search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Work"

    • செட்டி குளம் துார் வாரி, படித்துறை அமைத்திருக்கும் பணியை பார்வையிட்டார்.
    • பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றி யத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். விக்கிரவாண்டி ஒன்றி யத்தில் மாவட்ட கலெக்டர் பழனி ஒரத்துார் ஊராட்சி யில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ 12லட்சத்து 31ஆயிரத்து 400 மதிப்பீட்டில் செட்டி குளம் துார் வாரி, படித்துறை அமைத்திருக்கும் பணியை பார்வையிட்டார். 

    வேம்பி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிட பணியையும், ஏரிக்கரையில் ரூ16.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய பொது கிணறையும், அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெறும் பணிகளையும் பார்வை யிட்டு பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி னார்.

    இந்த ஆய்வின்போதுகூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், செயற் பொறி யாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி செயலாளர் ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, முபாரக் அலி பேக் , ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், முருகன் உட்பட அரசு பணி யாளர்கள் உடனிருந்தனர்.

    ×