தலைவர்கள் கலந்து கொண்டனர்.சிலம்பகவுண்டன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த பள்ளி பவள விழா நிகழ்ச்சியில் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேசசுதர்சன். பச்சாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.வரதராஜன் ,ஆணையாளர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி கலந்து கொண்டு கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.
    • காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கிணற்றை சுற்றி ரூ.2 லட்சத்தில் தடுப்பு கம்பி வேலி அமைத்தல் பணிகளை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி தொடங்கிவைத்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021 -22லிருந்து ரூ.36 லட்சத்தில் இரு புதிய வகுப்பறைக்கான கட்டிடப்பணிக்கான பூமி பூஜை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    அருகேயிருந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.36 லட்சத்தில் 2 புதிய வகுப்பறைக்கான கட்டிடப்பணிகளை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ க.சிவகாமசுந்தரி தொடங்கி அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாணவிகள் பேருந்து வசதி கேட்டு எம்எல்ஏ க.சிவகாமசுந்தரியிடம் மனு அளித்தனர்.

    கரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன், தலைமை ஆசிரியை ம.கலையரசி, உதவி ஆசிரியர் சுதா, தாந்தோணி ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதா, தாந்தோணி ஒன்றிய திமுக பொறுப்பாளர் எம்.ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, பாகநத்தம் மற்றும் காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ.2 லட்சத்தில் அமைக்கப்பட்ட 2 ஸ்மார்ட் (திறன்) வகுப்பறைகள் திறந்து வைத்து, காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கிணற்றை சுற்றி ரூ.2 லட்சத்தில் தடுப்பு கம்பி வேலி அமைத்தல் பணிகளை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி தொடங்கிவைத்தார்.

    • கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் கட்டிட பணிகள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த 2 மாதத்தில் 35 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது பிளம்பிங் தொழிலுக்கு தேவையான குழாய்கள், பைப்புகள், மின்சாதன பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன. கடந்த 2 மாதத்தில் 35 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளன.

    கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பல இடங்களில் வீட்டின் உரிமை யாளர்கள் பணிகளை நிறைவு செய்ய முடியாமல் பரிதவிப்பில் உள்ளனர்.

    கடந்த 2 மாதமாக விலையேற்றம் தொடர்ந்து வருவதால் புதிய வீடு கட்ட திட்டமிட்டவர்களும் பணியினை தொடங்கு வதற்கு தயங்கி வருகின்றனர். கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பொறியாளர்கள், பிளம்பர்கள், மக்கள் பரிதவிக்கின்றனர்.

    இந்த விலை உயர்வால் வீடு கட்டுவது பலருக்கு கனவாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலை சார்ந்துள்ள கொத்தனார்கள், பிளம்பர்கள், எலெக்ட்ரி ஷியன் தொழில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கட்டிட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×