search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் தபால் நிலைய கட்டிட பணியை உடனே தொடங்க வேண்டும்
    X

    விஜய்வசந்த் எம்.பி. தபால் நிலையத்தில் ஆய்வு செய்த காட்சி.

    குலசேகரம் தபால் நிலைய கட்டிட பணியை உடனே தொடங்க வேண்டும்

    • விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • 75 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த துணை அஞ்சலகம் மூடப்பட்டு வாடகை கட்டிடத்தில் இயக்கி வருகிறது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல்நிலையம் முன்பு 75 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த துணை அஞ்சலகம் பழுதானதால் பராமரிப்பு காரணங்களுக்காக மூடப்பட்டு சிறிது தொலை வில் உள்ள ஆரணி விளையில் வாடகை கட்டிடத்தில் முதல் மாடியில் இயக்கி வருகிறது.

    இதனால் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள், வயதனாவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விரைவாக தபால் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் பொது மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதனையடுத்து குலசேகரம் வருகை தந்த விஜய் வசந்த் எம்.பி. துணை அஞ்சலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் தபால் நிலையம் சென்று அஞ்சல் அதிகாரியை சந்தித்து காரணங்களை கேட்டு அறிந்தார்.

    பின்பு அங்கிருந்து தொலைபேசி வாயிலாக தபால் துறை மேல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறிந்து விரைவாக பணிகள் முடிக்க கேட்டுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், வட்டார தலைவர்கள் அருள்ராஜ், சதிஷ், குலசேகரம் நகர தலைவர் விமல்செர்லின், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி, வேர் கிளம்பி பேரூராட்சி தலைவர் சுதிர், வார்டு கவுன்சிலர்கள் ஸ்டெல்லா, ருபின்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×